TN Corona LIVE Updates : ஐசியூ வரை சிகிச்சை பெற்றவர்கள் 4 முதல் 8 வாரம் வரை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளக்கூடாது
இன்றைய கொரோனா நோய்த் தொற்று தொடர்பான அனைத்து செய்திகளையும் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.
LIVE
Background
நாடு முழுவதும் முதன்முறையாக நேற்று ஒரே நாளில் நான்கு லட்சத்திற்கும் அதிகமான நோயாளிகள் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 4,22,436 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 14 நாட்களில் சராசரியாக தினசரி குணமடைபவர்களின் எண்ணிக்கை சுமார் 3,55,944 ஆக பதிவாகியுள்ளது. இதன்மூலம், இந்தியாவில் கொரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வருபவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறையைத் தொடங்கியுள்ளது.
இருப்பினும், தினசரி கொரோனா ஏற்படும் கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை அதிகைர்த்துக் கொண்டே வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 4,329 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கர்நாடகாவில் 38,603 பேரும், தமிழகத்தில் 33,075 பேரும் புதிதாகத் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
மாநில சுயாட்சி முழக்கமும்; திமுக அமைச்சர்களின் கருத்தும்!
தடுப்பூசி மற்றும் உயிர்காக்கும் மருந்துகளை தமிழ்நாட்டிலேயே தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்தார். இதுகுறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பில், " குறைந்தபட்சம் 50 கோடி ரூபாய் முதலீடு செய்யும் இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுடன் டிட்கோ நிறுவனம், கூட்டாண்மை அடிப்படையில் ஆக்சிஜன் தடுப்பூசிகள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் உற்பத்திக்கான உட்கட்டமைப்புகளை விரைவில் நிறுவிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று தெரிவிக்கப்பட்டது.
திமுக அரசின் செயல்பாடு; மாநில சுயாட்சியா ? மத்திய அரசு எதிர்ப்பா ?
மத்திய அரசின் புதிய நெறிமுறைகள்
- கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நபர்கள் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்த 3 மாதங்கள் வரை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளக்கூடாது.
- அதேபோல் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு பிளாஸ்மா சிகிச்சை செய்து கொண்ட நபர்களுக்கும், மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகிய மூன்று மாதங்கள் வரை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளக்கூடாது.
- முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு இரண்டாவது டோஸ் போடுவதற்குள் கொரோனா தொற்று ஏற்பட்டால், குணமாகி மூன்று மாதங்களுக்கு பின்புதான் இரண்டாவது டோஸ் செலுத்திக்கொள்ள வேண்டும்.
- வேறு நோய்கள் காரணமாக ஐசியூ வரை சிகிச்சை பெற்றவர்கள் 4 முதல் 8 வரை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள கூடாது.
யாரெல்லாம் CT Scan எடுக்க வேண்டும்?
யாரெல்லாம் CT Scan எடுக்க வேண்டும்?
— Greater Chennai Corporation (@chennaicorp) May 19, 2021
நடிகர் கார்த்தியுடன், மக்களின் கோவிட் பற்றிய கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு பதிலளிக்கிறார் Dr.E.தேரணிராஜன், கல்வி தலைவர், ( மதராஸ் மருத்துவ கல்லூரி & ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை ).@Karthi_Offl pic.twitter.com/Dk2WAECmDE
மும்பையிலிருந்து 1 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தன
மும்பையிலிருந்து 1 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் விமானம் மூலம் சென்னை வந்தன
குணமானவர்களுக்கு மூன்று மாதத்துக்கு பிறகு தடுப்பூசி
கொரோனா தொற்றில் இருந்து குணமானவர்களுக்கு மூன்று மாதங்களுக்கு பிறகு தடுப்பூசி போடலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது
எஃகு ஆலைகள் 4,000 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி
நாட்டில் எஃகு ஆலைகள் தினமும் 4,000 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான திரவ மருத்துவ ஆக்சிஜனை தொடர்ந்து விநியோகித்து வருவதாக எஃகு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சென்னை மண்டல வாரியாக கொரோனா பரவல் விவரம்
சென்னையில் தர்போது 48,455 பேர் கொரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
ஐஏஎஸ் அதிகாரிகள் ஒரு நாள் ஊதியத்தை வழங்க முடிவு
தமிழகத்திலுள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் தங்களது ஒருநாள் ஊதியத்தை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்க முன்வந்துள்ளனர்.
4530 பேர் கொரோனா நோய்த் தோற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்
கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 4530 பேர் கொரோனா நோய்த் தோற்று காரணமாக உயிரிழந்துள்ளனர். இதில், அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 1291 கொரோனா இறப்புகள் ஏற்பட்டுள்ளன.
மகாராஷ்டிரா மாநிலத்தில் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்க காரணம் என்ன?
கடந்த 24 மணி நேரத்தில் பதிவு செய்யப்பட்ட கொரோனா இறப்புகளுடன், முந்தைய வாரங்களில் விடுபட்ட 612 கொரோனா இறப்புகளை அம்மாநில அரசு இணைத்துள்ளது. இதன், காரணாமாக அங்கு கொரோனா இறப்பு எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.
கொரோனா தொற்றிலிருந்து குணமடைவோர் வீதம் 86.23 சதவீதமாக உள்ளது
கடந்த 6 நாட்களாக, நாடு முழுவதும் புதிய பாதிப்புகளை விட கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.
]கடந்த 24 மணி நேரத்தில் 3,89,851 பேர் குணமடைந்துள்ளனர். நம் நாட்டில் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 21986363 ஆக அதிகரித்துள்ளது. தேசிய அளவில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைவோர் வீதம் 86.23 சதவீதமாக உள்ளது.
இந்தியாவில் தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3226719 ஆக இன்று குறைந்துள்ளது . இது நாட்டின் மொத்த பாதிப்பில் 12.66% ஆகும்.
காவல் துறையினரின் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
கோவிட் கால பாதுகாப்புப் பணியில் உயிர்த் தியாகம் செய்த காவல் துறையினரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தினார்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
and tablets