Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் 22 ஆயிரமாக குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு
தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.
LIVE
Background
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக தொற்று எற்பட்டவர்களின் எண்ணிக்கை 24,405 ஆக உள்ளது. 32,221 பேர் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன்மூலம், தற்போது கொரோனா தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 2,80,426 ஆக குறைந்துள்ளது. சென்னையில் தற்போது 28,186 பேர் கொரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழ்நாட்டில் 22 ஆயிரமாக குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் இன்று 22 ஆயிரத்து 651 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் 1,971 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் 33 ஆயிரத்து 646 நபர்கள் கொரோனாவால் இருந்து குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 463 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துளளனர். இதனால், மொத்த உயிரிழப்பு 26 ஆயிரத்து 128 ஆக உயர்ந்துள்ளது.
கேரளா கொரோனா நிலவரம்
கேரள மாநிலம் 16,229 புதிய கொரோனா பாதிப்புகளைப் பதிவு செய்துள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் 135 பேர் இறந்துள்ளனர். அந்த மாநிலத்தில் இதுவரை சிகிச்சை பெற்றுவருபவர்கள் மொத்தம் 1,74,526.
கோவின் தளத்தில் தமிழ்மொழி புறக்கணிப்பு : எழும் கண்டனக் குரல்கள்
இணையதளத்தில் தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்பட 9 மாநில மொழிகளை மத்திய அரசு இன்று புதியதாக இணைத்துள்ளது. ஆனால், இவற்றில் தமிழ் மொழி இடம்பெறவில்லை. இது தமிழ்நாட்டு மக்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அரசியல் கட்சியினர் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மத்திய அரசின் இந்த செயலுக்கு ராமதாஸ், சு.வெங்கடேசன் போன்ற அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கோவின் இணையதளத்தில் தமிழ் புறக்கணிப்பு
பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்காக மத்திய அரசு கோவின் என்ற இணையதளத்தை சில மாதங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தியது. இந்த இணையதளத்தில் தினசரி ஆயிரக்கணக்கானோர் முன்பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த இணையதளத்தில் தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்பட 9 மாநில மொழிகளை மத்திய அரசு இன்று புதியதாக இணைத்துள்ளது. ஆனால், இவற்றில் தமிழ் மொழி இடம்பெறவில்லை. இது தமிழ்நாட்டு மக்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அரசியல் கட்சியினர் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் அனைத்து கைதிகளுக்கும் விரைவில் தடுப்பூசி - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி
தமிழ்நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக மாநிலம் முழுவதும் பல்வேறு தடுப்பு பணிகளை மாநில அரசு மேறகொண்டு வருகிறது. மேலும், தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. புதுச்சேரி மாவட்டச் சிறையில் கைதிகளுக்கு தடுப்பூசி முகாமை தொடங்கிவைத்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தமிழ்நாட்டில் சிறையில் உள்ள அனைத்து கைதிகளுக்கும் கொரோனா தடுப்பூசி விரைவில் செலுத்தப்படும் என்று கூறினார்.
வண்டலூர் பூங்காவில் 9 சிங்கங்களுக்கு கொரோனா
உலகளவில் கொரோனா பாதிப்பு மனிதர்களையும், அவர்களின் வாழ்வாதாரத்தையும் மிக கடுமையாக பாதித்துள்ளது. கொரோனா வைரஸ் மனிதர்கள் மட்டுமின்றி பல நாடுகளில் விலங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில், கொரோனா வைரசின் தாக்கத்திற்கு வண்டலூர் உயிரியியல் பூங்காவும் தற்போது ஆளாகியுள்ளது. சென்னையின் முக்கியமான சுற்றுலாத்தளமாக விளங்கும் வண்டலூர் உயிரியியல் பூங்காவில் சிங்கங்கள், புலி, மான், கரடி, உள்ளிட்ட பல உயிரினங்கள் உள்ளது. இந்த நிலையில், இந்த பூங்காவில் உள்ள 11 சிங்கங்களில் 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
பிரிட்டனில் வேகமாக பரவிவரும் `டெல்டா' கொரோனா
இந்தியாவில் தற்போது கண்டறியப்பட்டுள்ள அதிக வீரயம் மிக்க கொரோனா வைரசுக்கு டெல்டா என்று உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது. இந்த நிலையில், இந்த டெல்டா வகை கொரோனா வைரஸ் பிரிட்டனில் தீவிரமாக பரவி வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அங்கு கொரோனா தொற்று ஏற்பட்ட 12 ஆயிரம் நபர்களில் 5 ஆயிரத்து 472 நபர்களுக்கு டெல்டா வகை கொரோனா பரவியிருப்பது தெரியவந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் இலவச ஆட்டோ சேவை
திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் வகையில் இலவச ஆட்டோ சேவை தொடங்கப்பட்டுள்ளது.
இலவச ஆட்டோ சேவையை பெற: 7200045740, 9382977911, 9940270037, 9444115773, 9884465 348, 9443248799, 7338913972 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு, இறப்பு விகிதம் குறைந்து வருகிறது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மாநில அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இந்த சூழலில், வேலூரில் இன்று ஆய்வு மேற்கொண்ட மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தமிழகத்தில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளால் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் இறப்பு விகிதமும் குறைந்து வருகிறது. மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் நிரந்தரமான ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கவும், உள்கட்டமைப்பு ஏற்படுத்தவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்றார்.
மேலும் ஒரு வாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தேவை
தமிழ்நாட்டில், மேலும் ஒரு வாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தேவை என்று மருத்துவ குழு முதல்வருக்கு பரிந்துரை அளித்துள்ளது.
தமிழ்நாட்டில், தற்போது அமலில் உள்ள தளர்வுகளற்ற முழு ஊரடங்கு வரும் 7ம் தேதியுடன் முடிவடைகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
and tablets