மேலும் அறிய

கணவனோடு சண்டை: மகளையும் தாயையும் அடித்துக்கொன்ற தந்தை!

திருமணமான இருபதே நாட்களில் கணவருடன் சண்டைபோட்டுக் கொண்டு வீட்டுக்கு வந்த மகளையும், மகளுக்கு ஆதரவாக பேசிய தாயாரையும் கட்டையால் அடித்துக் கொன்ற தந்தை.

திருமணம் முடிந்த இருபதே நாட்களில் கணவருடன் சண்டைபோட்டுக் கொண்டு வீட்டுக்கு வந்த மகளையும், மகளுக்கு ஆதரவாக பேசிய தாயாரையும் கட்டையால் அடித்துக் கொன்ற தந்தை.

தெலுங்கானா மாநிலம் மகபூப்நகர் மாவட்டத்தில் உள்ள ஜெயினல்லிப்பூர் கிராமத்தினைச் சேர்ந்த கிருஷ்ணப்பா மற்றும் கமலம்மாவின் மகள் சரஸ்வதி திருமணமான இருபதே நாட்களில் கணவருடன் கருத்து வேறுபாட்டால்  தாய் வீட்டுக்கு வந்த மகளையும், மகளுக்கு ஆதரவாக பேசிய தாயாரையும் கட்டையால் அடித்துக் கொன்ற தந்தை. இச்சம்பவத்தால் மகபூப்நகர் மாவட்டமே அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

சரஸ்வதிக்கு மே 8ம் தேதி அதே மாவட்டத்தினைச் சேர்ந்த இளைஞருடன் திருமணம் நடைபெற்றது.  இந்த திருமணத்தில் சரஸ்வதிக்கு  விருப்பம் இல்லை என கூறப்படுகிறது. திருமணம் முடிந்து கணவர் வீட்டிற்கு சென்ற சரஸ்வதி, கணவருடனான கருத்து வேறுபாட்டால்  கடந்த வாரம் தாய் வீட்டிற்கு வந்துள்ளார். கணவரின் வீட்டிலிருந்து வந்தவர் இனி கணவரின் வீட்டுக்குப் போக மாட்டேன் என பிடிவாதமாக கூறியுள்ளார்.  சரஸ்வதியின் தந்தை கிருஷ்ணப்பா எவ்வளவோ சமாதானம் செய்ய முயற்சித்தும் பலனளிக்கவில்லை. இதனால் கிருஷ்ணப்பா கடும் கோபத்தில்  இருந்து வந்துள்ளார்.  திருமணத்திற்கு அதிக செலவு செய்தது எல்லாம் வீண் என்ற மனநிலையில் இருந்த கிருஷ்ணப்பாவுக்கு எதிராக அவரது மனைவி கமலம்மாவும் மகளுக்கு ஆதரவாகவே பேசிவந்துள்ளார். இது கிருஷ்ணப்பாவை மேலும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கிருஷ்ணப்பாவுக்கும் கமலம்மாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால்  தொடர்ந்து கோபத்தில் இருந்த கிருஷ்ணப்பா,  நன்கு மது அருந்திவிட்டு இரவு வீட்டிற்கு வந்துள்ளார்.  மூவருக்குமான கருத்து வேறுபாடு பெரும் குடும்பச் சண்டையாக உருவெடுத்துள்ளது.

  போதையில் இருந்த கிருஷ்ணப்பா தனது மனைவியையும் மகளையும் கட்டையால் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார்;  வலி தாங்க முடியாமல் சரஸ்வதியும் கமலம்மாவும் அலறியுள்ளனர். பின் அவர்கள் இறந்து விட்டதாக கருதிய கிருஷ்ணப்பாவும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த அக்கம் பக்கதினர் காவல்துறையினருக்கு தகவல் சொல்லியுள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மூவரையும் மீட்டு உள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

மிகவும் கவலைக்கிடமாக இருந்த சரஸ்வதியும் கமலம்மாவும் உயர்சிகிச்சைக்காக ஹைதராபாத் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளனர். விஷம் அருந்தியதாக சொல்லப்பட்ட கிருஷ்ணப்பா அபாய நிலையினை கடந்து கொஞ்சம் கொஞ்சமாக குணமடைந்து வருகிறார்.

காவல்துறையினர் கிருஷ்ணப்பாவின் மீது கொலை வழக்கு பதிவு செய்து, சரஸ்வதி எந்த காரணத்திற்காக கணவரைப் பிரிந்து வந்தார்? வரதட்சணை கொடுமை நிகழ்த்தப்பட்டதா? என விசாரித்து வருகின்றனர். திருமணமான இருபதே நாட்களில் இப்படியான சோக சம்பவம் ஜெயினல்லிப்பூர் கிராமத்தினைச் சேர்ந்தவர்களை பெரும் சோகத்திற்கு ஆழ்த்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

இன்றைய டாப் 10 நியூஸ்: முக்கிய நிகழ்வுகள்... நீங்க கண்டிப்பா தெரிஞ்சுக்க வேண்டிய செய்திகள்!
இன்றைய டாப் 10 நியூஸ்: முக்கிய நிகழ்வுகள்... நீங்க கண்டிப்பா தெரிஞ்சுக்க வேண்டிய செய்திகள்!
PF பணம் எடுப்பதில் புதிய மாற்றம்: 12 மாத காத்திருப்பு! அவசர தேவைக்கு என்ன வழி?
PF பணம் எடுப்பதில் புதிய மாற்றம்: 12 மாத காத்திருப்பு! அவசர தேவைக்கு என்ன வழி?
ஆகஸ்ட் 15க்குள் கேஸ் சிலிண்டர் KYC கட்டாயம்! இல்லையெனில் மானியம் ரத்து!விபரம் இதோ.
ஆகஸ்ட் 15க்குள் கேஸ் சிலிண்டர் KYC கட்டாயம்! இல்லையெனில் மானியம் ரத்து!விபரம் இதோ.
டெக் பிரியர்களுக்கு செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!
செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
Skoda Superb: அட்ரா சக்க..! 40KM மைலேஜ், இந்தியாவிற்கு கன்ஃபார்ம் செய்த ஸ்கோடா - விலை, அம்சங்கள், ரேட்டிங்
அட்ரா சக்க..! 40KM மைலேஜ், இந்தியாவிற்கு கன்ஃபார்ம் செய்த ஸ்கோடா - விலை, அம்சங்கள், ரேட்டிங்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Embed widget