மேலும் அறிய

சடங்குகள் செய்யவில்லை என்றால் இந்து முறை திருமணம் செல்லாதா? உச்சநீதிமன்றம் பரபரப்பு கருத்து!

Hindu Marriage: சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்களை பின்பற்றினால் மட்டுமே இந்து திருமணம் செல்லும். அப்படி செய்யவில்லை என்றால், அது இந்து திருமணமாக கருதப்படாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Hindu Marriage: இந்து திருமண சட்டம், 1955இன்படி சட்டப்பூர்வமாக பின்பற்ற வேண்டிய தேவைகள் மற்றும் பேணி பாதுகாக்க வேண்டிய புனித தன்மை குறித்து உச்ச நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.

இந்து திருமணம் குறித்து நீதிமன்றம் பரபரப்பு கருத்து:

தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட விவாகரத்து வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பெண் ஒருவர் மனு தாக்கல் செய்துள்ளார். விசாரணையின்போது, தங்களின் திருமணம் செல்லாது என அறிவிக்கக் கோரி அந்த பெண்ணும் அவரது கணவரும் இணைந்து மனு தாக்கல் செய்ய ஒப்பு கொண்டனர்.

தங்களின் திருமணத்தில் முறையான பழக்கவழக்கங்கள், சடங்குகள், சம்பிரதாயங்கள் எதுவும் பின்பற்றவில்லை. ஆனால், தேவை ஏற்பட்டதாலும் நெருக்கடி காரணமாகவும் பதிவு செய்யப்பட்ட வேத பொது நலக் குழுவிடம் திருமணம் நடந்ததாக சான்றிதழ் பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

அந்த சான்றிதழின் அடிப்படையில், உத்தரப் பிரதேச பதிவு விதி, 2017 இன் கீழ், திருமண பதிவு சான்றிதழை பெற முயன்றோம். இறுதியில், திருமணப் பதிவாளரால் திருமணச் சான்றிதழ் வழங்கப்பட்டது என கணவன், மனைவி சேர்ந்து மனு தாக்கல் செய்தனர்.

"சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்களை பின்பற்ற வேண்டும்"

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர் கொண்ட அமர்வு, "புனிதமான ஹோம குண்டத்தை சுற்றி ஏழு முறை வலம் வருவது உள்பட முறையான சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்களை பின்பற்றினால் மட்டுமே இந்து திருமணம் செல்லும்.

அப்படி செய்யவில்லை என்றால், அது இந்து திருமணமாக கருதப்படாது. சச்சரவுகள் ஏற்படும்போது இந்த சடங்குகள் நடந்ததற்கான ஆதாரங்களை சமர்பிக்க வேண்டும். இந்து திருமணச் சட்டத்தின் 8வது பிரிவின் கீழ் இந்து திருமணத்தை பதிவு செய்வது, திருமணத்திற்கான ஆதாரத்தை அளிக்க வேண்டும்.

இந்து திருமண சட்டம், பிரிவு 7இன்படி, திருமணம் நிச்சயிக்கப்படவில்லை என்றால் சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்படாது. முறையான சடங்குகளுடன் இந்து திருமணம் நடைபெறவில்லை என்றால் சட்டத்தின் 8வது பிரிவின் விதிகளின் கீழ் திருமணப் பதிவு அதிகாரி அத்தகைய திருமணத்தை பதிவு செய்ய முடியாது.

எனவே, தம்பதியினர் திருமணம் செய்து கொண்டதாக சான்றிதழ் வழங்கப்பட்டாலும் கூட, சட்டத்தின் 7-வது பிரிவின்படி திருமண விழா நடைபெறவில்லை என்றால், அத்தகைய திருமணத்தை பிரிவு 8-ன் கீழ் பதிவு செய்வது அத்தகைய திருமணத்திற்கு சட்டபூர்வமான அங்கீகாரமும் அளிக்கப்படாது.

நாம் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, திருமணப் பதிவாளரிடம் திருமணத்தைப் பதிவுசெய்து, அதன்பிறகு வழங்கப்படும் சான்றிதழானது, இருதரப்பினரும் இந்து திருமணத்தை நிச்சயப்படுத்திக் கொண்டனர் என்பதை உறுதிப்படுத்தாது" என்றார்.

 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
Maruti Suzuki Discount: 2.15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. Fronx முதல் Baleno வரை - மாருதி சுசுகியின் சலுகை எப்படி?
Maruti Suzuki Discount: 2.15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. Fronx முதல் Baleno வரை - மாருதி சுசுகியின் சலுகை எப்படி?
Erode Power Shutdown: ஈரோட்டில் நாளை (06-12-25) இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது! மின் வாரியம் அறிவிப்பு
Erode Power Shutdown: ஈரோட்டில் நாளை (06-12-25) இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது! மின் வாரியம் அறிவிப்பு
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
Embed widget