மேலும் அறிய

TN Corona LIVE Updates :தமிழ்நாட்டில் கொரோனா உயிரிழப்பு புதிய உச்சம்

கொரோனா நோய்த் தொற்று தொடர்பான அனைத்து முக்கிய செய்திகளையும் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளுங்கள்.

Key Events
Tamil Nadu Corona LIVE Updates May 17 TN Hospitals COVID-19 Situation Chennai Coimbatore Trichy TN Corona LIVE Updates :தமிழ்நாட்டில் கொரோனா உயிரிழப்பு புதிய உச்சம்
கொரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ்

Background

19:58 PM (IST)  •  17 May 2021

தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு புதிய உச்சம்

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தினசரி அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 33 ஆயிரத்து 075 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 6 ஆயிரத்து 150 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 16 லட்சத்து 31 ஆயிரத்து 291 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் காரணமாக 335 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால், மொத்த உயிரிழப்பு 18 ஆயிரத்து 5 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 20 ஆயிரத்து 486 நபர்கள் கொரோனா வைரசில் இருந்து குணம் அடைந்துள்ளனர்.

18:13 PM (IST)  •  17 May 2021

ஸ்டெர்லைட் ஆலையில் மிக விரைவில் ஆக்சிஜன் உற்பத்தி - அமைச்சர் தங்கம் தென்னரசு

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக கொரோனா நோயாளிகள் பலரும் உயிரிழந்து வருகின்றனர். தமிழகத்தில் இந்த நிலை ஏற்படாமல் இருப்பதற்காக ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க தமிழக அரசு பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக, கடந்த ஆட்சியில் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க அனுமதிக்கப்பட்டது. ஆனால், ஸ்டெர்லைட் ஆலையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஆக்சிஜன் உற்பத்தியில் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலையில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு விட்டதாகவும், இதனால் அந்த ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்கும் பணி மிக விரைவில் தொடங்கப்படும் என்றும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தகவல் தெரிவித்தார். ஆக்சிஜனை திரவமாக்குவதற்கு வெப்பநிலையை உயர்த்தும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.  

17:01 PM (IST)  •  17 May 2021

கொரோனா பாதித்த பெற்றோர்களின் குழந்தைகளின் பராமரிப்பிற்காக `குழந்தைகள் பாதுகாப்பு மையம்'

 தமிழகத்தில் கொரோனா பரவலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைத் தடுப்பதற்கு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும், தமிழகத்தில் சிறியவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என அனைத்து தரப்பினரும் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சில பகுதிகளில் பெற்றோர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவதால், அவர்களின் குழந்தைகளின் பராமரிப்பும், பாதுகாப்பும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளது. இதை நீக்குவதற்காக, தமிழகத்திலே முதன் முறையாக திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு சார்பில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெற்றோர்களின் குழந்தைகளின் பராமரிப்பிற்காக குழந்தைகள் பாதுகாப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது.

16:15 PM (IST)  •  17 May 2021

தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனத்தில் ஒரு வாரத்தில் ஆக்சிஜன் உற்பத்தி பணிகள் - அமைச்சர் செந்தில் பாலாஜி

கொரோனா பரவல் முதல் அலையை காட்டிலும் இரண்டாவது அலையில் நாடு முழுவதும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது.  இதற்கு முக்கிய காரணமாக ஆக்சிஜன் சிலிண்டர்கள் பற்றாக்குறையே உள்ளது. தமிழகத்திலும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் பற்றாக்குறை, ரெம்டெசிவிர் மருந்துகள் பற்றாக்குறை பெரியளவில் இல்லாவிட்டாலும், ஆக்சிஜன் உற்பத்தி, ரெம்டெசிவிர் மருந்து உற்பத்தியில் தமிழக அரசு கவனம் செலுத்தி வருகிறது. இந்த நிலையில், டி.என்.பி.எல் எனப்படும் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனத்தில் அடுத்த ஒரு வாரத்தில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கப்படும் என்று மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல் தெரிவித்துள்ளார். இந்த பணிகள் அனைத்தும் வரும் 25-ந் தொடங்கும் என்றும் அவர் கூறினார்.

15:29 PM (IST)  •  17 May 2021

புதுவையில் ஆக்சிஜன் படுக்கைகள் வசதி அதிகரிப்பு : ரெம்டெசிவிர் மருந்து போதியளவு கையிருப்பு - ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் தகவல்

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரிதது வருவது போலவே, புதுவையிலும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த அந்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும்,அந்த  மாநில ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜனும் கொரோனா தடுப்பு பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார். இன்று ஆய்வு மேற்கொண்ட அவர், புதுவையில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வசதியுடன் கூடிய படுக்கைகளை அதிகப்படுத்தியுள்ளதாகவும், ரெம்டெசிவிர் மருந்துகள் போதுமான அளவில் உள்ளதாகவும் கூறினார். மேலும், கொரோனா தொற்று குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பதற்றத்தையும், பயத்தையும் ஏற்படுத்தக் கூடாது என்றும் கூறினார்.  

