மேலும் அறிய

Tussel in Afghanistan: ஆப்கானிஸ்தானில் நடப்பது இதுதான்.. அமைதியாய் இருக்கும் இந்தியா.. முழு விவரம்!

அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறியவதற்கு, எதிர்ப்புகளை இந்தியா அழுத்தமாகவும்,  வெளிப்படையாகவும் தெரிவித்திருக்க வேண்டும்- நிருப்பம மேனன் ராவ்

ஆப்கானிஸ்தான் நாட்டில் பாதிக்கும் மேற்பட்ட நகரங்களை தாலிபான் படையினர் ஆக்கிரமித்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில், நாட்டின் முக்கிய நகரங்களான காந்தகார், ஹெராத் தாலிபான் படைகளால் கைப்பற்றப்பட்டது. 

செப்டம்பர் 11, 2001 தாக்குதலிற்குப் பின்னர் அமெரிக்கா ஆப்கானில் உள்ள அல்-காயிதா வலையமைப்பைத் தகர்க்க இராணுவ நடவடிக்கையை ஆப்கானித்தான் மீது நடத்தியது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறியது. இருப்பினும், ஆப்கானிஸ்தானில் தாலிபன்களின் இருத்தலை அமெரிக்காவால் நீக்க முடியவில்லை.  

இதனையடுத்து, ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்துவது தொடர்பாக அந்நாட்டு அரசு பிரதிநிதிகளுக்கும் – தாலிபான் அமைப்புக்கும் இடையேயான பேச்சுவார்த்தையும் அமெரிக்கா மேற்கொண்டது. இதில், உடன்பாடுகள் எட்டப்படாத நிலையில், பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.          

அடுத்த சில வாரங்களில், அமெரிக்கப் படை வெளியேறுவதற்கு முன்பே, ஆப்கானிஸ்தானில் தாலிபான் வன்முறை சம்பவங்களை மேற்கொண்டன. 


Tussel in Afghanistan: ஆப்கானிஸ்தானில் நடப்பது இதுதான்.. அமைதியாய் இருக்கும் இந்தியா.. முழு விவரம்!

தாலிபானின் வன்முறை சமபவங்களுக்கு நடுவில் தான் அமெரிக்கப் படைகள் வெளியேறின. கடந்த, மே மாதத் தொடக்கத்தில் இருந்து ஆப்கானிஸ்தானில்  பல மாவட்டங்களை தலிபான் கைப்பற்றத் தொடங்கியது. தற்போது, நாட்டின் 220க்கும் அதிகமான மாவட்டங்கள் தற்போது தாலிபான் படையினரின் ஆக்கிரமிப்பில் உள்ளன.   

நாட்டின் 15 மாகாணாங்களின் தலைநகரங்கள் தற்போது தாலிபான்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். ஹெராத், சர்-இ-புல், குண்டூஸ், ஷேபர்கான், நிம்ரோஸ் மாகாணத் தலைநகர் ஸ்ராஞ், கந்தஹார், ஹெராத் உள்ளிட்ட முக்கிய தலைநகரங்கள் வீழ்த்தப்பட்டுள்ளன. 

இந்த ஆக்கிரமிப்பின் உச்சகட்ட சம்பவமாக, இரு தினங்களுக்கு முன்பாக குண்டூஸ் மாகாணத்தில் உள்ள இராணுவத் தலைமையகத்தை தாலிபான் கைப்பற்றியது. நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள், துப்பாக்கி கருவியை தாலிபான் படைகளிடம் ஒப்படைத்து சரணடையும் வீடியோ சமூக ஊடகங்களில் பேசும் பொருளானது.  

ஆப்கானிஸ்தானில் ராணுவக் கட்டமைப்பு ஏன் சரிந்தது? 

 அமெரிக்கா வெளியுறவுக் கொள்கையின் மிகப்பெரிய தோல்வியின் அடையாளமாக ஆப்கானிஸ்தான் உள்ளது. 20 ஆண்டுகளாக நவீன தொழில்நுட்ப வசதியுடன் கூடிய  பாதுகாப்புப் படையை உருவாக்க அமெரிக்கா முனைந்தது. முழுமையான எல்லைப் பாதுகாப்புப் படையை உருவாக்கப்பட்டு நாட்டின் குடிமக்களைப் பாதுகாக்கவும், அதன் மூலம் மக்களாட்சி நிறுவப்பட வேண்டும் என்பதே      பராக் ஒபாமாவின் முக்கியத் திட்டமாக இருந்தது. இருப்பினும், அமெரிக்க அரசியலில் ஏற்பட்ட அடுத்தடுத்த மாற்றங்கள் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையிலும் சரிவை ஏற்படுத்தின. 

