மேலும் அறிய

Manipur Violence: மணிப்பூரில் மற்றொரு வெறிச்செயல்.. பாலியல் வன்கொடுமை செய்ய கும்பலை தூண்டிவிட்ட பெண்கள்..! உச்சகட்ட கொடூரம்..!

கார் ஷெட்டில் இருந்த இரண்டு பெண்களையும், சில பெண்களுடன் சேர்ந்து வந்த ஒரு கும்பல் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

மணிப்பூரில் பழங்குடி பெண்களுக்கு நேர்ந்த கொடூரம் நாட்டையே உலுக்கி வருகிறது. அங்கு, இனக்கலவரம் இரண்டு மாதங்களுக்கு மேல் நடந்து வந்தாலும் பிரதமர் மோடி, இதுகுறித்து கருத்து தெரிவிக்காமல் அமைதி காத்து வந்தார். ஆனால், மக்கள் மத்தியில் மணிப்பூர் சம்பவம் தொடர்பான வீடியோ ஏற்படுத்திய தாக்கம், அவரை வாய் திறந்து கண்டிக்க வைத்தது.

மனித நேயத்தை கேள்விக்குள்ளாக்கும் சம்பவங்கள்:

இந்த ஒரு சம்பவம் ஏற்படுத்திய தாக்கமே இன்னும் அடங்காத நிலையில், மனித நேயத்தை கேள்விக்குள்ளாக்கும் பல சம்பவங்கள் மணிப்பூரில் நடந்திருப்பதாக தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது. குறிப்பாக, பழங்குடி பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வமாக அழைத்து சென்று, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதே நாளில், மேலும் இரண்டு இளம் பெண்கள் கொடூரமாக தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

பழங்குடி பெண்களை ஊர்வலமாக அழைத்து சென்ற இடத்தில் இருந்து 40 கிமீ தூரத்தில் உள்ள இம்பால் கிழக்கு மாவட்டத்தில்தான் அந்த மற்றொரு கொடூர சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட 21 மற்றும் 24 வயதுடைய பெண்கள், கொனுங் மாமாங் பகுதியில் உள்ள கார் ஷெட் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளனர்.

கார் ஷெட்டில் இருந்த இரண்டு பெண்களையும், சில பெண்களுடன் சேர்ந்து வந்த ஒரு கும்பல், தாக்கியதாகக் கூறப்படுகிறது. சம்பவத்தை நேரில் பார்த்த பாதிக்கப்பட்ட பெண்ணுடன் பணிபுரிந்து வந்த நபர், இதுகுறித்து கூறுகையில், "பழங்குடிகளை அறைக்குள் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்யும்படி கும்பலில் இருந்த பெண்கள், ஆண்களை தூண்டினர்.

சம்பவத்தன்று நடந்தது என்ன?

இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் அறைக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். விளக்குகள் அணைக்கப்பட்டன. மேலும், அவர்கள் அலறுவதைத் தடுக்க துணிகளால் வாயை மூடினர். சுமார் ஒன்றரை மணி நேரம், பழங்குடி பெண்களை அவர்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கினர்.

பின்னர், பாதிக்கப்பட்டவர்கள் வெளியே இழுத்துச் செல்லப்பட்டு, அருகில் உள்ள ஆலைக்கு அருகில் வீசப்பட்டனர். அவர்களின் ஆடைகள் கிழிக்கப்பட்டிருந்தன. தலைமுடி வெட்டப்பட்டது. அவர்களின் உடல்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்தன" என்றார்.

அச்சம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தார், இதுகுறித்து புகார் அளிக்காமல் இருந்துள்ளனர். இருப்பினும், பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரின் தாயார், மே 16 ஆம் தேதி சைகுல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

அந்த புகாரில், "எனது மகளையும் மற்றொரு பெண்ணையும் பாலியல் வன்கொடுமை செய்து, கொடூரமாக சித்திரவதை செய்த் பின்னர் கொடூரமாக கொன்றனர். அவர்களின் சடலங்கள் இன்னும் மீட்கப்படவில்லை. மேலும், அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதும் இன்றுவரை தெரியவில்லை. இந்த குற்றத்தில் 100 முதல் 200 பேர் வரை ஈடுப்பட்டுள்ளனர்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
992
Active
27610
Recovered
152
Deaths
Last Updated: Mon 7 July, 2025 at 04:49 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Ramadoss vs Anbumani: மகனுக்கு எதிராக மகளை இறக்கும் ராமதாஸ்! கட்சியை கன்ட்ரோல் எடுக்க ஐயாவின் புது ரூட்டு!
Ramadoss vs Anbumani: மகனுக்கு எதிராக மகளை இறக்கும் ராமதாஸ்! கட்சியை கன்ட்ரோல் எடுக்க ஐயாவின் புது ரூட்டு!
Gingee Fort: வேலைன்னா இப்படி இருக்கணும் - செஞ்சிக் கோட்டைக்கு UNESCO அங்கீகாரம், வாவ் சொன்ன சிவாஜி
Gingee Fort: வேலைன்னா இப்படி இருக்கணும் - செஞ்சிக் கோட்டைக்கு UNESCO அங்கீகாரம், வாவ் சொன்ன சிவாஜி
Tamilnadu Roundup: தமிழ்நாடு முழுவதும் குரூப் 4 தேர்வு.. டிஜிபியிடம் ராமதாஸ் புகார் - தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Roundup: தமிழ்நாடு முழுவதும் குரூப் 4 தேர்வு.. டிஜிபியிடம் ராமதாஸ் புகார் - தமிழகத்தில் இதுவரை
புதுச்சேரியில் அதிர்ச்சி! டெல்லி போலீஸ் போல் நடித்து பேராசிரியரிடம் ரூ.9.69 லட்சம் மோசடி!
புதுச்சேரியில் அதிர்ச்சி! டெல்லி போலீஸ் போல் நடித்து பேராசிரியரிடம் ரூ.9.69 லட்சம் மோசடி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

