மேலும் அறிய

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அடைப்பு! அடுத்த திறப்பு எப்போது? முழு விவரம்!

ஐயப்பனை தரிசிக்க பக்தர்கள் ஏறும் இந்த 18 படிகளும், ஆன்மீகத்தில் 18 விதமான தத்துவங்களை அல்லது படிகளைக் குறிப்பதாக நம்பப்படுகிறது.

கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்தில் பெரியார் புலிகள் காப்பகத்தின் அடர்ந்த வனப்பகுதியில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1535 அடி உயரத்தில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. புகழ்பெற்ற இக்கோவிலில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு காலங்களில் பக்தர்கள் இருமுடி கட்டி, 41 நாட்கள் கடும் விரதமிருந்து பதினெட்டு படிகள் வழியாகச் சென்று ஐயப்பனை தரிசிப்பது வழக்கம். ஜாதி, மத பேதமின்றி அனைத்து பக்தர்களும் அனுமதிக்கப்படும் மிகச்சில கோவில்களில் இதுவும் ஒன்று.


சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அடைப்பு! அடுத்த திறப்பு எப்போது? முழு விவரம்!

ஐயப்பனை தரிசிக்க பக்தர்கள் ஏறும் இந்த 18 படிகளும், ஆன்மீகத்தில் 18 விதமான தத்துவங்களை அல்லது படிகளைக் குறிப்பதாக நம்பப்படுகிறது. வழக்கமாக, சபரிமலை ஐயப்பன் கோவில் நடை, ஒவ்வொரு மலையாள மாதத்தின் முதல் நாளும் (முதல் 5 நாட்களுக்கு) மாதாந்திர பூஜைக்காகத் திறக்கப்படுவது வழக்கம். தொடர்ந்து 5 நாட்கள் வழிபாடு நடைபெறும்.

அதற்காக, அன்றைய தினம் மாலை 5 மணியளவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல் சாந்தி பிரசாத் நம்பூதிரி நடையை திறந்து வைப்பார். அதைத் தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். இந்த 5 நாட்களும் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். மாதாந்திர பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கானோர் கோவிலுக்கு வருவர்கள். கடைசி நாளில் கோவிலில் சகஸ்ர கலச சிறப்பு பூஜை நடைபெறும். அதனை தொடர்ந்து இரவு 11 மணிக்கு ஹரிவராசனம் பாடப்பட்டு கோவில் நடை அடைக்கப்படும்.

மாதந்தோறும் சபரிமலை செல்ல விருப்பம் உள்ளவர்கள் ஒவ்வொரு மலையாள மாதத்தின் முதல் ஐந்து நாட்களில் வழிபாடு செய்யலாம். அதுமட்டுமின்றி சபரிமலை கோவில் நடை, முக்கிய பண்டிகைகள், மாதப் பூஜைகள் (ஒவ்வொரு மலையாள மாதத்தின் முதல் ஐந்து நாட்கள்), கார்த்திகை முதல் மார்கழி வரை மண்டல பூஜை, தை மாதம் மகர விளக்கு மற்றும் விஷு பண்டிகை , ஓணம் போன்ற விசேஷ நாட்கள் உட்பட குறிப்பிட்ட காலங்களில் திறந்திருக்கும்.


சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அடைப்பு! அடுத்த திறப்பு எப்போது? முழு விவரம்!

இந்தக் காலகட்டங்களில், கோவில் வழக்கமாக காலை 4:00 மணிக்குத் திறக்கப்பட்டு இரவு 11:00 மணிக்கு மூடப்படும். இருப்பினும், கூட்ட நெரிசலுக்கு இடமளிக்கும் வகையில், உச்ச பருவ காலங்களில் (உதாரணமாக, மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு) நேரங்கள் மாற்றியமைக்கப்படும்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்கள் https://sabarimalaonline.org என்ற இணையதளம் வழியாக தரிசன நேரங்களை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

திறக்கும் நாட்கள் மற்றும் நேரங்கள்:

மாதாந்திர பூஜைகள்: ஒவ்வொரு மலையாள மாதத்தின் முதல் 5 நாட்கள் நடை திறக்கப்படும்.