மேலும், ஆப்கானிஸ்தான் நிர்வாகத்தில் காணப்பட்ட ஊழல் போக்குகளும் அதன் ராணுவக் கட்டமைப்பை பலவீனமாக்கின. உதாரணமாக, ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையில் 3 லட்சம் வீரர்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால், உண்மையில் இதில் 6ல் 1 பங்கு எண்ணிக்கையிலான ராணுவ வீரர்கள் கூட அங்கு இல்லை என்று கூறப்படுகிறது. மேலும், நவீன தொழில்நுட்ப கட்டமைப்புக்கு முக்கியத்துவம்  கொடுத்த அளவுக்கு மனித வளங்களுக்கு முக்கியத்தும் அளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. 


Tussel in Afghanistan: ஆப்கானிஸ்தானில் நடப்பது இதுதான்.. அமைதியாய் இருக்கும் இந்தியா.. முழு விவரம்!

இந்தியாவின் உத்தி என்ன? : ஆப்கானிஸ்தான் மீதான இந்தியாவின் உத்தி என்ன? என்று முன்னாள் இந்திய வெளியுறவுத் துறை அதிகாரி நிருபமா மேனன் ராவ் கேள்வி எழுப்பியுள்ளார்.  

ஆப்கானிஸ்தான் மீதான இந்தியாவின் உத்தி என்ன?  ராவல்பிண்டியால் தூண்டப்பட்ட தாலிபான் படையினர் ஆப்கானிஸ்தானில் ஆதிக்கம் செலுத்தினால் அதன் தாக்கங்கள் என்னவாக இருக்கும் என்பதை நாம் உணர்ந்துளோம் என்று நம்புகிறேன். அது போல, இரண்டு விரோதமான அண்டை நாடுகளால் நமது நிலைமை மிகவும் மோசமடையும்.

கார் விபத்து நடக்கும்போது நாம் அமைதியான முறையில் வேடிக்கைப் பார்ப்போமா? நாம் மிகப் பெரிய நாடு.  தன்னாட்சி பொருந்திய நமது வெளியுறவுக் கொள்கையில்  பெருமைப்படுகிறோம். தலைவர்களை பின்பற்றும் சிறிய மேற்கத்திய நாடுகளைப் போல் இந்தியா இருப்பதில்லை.  

இதுபோன்ற ஒரு வருத்தமளிக்கும் நேரங்களில், இந்தியா நிச்சயம் பின்வாங்கக் கூடாது. அங்கு, நமது  துணைத் தூதரகங்கள் மூடப்பட்டுள்ளன. ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக நாம் மேற்கொண்ட பணிகள் அனைத்தும் கேள்விக்குறியாக மாறியுள்ளது.  

மேலும், தலிபான்களுக்கு ஒரு துக்கமான வேண்டுகோளாக நாம் பார்க்கும் எதிர்ப்பின் மூலோபாயத்தை உருவாக்குவதில் அதிக ஆற்றல் மிக்கவராக இருந்தார். ஆனால் நாங்கள் பேருந்தில் ஏறினோம் - சக்கரங்கள் இல்லாத பேருந்து. வரலாறு நம்மை எப்படித் தீர்மானிக்கும்? 

அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறியவதற்கு, எதிர்ப்புகளை இந்தியா அழுத்தமாகவும்,  வெளிப்படையாகவும் தெரிவித்திருக்க வேண்டும். ஆனால், சக்கரம் இல்லாத வண்டியில், இந்தியா பயணம் செய்ய தயாராகி கொண்டு வருகிறோம். வரலாறு எப்படி நம்மை பார்க்கும்? இறுதியில் வென்றது பாகிஸ்தான் தான் " என்று தனது ட்விட்டரில் தெரிவித்தார்.         

