Maharashtra Accident: அதிகாலையில் சோகம்..! கிரேன் சரிந்து விழுந்து 14 பேர் பலி.. 6 பேரை தேடும் பணிகள் தீவிரம்


மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள ஷாபூர் தெசில் பகுதியில் உள்ள பாலத்தின் ஸ்லாப் மீது, திடீரென கிரேன் சரிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்த 14 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. 3 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் படிக்க,


Parliament Monsoon Session: டெல்லி அவசரச் சட்ட மசோதா.. இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு..


ஐஏஎஸ் அதிகாரிகளை நியமிக்கும் விவகாரத்தில் டெல்லி அரசுக்கும் மத்திய அரசின் பிரதிநிதியான துணை நிலை ஆளுநருக்கும் இடையே அதிகார போட்டி நிலவி வந்தது. அதை தீர்க்கும் வகையில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மேலும் படிக்க,


Chandrayaan 3: 15 நாள் பயணத்திற்கு பின் நிலவு பாதையில் நுழையும் சந்திரயான் 3.. அடுத்த கட்ட பயணங்கள் என்ன? முழு விவரம்..


சந்திரயான் 3 விண்கலம் கடந்த 14ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. அடுத்ததாக, 40 நாட்கள் பயணம் செய்து  ஆகஸ்ட் 23-ஆம் தேதி மாலை 5.47 மணியளவில் நிலவில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாம் கட்டமாக, விண்கலம் புவியின் தரைப்பரப்பில் இருந்து 170 கிலோ மீட்டர் தூரத்திற்கு சென்றதும், அதற்கு ஒரு உந்துதல் வழங்கப்பட்டு புவியின் நீளவட்டப்பாதையில் சுற்ற வைக்கப்பட்டது. இந்த நிலையில் தான், மேலும் படிக்க,


Supreme Court: "அங்கு நடக்குது இங்கு நடக்குதுன்னு நியாயபடுத்தாதீங்க" மணிப்பூர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி


மணிப்பூரில் பழங்குடி பெண்களுக்கு நேர்ந்த கொடூரம் நாட்டில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய நிலையில், உச்ச நீதிமன்றம் இதுகுறித்து தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து கொண்டது. கடந்த ஜூலை 20ஆம் தேதி நடந்த விசாரணையின்போது, "இதில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும்" என இந்திய தலைமை நீதிபதி டி. ஒய். சந்திரசூட் எச்சரித்திருந்தார். மேலும் படிக்க,


Manual Scavenging: கையால் மலம் அள்ளும் முறை தமிழ்நாட்டில் நடைமுறையில் இருக்கா? இல்லையா? மத்திய அரசு அதிர்ச்சி தகவல்


கையால் மலம் அள்ளும் முறை தடை செய்யப்பட்டுள்ள போதிலும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்கள் இதில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இந்த தொழிலில் ஈடுபடுபடுபவர்கள், முறையான கருவிகளுடன் சாக்கடையில் இறங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டாலும், இது தொடர்பான விதிகள் முறையாக அமல்படுத்துவதில்லை என குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. மேலும் படிக்க,


RPF soldier Shot Dead: ஓடும் ரயிலில் சுட்டுக்கொல்லப்பட்ட ஏஎஸ்ஐ.. ரு.30 லட்சம் நிதியுதவி அறிவிப்பு


ஜெய்ப்பூரில் இருந்து மும்பை நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் மகாராஸ்டிரா மாநிலம் பால்கர் ரயில் நிலையத்தைக் கடந்து சென்று கொண்டு இருந்தது. அப்போது ஆர்பிஎஃப் காவலர் ஒருவர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் ரயிலில் இருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக சுட்டுள்ளார். மேலும் படிக்க,


Missing Women: 3 ஆண்டுகளில் 13.13 லட்சம் பெண்கள் மாயமான கதை.. மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல்..


2019 மற்றும் 2021 க்கு இடைப்பட்ட மூன்று ஆண்டுகளில் நாட்டில் சுமார் 13.13 லட்சம் சிறுமிகள் மற்றும் பெண்கள் காணாமல் போய் உள்ளனர். மத்தியப் பிரதேசத்தில் கிட்டத்தட்ட இரண்டு லட்சம் பேர் அதனை தொடர்ந்து  மேற்கு வங்காளத்தில் 1.56 லடசம் பேர் காணமல் போயுள்ளனர் என்று  உள்துறை அமைச்சகம் ராஜ்யசபாவில் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க,