TN Corona LIVE Updates :தமிழ்நாட்டில் கொரோனா உயிரிழப்பு புதிய உச்சம்
கொரோனா நோய்த் தொற்று தொடர்பான அனைத்து முக்கிய செய்திகளையும் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளுங்கள்.

Background
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தினசரி அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 33 ஆயிரத்து 075 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 6 ஆயிரத்து 150 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 16 லட்சத்து 31 ஆயிரத்து 291 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் காரணமாக 335 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால், மொத்த உயிரிழப்பு 18 ஆயிரத்து 5 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 20 ஆயிரத்து 486 நபர்கள் கொரோனா வைரசில் இருந்து குணம் அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு புதிய உச்சம்
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தினசரி அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 33 ஆயிரத்து 075 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 6 ஆயிரத்து 150 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 16 லட்சத்து 31 ஆயிரத்து 291 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் காரணமாக 335 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால், மொத்த உயிரிழப்பு 18 ஆயிரத்து 5 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 20 ஆயிரத்து 486 நபர்கள் கொரோனா வைரசில் இருந்து குணம் அடைந்துள்ளனர்.
ஸ்டெர்லைட் ஆலையில் மிக விரைவில் ஆக்சிஜன் உற்பத்தி - அமைச்சர் தங்கம் தென்னரசு
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக கொரோனா நோயாளிகள் பலரும் உயிரிழந்து வருகின்றனர். தமிழகத்தில் இந்த நிலை ஏற்படாமல் இருப்பதற்காக ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க தமிழக அரசு பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக, கடந்த ஆட்சியில் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க அனுமதிக்கப்பட்டது. ஆனால், ஸ்டெர்லைட் ஆலையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஆக்சிஜன் உற்பத்தியில் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலையில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு விட்டதாகவும், இதனால் அந்த ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்கும் பணி மிக விரைவில் தொடங்கப்படும் என்றும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தகவல் தெரிவித்தார். ஆக்சிஜனை திரவமாக்குவதற்கு வெப்பநிலையை உயர்த்தும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.





