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Nishikant Dubey: “மோடிக்கு பாஜக தேவையில்லை, பாஜகவிற்கு தான் மோடி தேவை“; ஒரே போடாய் போட்ட எம்.பி நிஷிகாந்த துபே
“மோடிக்கு பாஜக தேவையில்லை, பாஜகவிற்கு தான் மோடி தேவை“; ஒரே போடாய் போட்ட எம்.பி நிஷிகாந்த துபே
MBBS Counselling 2025: இன்னும் 2 நாளில் தொடங்கும் மருத்துவக் கலந்தாய்வு; தரவரிசைப் பட்டியல், மாநில கலந்தாய்வு, வகுப்புகள் எப்போது?
MBBS Counselling 2025: இன்னும் 2 நாளில் தொடங்கும் மருத்துவக் கலந்தாய்வு; தரவரிசைப் பட்டியல், மாநில கலந்தாய்வு, வகுப்புகள் எப்போது?
IPL Players Release: நோ கருணை.. வீரர்களை வெட்டிவிட தயாரான ஓனர்கள் - ஜொலிக்காத ஐபிஎஸ் ஸ்டார்களுக்கு கெட்-அவுட்
IPL Players Release: நோ கருணை.. வீரர்களை வெட்டிவிட தயாரான ஓனர்கள் - ஜொலிக்காத ஐபிஎஸ் ஸ்டார்களுக்கு கெட்-அவுட்
Edappadi Palanisamy: “தனித்தே ஆட்சி“, அண்ணாமலைக்கு பதிலடி; தவெக கூட்டணி குறித்து சூசக பதில் - என்ன சொன்னார் இபிஎஸ்.?
“தனித்தே ஆட்சி“, அண்ணாமலைக்கு பதிலடி; தவெக கூட்டணி குறித்து சூசக பதில் - என்ன சொன்னார் இபிஎஸ்.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Congress DMK Alliance | ”2026-ல் கூட்டணி ஆட்சிதான்”புயலை கிளப்பும் காங்கிரஸ் மீண்டும் வெடித்த மோதல்?
Spicejet Flight Women Fight : ’’சீட் பெல்ட் போட முடியாது’’PILOT அறைக்குள் சென்ற பெண்கள்அவசரமாக தரையிறங்கிய விமானம்
NDA Alliance | வெளியேற்றப்படும் OPS, TTV? எடப்பாடியை நம்பும் அமித்ஷா! வெளுத்து வாங்கிய புகழேந்தி
PMK ADMK Alliance | கூட்டணிக்கு அழைத்த EPS ”ஆட்சியில் பங்கு வேண்டும்” செக் வைத்த அன்புமணி
O Panneerselvam | செப்டம்பரில் புது கட்சி.. OPS எடுத்த அஸ்திரம்! ஐடியா கொடுத்த அமித்ஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Nishikant Dubey: “மோடிக்கு பாஜக தேவையில்லை, பாஜகவிற்கு தான் மோடி தேவை“; ஒரே போடாய் போட்ட எம்.பி நிஷிகாந்த துபே
“மோடிக்கு பாஜக தேவையில்லை, பாஜகவிற்கு தான் மோடி தேவை“; ஒரே போடாய் போட்ட எம்.பி நிஷிகாந்த துபே
MBBS Counselling 2025: இன்னும் 2 நாளில் தொடங்கும் மருத்துவக் கலந்தாய்வு; தரவரிசைப் பட்டியல், மாநில கலந்தாய்வு, வகுப்புகள் எப்போது?
MBBS Counselling 2025: இன்னும் 2 நாளில் தொடங்கும் மருத்துவக் கலந்தாய்வு; தரவரிசைப் பட்டியல், மாநில கலந்தாய்வு, வகுப்புகள் எப்போது?
IPL Players Release: நோ கருணை.. வீரர்களை வெட்டிவிட தயாரான ஓனர்கள் - ஜொலிக்காத ஐபிஎஸ் ஸ்டார்களுக்கு கெட்-அவுட்
IPL Players Release: நோ கருணை.. வீரர்களை வெட்டிவிட தயாரான ஓனர்கள் - ஜொலிக்காத ஐபிஎஸ் ஸ்டார்களுக்கு கெட்-அவுட்
Edappadi Palanisamy: “தனித்தே ஆட்சி“, அண்ணாமலைக்கு பதிலடி; தவெக கூட்டணி குறித்து சூசக பதில் - என்ன சொன்னார் இபிஎஸ்.?
“தனித்தே ஆட்சி“, அண்ணாமலைக்கு பதிலடி; தவெக கூட்டணி குறித்து சூசக பதில் - என்ன சொன்னார் இபிஎஸ்.?
அதிரப் போகும் மக்களவை, மாநிலங்களவை – எம்.பிக்களுக்கு சி.எம். போட்ட முக்கிய உத்தரவு!
அதிரப் போகும் மக்களவை, மாநிலங்களவை – எம்.பிக்களுக்கு சி.எம். போட்ட முக்கிய உத்தரவு!
பள்ளிகளில் ப வடிவ இருக்கை கட்டாயமா? அமைச்சர் அன்பில் மகேஸ் சொன்னது என்ன?
பள்ளிகளில் ப வடிவ இருக்கை கட்டாயமா? அமைச்சர் அன்பில் மகேஸ் சொன்னது என்ன?
Viral Video: அஃபயரை போட்டுக் கொடுத்த கேமராமேன்.. கிஸ் கேமில் HR உடன் CEO, பொங்கி எழுந்த நெட்டிசன்கள்
Viral Video: அஃபயரை போட்டுக் கொடுத்த கேமராமேன்.. கிஸ் கேமில் HR உடன் CEO, பொங்கி எழுந்த நெட்டிசன்கள்
INDIA Bloc: பாஜகவை ரவுண்டு கட்ட திட்டம்.. உயிர்பெறும் I.N.D.I., கூட்டணி, கையிலெடுக்கும் அஸ்திரம் என்ன?
INDIA Bloc: பாஜகவை ரவுண்டு கட்ட திட்டம்.. உயிர்பெறும் I.N.D.I., கூட்டணி, கையிலெடுக்கும் அஸ்திரம் என்ன?
Embed widget