மேலும் அறிய

ஏர்போர்ட்டில் வசமாக சிக்கிய 4 பேர்! ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளா? தலைவனுக்கு வலைவிரிக்கும் போலீஸ்!

அகமதாபாத் விமான நிலையத்தில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சமீபத்தில்தான், அகமதாபாத் விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

பிடிப்பட்டவரகள் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளா? 

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நபர்கள், இலங்கையை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. தங்களை கட்டுப்பாட்டில் வைத்திருந்த முக்கியமான நபருக்காக விமான நிலையத்தில் அவர்கள் காத்திருந்ததாகவும் அப்போது அவர்கள் குஜராத் தீவிரவாத தடுப்பு பிரிவு (ஏடிஎஸ்) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நபர்களுக்கு அந்த முக்கியமான நபர் வேலை ஒன்று தருவதாக இருந்ததாகவும் அவர்களின் போன்களில் இருந்து பல முக்கியமான மெஸேஜ்களை போலீசார் மீட்டுள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் தாக்குதல் நடத்துவதற்கு பயன்படுத்தக்கூடிய சில ஆயுதங்களை அவர்களுக்கு தர பாகிஸ்தான் ஏஜெண்டுகள் உறுதியளித்திருக்கின்றனர். ஆனால் அதற்கு முன்பே அவர்கள் பிடிபட்டனர். இலங்கையில் இருந்து சென்னை வழியாக அவர்கள் அகமதாபாத்துக்கு வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், செல்ல வேண்டிய இடத்திற்கு சென்றடைவதற்கு முன்பே அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

குஜராத்தில் தொடர் பரபரப்பு:

கடந்த மே 12ஆம் தேதி, அகமதாபாத் விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சலில் விடுக்கப்பட்டது. இதையடுத்து, பாதுகாப்பு அதிகாரிகள் விமான நிலைய வளாகத்தில் சோதனை செய்தனர். அதில், பொய்யாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரிய வந்தது.

சோதனையில் சந்தேகத்திற்குரிய பொருள்கள் எதுவும் கிடைக்கவில்லை. இதுகுறித்து காவல் ஆணையர் ஜி.எஸ். மாலிக் விவரிக்கையில், "சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் ஐடிக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, விமான நிலையத்தில் இருந்த பாதுகாப்புப் பணியாளர்கள் விமான நிலையம் முழுவதையும் சோதனை செய்தனர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், அல்கொய்தாவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மூன்று பேரை ராஜ்கோட்டில் இருந்து தீவிரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.

வங்காளதேச தீவிரவாதியின் கட்டுப்பாட்டில் இவர்கள் இருந்ததாகவும் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பிற்கு ஆட்களை சேர்ப்பதற்காக பணியாற்றி வந்ததாகவும் கூறப்படுகிறது.

நாட்டில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடந்து வரும் நிலையில், குஜராத்தில் தீவிரவாதிகள் பிடிப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 7ஆம் தேதி, மூன்றாம் கட்ட வாக்குப்பதிவின்போது, குஜராத்தில் மக்களவை தேர்தல் நடந்தது. 

இதையும் படிக்க: Liquid Nitrogen: பெங்களூரில் அதிர்ச்சி.. திரவ நைட்ரஜன் கலந்த பான் சாப்பிட்ட சிறுமி வயிற்றில் ஓட்டை!

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN Weather: ஜனவரியில் புயல்? உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி - கனமழை எங்கெல்லாம்? தமிழக வானிலை அறிக்கை
TN Weather: ஜனவரியில் புயல்? உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி - கனமழை எங்கெல்லாம்? தமிழக வானிலை அறிக்கை
TN Cabinet: சம்பள உயர்வு, கவர்ச்சி திட்டங்கள்? இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் - சி.எம்., ஸ்டாலின் முடிவு என்ன?
TN Cabinet: சம்பள உயர்வு, கவர்ச்சி திட்டங்கள்? இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் - சி.எம்., ஸ்டாலின் முடிவு என்ன?
Jana Nayagan Censor: சென்சார் ஓவர்..! என்ன சான்று? விஜயின் கடைசி திரைப்படம் எவ்வளவு நேரம் ஓடும்? - ரிப்போர்ட்
Jana Nayagan Censor: சென்சார் ஓவர்..! என்ன சான்று? விஜயின் கடைசி திரைப்படம் எவ்வளவு நேரம் ஓடும்? - ரிப்போர்ட்
DMK vs Congress: காங்கிரசை கழட்டி விட தயாராகும் திமுக.? ஸ்டாலின் போட்ட செம பிளான்- திடீர் ட்விஸ்ட்
காங்கிரசை கழட்டி விட தயாராகும் திமுக.? ஸ்டாலின் போட்ட செம பிளான்- திடீர் ட்விஸ்ட்
ABP Premium

வீடியோ

Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather: ஜனவரியில் புயல்? உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி - கனமழை எங்கெல்லாம்? தமிழக வானிலை அறிக்கை
TN Weather: ஜனவரியில் புயல்? உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி - கனமழை எங்கெல்லாம்? தமிழக வானிலை அறிக்கை
TN Cabinet: சம்பள உயர்வு, கவர்ச்சி திட்டங்கள்? இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் - சி.எம்., ஸ்டாலின் முடிவு என்ன?
TN Cabinet: சம்பள உயர்வு, கவர்ச்சி திட்டங்கள்? இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் - சி.எம்., ஸ்டாலின் முடிவு என்ன?
Jana Nayagan Censor: சென்சார் ஓவர்..! என்ன சான்று? விஜயின் கடைசி திரைப்படம் எவ்வளவு நேரம் ஓடும்? - ரிப்போர்ட்
Jana Nayagan Censor: சென்சார் ஓவர்..! என்ன சான்று? விஜயின் கடைசி திரைப்படம் எவ்வளவு நேரம் ஓடும்? - ரிப்போர்ட்
DMK vs Congress: காங்கிரசை கழட்டி விட தயாராகும் திமுக.? ஸ்டாலின் போட்ட செம பிளான்- திடீர் ட்விஸ்ட்
காங்கிரசை கழட்டி விட தயாராகும் திமுக.? ஸ்டாலின் போட்ட செம பிளான்- திடீர் ட்விஸ்ட்
CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
Embed widget