800 கோடி.. BOAT CLUB-ல் 1 ஏக்கர்! மாறன் BROTHERS டீல்! ஸ்டாலின்,வீரமணி சம்பவம்
தைலாபுரத்தில் அன்புமணி ENTRY! 5 நிமிடத்தில் பேசி முடித்த ராமதாஸ்! மயிலாடுதுறையில் நடந்தது என்ன?
Nayanthara Divorce | விக்னேஷ் சிவனுடன் விவாகரத்தா?வெளியான பரபரப்பு தகவல் நயன்தாரா கொடுத்த ரியாக்‌ஷன்
Pothupani Thilagam | ’நீர்வளத்துறையில் முறைகேடு?’ துரைமுருகனுக்கே விபூதி அடித்த பொதுப்பணி திலகம்!
EPS with Amit Shah | களம் இறங்கும் அமித்ஷா உறுதி அளித்த நயினார்! இபிஎஸ் பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ramadoss vs Anbumani: மகனுக்கு எதிராக மகளை இறக்கும் ராமதாஸ்! கட்சியை கன்ட்ரோல் எடுக்க ஐயாவின் புது ரூட்டு!
Ramadoss vs Anbumani: மகனுக்கு எதிராக மகளை இறக்கும் ராமதாஸ்! கட்சியை கன்ட்ரோல் எடுக்க ஐயாவின் புது ரூட்டு!
Gingee Fort: வேலைன்னா இப்படி இருக்கணும் - செஞ்சிக் கோட்டைக்கு UNESCO அங்கீகாரம், வாவ் சொன்ன சிவாஜி
Gingee Fort: வேலைன்னா இப்படி இருக்கணும் - செஞ்சிக் கோட்டைக்கு UNESCO அங்கீகாரம், வாவ் சொன்ன சிவாஜி
Tamilnadu Roundup: தமிழ்நாடு முழுவதும் குரூப் 4 தேர்வு.. டிஜிபியிடம் ராமதாஸ் புகார் - தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Roundup: தமிழ்நாடு முழுவதும் குரூப் 4 தேர்வு.. டிஜிபியிடம் ராமதாஸ் புகார் - தமிழகத்தில் இதுவரை
புதுச்சேரியில் அதிர்ச்சி! டெல்லி போலீஸ் போல் நடித்து பேராசிரியரிடம் ரூ.9.69 லட்சம் மோசடி!
புதுச்சேரியில் அதிர்ச்சி! டெல்லி போலீஸ் போல் நடித்து பேராசிரியரிடம் ரூ.9.69 லட்சம் மோசடி!
PM Modi: ”செஞ்ச வரைக்கும் போதும், நீங்க கிளம்புங்க” பிரதமர் மோடிக்கு செண்ட் ஆஃப் கொடுக்க RSS தீவிரம்?
PM Modi: ”செஞ்ச வரைக்கும் போதும், நீங்க கிளம்புங்க” பிரதமர் மோடிக்கு செண்ட் ஆஃப் கொடுக்க RSS தீவிரம்?
Diabetes: சர்க்கரை வியாதியா? யூகலிப்டஸ் எண்ணெய் மசாஜே போதும் - சென்னை மருத்துவர்கள் கண்டுபிடிப்பு
Diabetes: சர்க்கரை வியாதியா? யூகலிப்டஸ் எண்ணெய் மசாஜே போதும் - சென்னை மருத்துவர்கள் கண்டுபிடிப்பு
Air Flight Crash Report: 270 பேரை காவு வாங்கிய ஏர் இந்தியா விமான விபத்து -  ”32 விநாடிகளில்..” காரணம் இதுதான் - அறிக்கை
Air Flight Crash Report: 270 பேரை காவு வாங்கிய ஏர் இந்தியா விமான விபத்து - ”32 விநாடிகளில்..” காரணம் இதுதான் - அறிக்கை
மயிலாடுதுறை மக்களுக்கு ஒரு நற்செய்தி! 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம்: 130 முகாம்கள், உங்கள் வீட்டு வாசலில் அரசு சேவைகள்!
மயிலாடுதுறை மக்களுக்கு ஒரு நற்செய்தி! 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம்: 130 முகாம்கள், உங்கள் வீட்டு வாசலில் அரசு சேவைகள்!
Embed widget