Load More
New Update
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Govt Warning: போடு சக்க.! “வசூல் வேட்டை நடத்தினா, வரி வசூல் செய்வோம்“ - ஆம்னி பேருந்துகளுக்கு அரசு எச்சரிக்கை
போடு சக்க.! “வசூல் வேட்டை நடத்தினா, வரி வசூல் செய்வோம்“ - ஆம்னி பேருந்துகளுக்கு அரசு எச்சரிக்கை
''அதிர்ச்சியூட்டும் அரசுப்பள்ளி சூழல்; ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்வில் சமரசம்- வெளியான உண்மை'' ஆளுநர் சொன்னது என்ன?
''அதிர்ச்சியூட்டும் அரசுப்பள்ளி சூழல்; ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்வில் சமரசம்- வெளியான உண்மை'' ஆளுநர் சொன்னது என்ன?
US Tariff Warning: “ட்ரம்ப்-புதின் பேச்சுவார்த்தை சரியா போகலைன்னா இந்தியாவுக்கு இருக்கு“ - அமெரிக்கா எச்சரிக்கை
“ட்ரம்ப்-புதின் பேச்சுவார்த்தை சரியா போகலைன்னா இந்தியாவுக்கு இருக்கு“ - அமெரிக்கா எச்சரிக்கை
TN TET 2025: ஆசிரியர் தகுதித் தேர்வு தேதி மாற்றம் - தேர்வு வாரியம் கூறும் காரணம் என்ன.? விவரம் இதோ
ஆசிரியர் தகுதித் தேர்வு தேதி மாற்றம் - தேர்வு வாரியம் கூறும் காரணம் என்ன.? விவரம் இதோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP vs OPS | மீண்டும் கூட்டணியில் OPS? நிராகரித்த பி.எல். சந்தோஷ்! தூது போன அண்ணாமலை!
Independence Day 2025: சுதந்திர தின விழா கொண்டாட்டம் ஜொலிக்கும் சென்னை 10,000 போலீசார் குவிப்பு
வகுப்பறைக்கு வந்த மாணவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு பதற வைக்கும் CCTV காட்சி | Student Died Classroom
முதல் மனைவியுடன் மாதம்பட்டி 2-வது மனைவியின் நிலைமை? | Joy Crizildaa | Madhampatti Rangaraj Marriage
Independence Day Rehearsal : 79-வது சுதந்திர தின விழா காவல்துறை அணிவகுப்பு ஒத்திகை தயாராகும்  கோட்டை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt Warning: போடு சக்க.! “வசூல் வேட்டை நடத்தினா, வரி வசூல் செய்வோம்“ - ஆம்னி பேருந்துகளுக்கு அரசு எச்சரிக்கை
போடு சக்க.! “வசூல் வேட்டை நடத்தினா, வரி வசூல் செய்வோம்“ - ஆம்னி பேருந்துகளுக்கு அரசு எச்சரிக்கை
''அதிர்ச்சியூட்டும் அரசுப்பள்ளி சூழல்; ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்வில் சமரசம்- வெளியான உண்மை'' ஆளுநர் சொன்னது என்ன?
''அதிர்ச்சியூட்டும் அரசுப்பள்ளி சூழல்; ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்வில் சமரசம்- வெளியான உண்மை'' ஆளுநர் சொன்னது என்ன?
US Tariff Warning: “ட்ரம்ப்-புதின் பேச்சுவார்த்தை சரியா போகலைன்னா இந்தியாவுக்கு இருக்கு“ - அமெரிக்கா எச்சரிக்கை
“ட்ரம்ப்-புதின் பேச்சுவார்த்தை சரியா போகலைன்னா இந்தியாவுக்கு இருக்கு“ - அமெரிக்கா எச்சரிக்கை
TN TET 2025: ஆசிரியர் தகுதித் தேர்வு தேதி மாற்றம் - தேர்வு வாரியம் கூறும் காரணம் என்ன.? விவரம் இதோ
ஆசிரியர் தகுதித் தேர்வு தேதி மாற்றம் - தேர்வு வாரியம் கூறும் காரணம் என்ன.? விவரம் இதோ
தமிழகத்தில் தற்கொலைகள் உச்சம்! பாலியல் குற்றங்கள், போதைப்பொருள் பயன்பாடு! அதிர்ச்சி தரும் ஆளுநர் உரை
தமிழகத்தில் தற்கொலைகள் உச்சம்! பாலியல் குற்றங்கள், போதைப்பொருள் பயன்பாடு! அதிர்ச்சி தரும் ஆளுநர் உரை
J&K Cloudburst: ஜம்மு காஷ்மீரில் மேக வெடிப்பால் ஏற்பட்ட வெள்ளம்; 38 பேர் பலி - மீட்புப் பணியில் இணைந்த ராணுவம்
ஜம்மு காஷ்மீரில் மேக வெடிப்பால் ஏற்பட்ட வெள்ளம்; 38 பேர் பலி - மீட்புப் பணியில் இணைந்த ராணுவம்
SC on Aadhar Card: அப்படி சொல்லுங்க ஜட்ஜ் ஐயா.! ஆதாரை அடையாள ஆவணமாக ஏற்க EC-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
அப்படி சொல்லுங்க ஜட்ஜ் ஐயா.! ஆதாரை அடையாள ஆவணமாக ஏற்க EC-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
எழுந்த விமர்சனம்; ’’தூய்மைப் பணியாளர்களின் மாண்பை..’’ முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
எழுந்த விமர்சனம்; ’’தூய்மைப் பணியாளர்களின் மாண்பை..’’ முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
Embed widget