TN Corona LIVE Updates : ஐசியூ வரை சிகிச்சை பெற்றவர்கள் 4 முதல் 8 வாரம் வரை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளக்கூடாது
இன்றைய கொரோனா நோய்த் தொற்று தொடர்பான அனைத்து செய்திகளையும் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.

Background
நாடு முழுவதும் முதன்முறையாக நேற்று ஒரே நாளில் நான்கு லட்சத்திற்கும் அதிகமான நோயாளிகள் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 4,22,436 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 14 நாட்களில் சராசரியாக தினசரி குணமடைபவர்களின் எண்ணிக்கை சுமார் 3,55,944 ஆக பதிவாகியுள்ளது. இதன்மூலம், இந்தியாவில் கொரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வருபவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறையைத் தொடங்கியுள்ளது.
இருப்பினும், தினசரி கொரோனா ஏற்படும் கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை அதிகைர்த்துக் கொண்டே வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 4,329 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கர்நாடகாவில் 38,603 பேரும், தமிழகத்தில் 33,075 பேரும் புதிதாகத் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
மாநில சுயாட்சி முழக்கமும்; திமுக அமைச்சர்களின் கருத்தும்!
தடுப்பூசி மற்றும் உயிர்காக்கும் மருந்துகளை தமிழ்நாட்டிலேயே தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்தார். இதுகுறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பில், " குறைந்தபட்சம் 50 கோடி ரூபாய் முதலீடு செய்யும் இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுடன் டிட்கோ நிறுவனம், கூட்டாண்மை அடிப்படையில் ஆக்சிஜன் தடுப்பூசிகள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் உற்பத்திக்கான உட்கட்டமைப்புகளை விரைவில் நிறுவிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று தெரிவிக்கப்பட்டது.
திமுக அரசின் செயல்பாடு; மாநில சுயாட்சியா ? மத்திய அரசு எதிர்ப்பா ?
மத்திய அரசின் புதிய நெறிமுறைகள்
- கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நபர்கள் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்த 3 மாதங்கள் வரை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளக்கூடாது.
- அதேபோல் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு பிளாஸ்மா சிகிச்சை செய்து கொண்ட நபர்களுக்கும், மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகிய மூன்று மாதங்கள் வரை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளக்கூடாது.
- முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு இரண்டாவது டோஸ் போடுவதற்குள் கொரோனா தொற்று ஏற்பட்டால், குணமாகி மூன்று மாதங்களுக்கு பின்புதான் இரண்டாவது டோஸ் செலுத்திக்கொள்ள வேண்டும்.
- வேறு நோய்கள் காரணமாக ஐசியூ வரை சிகிச்சை பெற்றவர்கள் 4 முதல் 8 வரை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள கூடாது.
யாரெல்லாம் CT Scan எடுக்க வேண்டும்?
யாரெல்லாம் CT Scan எடுக்க வேண்டும்?
— Greater Chennai Corporation (@chennaicorp) May 19, 2021
நடிகர் கார்த்தியுடன், மக்களின் கோவிட் பற்றிய கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு பதிலளிக்கிறார் Dr.E.தேரணிராஜன், கல்வி தலைவர், ( மதராஸ் மருத்துவ கல்லூரி & ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை ).@Karthi_Offl pic.twitter.com/Dk2WAECmDE





















