மேலும் அறிய

Arya Rajendran: பச்சிளம் குழந்தையுடன் பணிக்கு வந்த இந்தியாவின் இளம் மேயர் ஆர்யா ராஜேந்திரன்! - அப்ளாஸ் அள்ளும் புகைப்படம்

இந்தியாவின் இளம் மேயர் என்ற பெருமையைப் பெற்ற திருவனந்தபுரம் மேயர் ஆர்யா ராஜேந்திரன், கைக்குழந்தையுடன் பணியாற்றும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி, கவனமீர்த்து வருகிறது. 

இந்தியாவின் இளம் மேயர் என்ற பெருமையைப் பெற்ற திருவனந்தபுரம் மேயர் ஆர்யா ராஜேந்திரன், கைக்குழந்தையுடன் பணியாற்றும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி, கவனமீர்த்து வருகிறது. 

திருவனந்தபுரத்தின் மேயராக 21 வயது ஆர்யா ராஜேந்திரன் நியமிக்கப்பட்டார். கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போதே அவர் இந்தியாவின் இளம் வயது மேயராக 2020ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். அவருக்கும் கேரள சட்டப்பேரவையின் இள வயது எம்எல்ஏவான சச்சின் தேவுக்கும் கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் நடந்தது. 

இவர்களுக்குக் கடந்த ஆகஸ்ட் மாதம் பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு துவா தேவ் என்று பெயர் சூட்டப்பட்டது. குழந்தையின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் ஆர்யாவும் சச்சினும் பகிர்ந்து இருந்தனர். இவை லைக்குகளை அள்ளிய நிலையில், நெட்டிசன்கள் பாராட்டு மழையைக் குவித்தனர். 

இந்த நிலையில் ஆர்யா ராஜேந்திரன், திருவனந்தபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் கைக்குழந்தையுடன் பணியாற்றும் புகைப்படம் இணையத்தில் வெளியானது. இந்த புகைப்படத்தில் குழந்தை தூங்கிக் கொண்டிருக்க, ஆர்யா கோப்புகளில் எழுதிக் கொண்டிருக்கிறார். இதற்கு நெட்டிசன்கள் கமெண்ட்டுகளையும் லைக்குகளையும் அள்ளி வீசி வருகின்றனர். 

யார் இந்த ஆர்யா?


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஆர்யா ராஜேந்திரன் முடவன்முகல் வார்டில் வெற்றி பெற்று மாநகராட்சி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் படித்துக்கொண்டே, இந்திய மாணவர் கூட்டமைப்பின் அலுவலகப் பொறுப்பாளராகவும் செயல்பட்டு வந்தார். அவர் 2020ஆம் ஆண்டு, மேயராகத் தேர்வு செய்யப்பட்டார்.

மொய்யோ, பரிசுகளோ வேண்டாம்
 
தொடர்ந்து தனது பால்ய கால நண்பரான சச்சின் தேவை ஆர்யா திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு யாரும் எந்த விதமான பரிசுகளும், மொய்யும் தர வேண்டாம் என ஆர்யா ராஜேந்திரன், சச்சின் தேவ் வேண்டுகோள் விடுத்திருந்தனர். ஒருவேளை பரிசு வழங்க நினைத்தால் அதை மாநகராட்சியில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்துக்கோ, முதியோர் இல்லத்துக்கோ, முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதிக்கோ வழங்கலாம் எனவும் இருவரும் கூட்டாக வேண்டுகோள் விடுத்திருந்தனர். அதைத் தொடர்ந்து எளிமையான முறையில் இருவரின் திருமணமும் நடைபெற்றது.

இந்த நிலையில், இவர்களுக்குக் கடந்த ஆகஸ்ட் மாதம் பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு துவா தேவ் என்று பெயர் சூட்டப்பட்டது.

