மேலும் அறிய

"அம்மானு என அழைச்சு மிகுந்த மரியாதை கொடுத்து இருக்கீங்க" - தெலங்கானா மக்களிடம் சோனியா காந்தி உருக்கம்

காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்குமாறு தெலங்கானா மக்களுக்கு சோனியா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தெலங்கானாவை கடந்த ஒன்பதரை ஆண்டுகளாக பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சி ஆட்சி செய்து வருகிறது. அக்கட்சியின் தலைவர் கே. சந்திரசேகர் ராவ் தெலங்கானா மாநில முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார். வரும் நவம்பர் 30ஆம் தேதி, அங்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்ற கே.சி.ஆர் முனைப்பு காட்டி வருகிறார்.

ஆனால், கே.சி.ஆரை தோற்கடித்து தெலங்கானாவில் முதல்முறையாக ஆட்சி அமைக்க காங்கிரஸ் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. ஒருங்கிணைந்த ஆந்திரபிரதேசம், ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்தது. ஆந்திராவில் இருந்து தெலங்கானா பிரிக்கப்பட்ட பிறகு, தெலங்கானாவில் காங்கிரஸ் பலவீனம் அடைந்தது.

தெலங்கானா அரசியலில் திருப்பம் ஏற்படுமா?

ஆனால், தெலங்கானா காங்கிரஸ் தலைவராக ரேவந்த் ரெட்டி நியமிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் எடுத்த முயற்சிகள் பெரிய அளவில் பலன் தந்தது என்றே சொல்லலாம். தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே, காங்கிரஸ் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட தொடங்கினர்.

தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து, பெண்கள், விவசாயிகள், இளைஞர்கள், ஒடுக்கப்பட்ட சமூகத்தினர், சிறுபான்மை சமூகத்தினர் ஆகியோரை குறிவைத்து தேர்தல் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன.

இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை அளித்துள்ளது. நாளை மறுநாள் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் முடிவடைகிறது.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்குமாறு தெலங்கானா மக்களுக்கு சோனியா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து விரிவாக பேசியுள்ள அவர், "தெலங்கானாவின் சகோதரிகள், சகோதரர்கள், மகன்கள் மற்றும் மகள்கள் மாற்றத்திற்காக வாக்களிக்க வேண்டும். காங்கிரஸுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

மக்களுக்கு சோனியா காந்தி வேண்டுகோள்:

மக்களுக்கு வாக்கு கொடுத்தப்படி தெலங்கானா மாநிலத்தை உருவாக்கினேன். தெலங்கானா மக்களின் அன்புக்கும் மரியாதைக்கும் நான் எப்போதும் நன்றியுள்ளவராக இருப்பேன். சோனியா அம்மா என்று அழைப்பதன் மூலம் நீங்கள் எனக்கு மிகுந்த மரியாதை அளித்துள்ளீர்கள். அதற்கு நான் எப்போதும் நன்றியுள்ளவனாக இருப்பேன்" என்றார்.

வெளியான பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் காங்கிரஸ் கட்சியே ஆட்சி அமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சில கருத்துக்கணிப்புகளில், எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காது. தொடங்கு சட்டமன்றமே அமையும் என கூறப்பட்டுள்ளது. 

மொத்தமுள்ள 119 சட்டப்பேரவை தொகுதிகளில் பெரும்பாலான இடங்களில் காங்கிரஸ் கட்சிக்கும் பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சிக்கும் நேரடி போட்டி நிலவுகிறது. சில தொகுதிகளில் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியும் சில தொகுதிகளில் பாஜகவும் மும்முனை போட்டியை ஏற்படுத்துகிறது.



About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Shubman Gill: ஸ்கெட்ச் போட்டு கில்லை தூக்கிய பிசிசிஐ? வார்னிங்கில் கேப்டன் சூர்யகுமார்? - கடைசி நேர ட்விஸ்ட்
Shubman Gill: ஸ்கெட்ச் போட்டு கில்லை தூக்கிய பிசிசிஐ? வார்னிங்கில் கேப்டன் சூர்யகுமார்? - கடைசி நேர ட்விஸ்ட்
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Shubman Gill: ஸ்கெட்ச் போட்டு கில்லை தூக்கிய பிசிசிஐ? வார்னிங்கில் கேப்டன் சூர்யகுமார்? - கடைசி நேர ட்விஸ்ட்
Shubman Gill: ஸ்கெட்ச் போட்டு கில்லை தூக்கிய பிசிசிஐ? வார்னிங்கில் கேப்டன் சூர்யகுமார்? - கடைசி நேர ட்விஸ்ட்
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
TVK Alliance Talks Team: வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
Embed widget