மேலும் அறிய

Manipur Violence: மணிப்பூரில் மற்றொரு வெறிச்செயல்.. பாலியல் வன்கொடுமை செய்ய கும்பலை தூண்டிவிட்ட பெண்கள்..! உச்சகட்ட கொடூரம்..!

கார் ஷெட்டில் இருந்த இரண்டு பெண்களையும், சில பெண்களுடன் சேர்ந்து வந்த ஒரு கும்பல் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

மணிப்பூரில் பழங்குடி பெண்களுக்கு நேர்ந்த கொடூரம் நாட்டையே உலுக்கி வருகிறது. அங்கு, இனக்கலவரம் இரண்டு மாதங்களுக்கு மேல் நடந்து வந்தாலும் பிரதமர் மோடி, இதுகுறித்து கருத்து தெரிவிக்காமல் அமைதி காத்து வந்தார். ஆனால், மக்கள் மத்தியில் மணிப்பூர் சம்பவம் தொடர்பான வீடியோ ஏற்படுத்திய தாக்கம், அவரை வாய் திறந்து கண்டிக்க வைத்தது.

மனித நேயத்தை கேள்விக்குள்ளாக்கும் சம்பவங்கள்:

இந்த ஒரு சம்பவம் ஏற்படுத்திய தாக்கமே இன்னும் அடங்காத நிலையில், மனித நேயத்தை கேள்விக்குள்ளாக்கும் பல சம்பவங்கள் மணிப்பூரில் நடந்திருப்பதாக தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது. குறிப்பாக, பழங்குடி பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வமாக அழைத்து சென்று, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதே நாளில், மேலும் இரண்டு இளம் பெண்கள் கொடூரமாக தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

பழங்குடி பெண்களை ஊர்வலமாக அழைத்து சென்ற இடத்தில் இருந்து 40 கிமீ தூரத்தில் உள்ள இம்பால் கிழக்கு மாவட்டத்தில்தான் அந்த மற்றொரு கொடூர சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட 21 மற்றும் 24 வயதுடைய பெண்கள், கொனுங் மாமாங் பகுதியில் உள்ள கார் ஷெட் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளனர்.

கார் ஷெட்டில் இருந்த இரண்டு பெண்களையும், சில பெண்களுடன் சேர்ந்து வந்த ஒரு கும்பல், தாக்கியதாகக் கூறப்படுகிறது. சம்பவத்தை நேரில் பார்த்த பாதிக்கப்பட்ட பெண்ணுடன் பணிபுரிந்து வந்த நபர், இதுகுறித்து கூறுகையில், "பழங்குடிகளை அறைக்குள் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்யும்படி கும்பலில் இருந்த பெண்கள், ஆண்களை தூண்டினர்.

சம்பவத்தன்று நடந்தது என்ன?

இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் அறைக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். விளக்குகள் அணைக்கப்பட்டன. மேலும், அவர்கள் அலறுவதைத் தடுக்க துணிகளால் வாயை மூடினர். சுமார் ஒன்றரை மணி நேரம், பழங்குடி பெண்களை அவர்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கினர்.

பின்னர், பாதிக்கப்பட்டவர்கள் வெளியே இழுத்துச் செல்லப்பட்டு, அருகில் உள்ள ஆலைக்கு அருகில் வீசப்பட்டனர். அவர்களின் ஆடைகள் கிழிக்கப்பட்டிருந்தன. தலைமுடி வெட்டப்பட்டது. அவர்களின் உடல்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்தன" என்றார்.

அச்சம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தார், இதுகுறித்து புகார் அளிக்காமல் இருந்துள்ளனர். இருப்பினும், பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரின் தாயார், மே 16 ஆம் தேதி சைகுல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

அந்த புகாரில், "எனது மகளையும் மற்றொரு பெண்ணையும் பாலியல் வன்கொடுமை செய்து, கொடூரமாக சித்திரவதை செய்த் பின்னர் கொடூரமாக கொன்றனர். அவர்களின் சடலங்கள் இன்னும் மீட்கப்படவில்லை. மேலும், அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதும் இன்றுவரை தெரியவில்லை. இந்த குற்றத்தில் 100 முதல் 200 பேர் வரை ஈடுப்பட்டுள்ளனர்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
ABP Premium

வீடியோ

Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
All-New Tata Punch Turbo: வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
The AQI Illusion: காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
Trump's Next Target: ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
Embed widget