மேலும் அறிய
Top 10 News Headlines: பாஜக உயர்மட்ட குழு கூட்டம்.. பேசுபொருளான ஐபிஎல் ஏலம்.. 11 மணி வரை இன்று!
Top 10 News Headlines Today Dec 17th: இந்தியா முழுவதிலும் டிசம்பர் 17ம் தேதியான காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக தற்போது பார்க்கலாம்.

இன்றைய முக்கிய செய்திகள்
Source : ABPLIVE AI
- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கால நிலை மாற்றத்திற்கான ஆட்சி மன்ற குழுவின் 3ம் கூட்டம் இன்று நடைபெற்றது.
- சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முன்பு அதிமுக மாணவர் அணியினர் 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கக்கோரி ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர்.
- தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் இன்று நல்ல மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில இடங்களில் மழை பெய்யும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
- திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே பள்ளி சுவர் இடிந்து மாணவர் உயிரிழந்த விவகாரத்தில் தலைமையாசிரியர் மீது வழக்குப்பதிவு செய்ய மாவட்ட கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
- தமிழ்நாடு பாஜகவின் உயர்மட்ட குழு கூட்டம் சென்னை கிண்டியில் தனியார் ஹோட்டலில் தொடங்கியது. இக்கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
- பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியா நாட்டின் மிக உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதைப் பெறும் வெளிநாட்டு தலைவர் என்ற சிறப்பை அவர் பெற்றுள்ளார்.
- மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் பெயர் மாற்றப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் மாவட்ட தலைநகரங்களில் இன்று ஆர்ப்பட்டம் நடத்தினர்.
- உலகில் 600 பில்லியன் டாலர் சொத்து மதிப்பை தாண்டிய முதல் தனிநபராக எலான் மஸ்க் உருவெடுத்தார். இது இந்திய மதிப்பில் ரூ.58 லட்சம் கோடியாகும். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மதிப்பால் மஸ்க் சொத்து உயர்ந்துள்ளது.
- சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.99,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேசமயம் ஒரு கிராம் ரூ.12,400 ஆக உள்ளது. வெள்ளி விலை கிராம் ஒன்று ரூ.11 உயர்ந்து ரூ.222க்கு விற்பனையாகிறது.
- பீகார் மாநிலத்தில் தேர்தலுக்கு முன்பாக மகளிருக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்ட நிலையில் சில ஆண்கள் வங்கி கணக்கிலும் தவறுதலாக பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது. அதனை திருப்பி அளிக்கக்கோரி மாநில அரசு சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதால் சர்ச்சை வெடித்துள்ளது.
- ஐபிஎல் மினி ஏலத்தில் இளம் வீரர்கள் அதிக தொகைக்கு ஏலம் போனது மிகப்பெரிய அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது. அதேசமயம் முன்னணி வீரர்கள் சிலர் ஏலம் போகாததும், அடிப்படை தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டதும் நிகழ்ந்துள்ளது.
- இந்தியா தென்னாப்பிரிக்கா இடையேயான 4வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