தற்போது ஆர்யா ராஜேந்திரன், திருவனந்தபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் கைக்குழந்தையுடன் பணியாற்றும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த புகைப்படத்தில் தாயின் ஒரு கையில், குழந்தை தூங்கிக் கொண்டிருக்க, ஆர்யா மற்றோரு கையைக் கொண்டு கோப்புகளில் எழுதிக் கொண்டிருக்கிறார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Lok Sabha Speaker Election: சுதந்திர இந்தியாவில் 2 முறை மட்டுமே நடந்த மக்களவை சபாநாயகர் தேர்தல் - வரலாறு சொல்வது என்ன?
சுதந்திர இந்தியாவில் 2 முறை மட்டுமே நடந்த மக்களவை சபாநாயகர் தேர்தல் - வரலாறு சொல்வது என்ன?
47 தமிழ்நாட்டு மீனவர்களையும், 166 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை தேவை - முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்
47 தமிழ்நாட்டு மீனவர்களையும், 166 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை தேவை - முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்
CBSE Compartment Exams 2024: ஜூலை 15 முதல் சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு துணைத் தேர்வுகள்; முழு அட்டவணை இதோ!
CBSE Compartment Exams 2024: ஜூலை 15 முதல் சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு துணைத் தேர்வுகள்; முழு அட்டவணை இதோ!
Director Ram:
Director Ram: "என்னோட 4 படம் பிடிக்கலனாலும் இந்த படம் பிடிக்கும்" ஏழு கடல் ஏழு மலைக்கு உத்தரவாதம் தரும் ராம்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

lok sabha Speaker Election | மோதி பார்க்கலாம் மோடி முஷ்டி முறுக்கும் ராகுல்!வரலாற்று சம்பவம் LOADINGAyodhya Ram Temple  rain water leakage | ”அய்யோ ராமா”அலரும் அயோத்தி அர்ச்சகர் கோவில் கூரையின் நிலைAccident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Lok Sabha Speaker Election: சுதந்திர இந்தியாவில் 2 முறை மட்டுமே நடந்த மக்களவை சபாநாயகர் தேர்தல் - வரலாறு சொல்வது என்ன?
சுதந்திர இந்தியாவில் 2 முறை மட்டுமே நடந்த மக்களவை சபாநாயகர் தேர்தல் - வரலாறு சொல்வது என்ன?
47 தமிழ்நாட்டு மீனவர்களையும், 166 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை தேவை - முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்
47 தமிழ்நாட்டு மீனவர்களையும், 166 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை தேவை - முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்
CBSE Compartment Exams 2024: ஜூலை 15 முதல் சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு துணைத் தேர்வுகள்; முழு அட்டவணை இதோ!
CBSE Compartment Exams 2024: ஜூலை 15 முதல் சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு துணைத் தேர்வுகள்; முழு அட்டவணை இதோ!
Director Ram:
Director Ram: "என்னோட 4 படம் பிடிக்கலனாலும் இந்த படம் பிடிக்கும்" ஏழு கடல் ஏழு மலைக்கு உத்தரவாதம் தரும் ராம்
Breaking News LIVE: சேப்பாக்கத்தில் டெஸ்ட்! இந்தியா - தென்னாப்பிரிக்க மகளிர் அணிகள் மோதும் போட்டியை காண அனுமதி இலவசம்
Breaking News LIVE: சேப்பாக்கத்தில் டெஸ்ட்! இந்தியா - தென்னாப்பிரிக்க மகளிர் அணிகள் மோதும் போட்டியை காண அனுமதி இலவசம்
Stock Market: 78,000 புள்ளிகள் உயர்வு! புதிய சாதனை படைத்த சென்செக்ஸ், நிஃப்டி - முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி
Stock Market: 78,000 புள்ளிகள் உயர்வு! புதிய சாதனை படைத்த சென்செக்ஸ், நிஃப்டி - முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி
'ஜெய் தமிழ்நாடு' தெலுங்கில் பதவியேற்ற தமிழ்நாட்டு எம்பி! திரும்பி பார்க்க வைத்த காங்கிரஸ்காரர்!
'ஜெய் தமிழ்நாடு' தெலுங்கில் பதவியேற்ற தமிழ்நாட்டு எம்பி! திரும்பி பார்க்க வைத்த காங்கிரஸ்காரர்!
Abp Nadu Impact:  ஏபிபி நாடு செய்தி எதிரொலி-  தருவைகுளம் சூழல்சார் சுற்றுலா பூங்காவில் ஆய்வு மேற்கொண்ட தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்
ஏபிபி நாடு செய்தி எதிரொலி- தருவைகுளம் சூழல்சார் சுற்றுலா பூங்காவில் ஆய்வு மேற்கொண்ட தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்
Embed widget