நடிகை லட்சுமி மேனன் கடத்தல் வழக்கில் திருப்பம்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு, ரசிகர்கள் அதிர்ச்சி!
ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகை லட்சுமி மேனன் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
ரகுவின்தே ஸ்வந்தம் ரசியா மலையாள திரைப்படத்தின் மூலம் 2011-ம் ஆண்டு நடிகையாக அறிமுகமானவர் லட்சுமி மேனன். பின்னர் இவர் தமிழில் சுந்தரபாண்டியன் (2021), கும்கி (2012) போன்ற படங்களில் நடித்ததன் மூலமாக பிரபலமானார். லட்சுமி மேனன் சென்ற மாதம் 24ம் தேதி தனது தோழி உட்பட மூன்று பேருடன் கொச்சியில் உள்ள மதுபான பாருக்கு சென்றுள்ளார். அப்போது, அங்கு, மது அருந்த வந்த ஆலப்புழாவைச் சேர்ந்த ஐடி ஊழியர் அலியார் ஷா சலீம் என்பவருக்கும், லட்சுமி மேனன் தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
பின்னர் இருதரப்பினரும் வெளியே வந்தும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அலியார் ஷா சலீம் தனது காரில் புறப்பட்டபோது அவரை பின்தொடர்ந்து சென்ற லட்சுமி மேனன் உள்ளிட்ட நான்கு பேரும் இடையில் வழிமறித்து மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, ஐடி ஊழியரை காரிலிருந்து வெளியே இழுத்து லட்சுமி மேனன் தரப்பினர் தங்களது காரில் கடத்தி சென்று கடுமையாக தாக்கி ஓரிடத்தில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளனர். இதுகுறித்து எர்ணாகுளம் வடக்கு காவல் நிலையத்தில் அலியார் ஷா சலீம் புகார் அளித்ததைத்தொடர்ந்து போலீஸார் லட்சுமி மேனன் மற்றும் அவரது நண்பர்கள் அனீஸ், மிதுன், சோனாமோல் ஆகிய 4 பேர் மீதும் ஆட்கடத்தல், மிரட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். நடிகை லட்சுமி மேனன் தவிர 3 பேரையும் போலீஸார் ஏற்கெனவே கைது செய்தனர்.
இதற்கிடையே, லட்சுமி மேனன் மற்றும் ஐடி ஊழியர் இடையேயான தகராறு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து, முன்ஜாமீன் கோரி லட்சுமி மேனன் கேரள உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதில், ஐடி ஊழியர் தன்னை ஆபாச வார்த்தைகளால் திட்டி, பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், பாரை விட்டு வெளிய வந்த பின்னரும் பீர் பாட்டிலால் தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார். ஐடி ஊழியரை நான் தாக்கியதாக அளித்த புகார் ஜோடிக்கப்பட்டது. எனக்கும் இந்த குற்றத்துக்கும் சம்பந்தமில்லை என்று தெரிவித்துள்ளார்.
இவரது மனுவை விசாரித்த நீதிபதி பெச்சு குரியன் தாமஸ், செப்டம்பர் 17-ம் தேதி வரை நடிகை லட்சுமி மேனனை கைது செய்வதற்கு தடை விதித்தார். மேலும், இந்த வழக்கு தொடர்பான கூடுதல் விவரங்களை தாக்கல் செய்யுமாறு போலீஸாருக்கு நீதிபதி உத்தரவிட்டார். தன் மீதான ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகை லட்சுமி மேனன் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மதுபான பாரில் நடந்த தகராறில் இளைஞர் ஒருவரை கடத்தி தாக்கியதாக நடிகை லட்சுமி மேனன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இரு தரப்பினரும் சுமுகமாக பிரச்சனையை பேசி தீர்த்துக் கொண்டதால் முன் ஜாமின் வழங்கப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு நவம்பர் 7ம் தேதிக்கு ஒத்திவைத்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து வழக்கு நடந்த விசாரணையின் போது சமாதான பேச்சுவார்த்தை மூலம் இந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டதாக நடிகை லட்சுமி மேனன், ஐ.டி. ஊழியர் ஆகிய 2 பேரும் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இதை பரிசீலித்த நீதிபதி டயஸ் தலைமையிலான அமர்வு, நடிகை லட்சுமி மேனன் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.





