மண்டல பூஜை காலம்: நவம்பர் 15 அல்லது 16 முதல் டிசம்பர் 26 அல்லது 27 வரை.

மகர விளக்கு காலம்: டிசம்பர் 30 முதல் ஜனவரி 20 வரை.

விசேஷ நாட்கள்: பங்குனி உத்திரம் மற்றும் விஷு திருவிழா நாட்களில்.

தினசரி பூஜை நேரங்கள்: அதிகாலை 3:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை. மாலை 3:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை.(திருவிழா காலங்களில் நேர மாற்றங்கள் இருக்கலாம்)

இந்த நிலையில், தமிழ் ஆடி மாதம் மற்றும் மலையாள கர்கிடகம் மாதப் பிறப்பை முன்னிட்டு, சபரிமலை ஐயப்பன் கோவில் நடை ஜூலை 16-ம்தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார்.  நேற்று ஜூலை 21ந்தேதியுடன் 5 நாட்கள் வழக்கமான மாத பூஜை வழிபாடுகள் நடைபெற்றதை தொடர்ந்து  இரவு 11 மணிக்கு சபரிமலை நடை அடைக்கப்பட்டது.

அடுத்த மாதாந்திர பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை தமிழ் ஆவணி மாதம் மற்றும் மலையாள சிங்கம் மாதப் பிறப்பை முன்னிட்டு, வரும் ஆகஸ்ட் மாதம் 16-ம்தேதி நடை திறக்கப்பட்டு (5 நாட்கள்) 21-ம் தேதி வரை பக்தர்கள் வழிபாடு செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

அதனை தொடர்ந்து ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 24-ம்தேதி சபரிமலை நடை திறக்கப்பட்டு 4 நாட்கள் வழிபாட்டிற்கு பின்னர் ஆகஸ்ட் 28-ம்தேதி நடை அடைக்கப்படுகிறது. மேலும் 26-ம்தேதி ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.


சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அடைப்பு! அடுத்த திறப்பு எப்போது? முழு விவரம்!

மாதாந்திர பூஜைக்காக தமிழ் புரட்டாசி மாதம் மற்றும் மலையாள கன்னி மாதப் பிறப்பை முன்னிட்டு, வரும் செப்டம்பர் மாதம் 16-ம்தேதி முதல் (5 நாட்கள்) 21-ம்தேதி வரை சபரிமலை கோவில் நடை திறந்திருக்கும்.

தமிழ் ஐப்பசி மாதம் மற்றும் மலையாள துலாம் மாதப் பிறப்பை முன்னிட்டு, வரும் அக்டோபர் மாதம் 17-ம்தேதி நடை திறக்கப்பட்டு (5 நாட்கள்) 22-ம்தேதி வரை பக்தர்கள் வழிபாடு செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

நவம்பர் 7-ம்தேதி ஸ்ரீ சித்திர திருநாள் ஆட்ட விசேஷத்திற்காக கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளது.

அதனை தொடர்ந்து மண்ட பூஜையை முன்னிட்டு நவம்பர் 16-ம்தேதி கோவில் நடை திறக்கப்பட்டு டிசம்பர் 27-ம்தேதி வரை பக்தர்கள் வழிபாட்டிற்காக திறந்திருக்கும்.

அதேபோல் மகர விளக்கு மகோற்சவத்தை முன்னிட்டு டிசம்பர் 30-ம்தேதி முதல் ஜனவரி (2027) 20-ம்தேதி வரை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறந்திருக்கும்.

பக்தர்தர்கள் தரிசனத்துக்காக sabarimala.org.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம். சபரிமலை சன்னிதானத்தில் உள்ள தங்கும் அறைகளை www.onlinetdb.com என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு சார்பில் தெரிவிக்கப்படுள்ளது.

Advertisement

தலைப்பு செய்திகள்

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அடைப்பு! அடுத்த திறப்பு எப்போது? முழு விவரம்!
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அடைப்பு! அடுத்த திறப்பு எப்போது? முழு விவரம்!
மத்திய அரசுக்கு எதிரான மாணவர்கள் போராட்டம்..முதல்வர் விஜய் ஆதரவு தெரிவிக்காதற்கு இதுதான் காரணமா!
மத்திய அரசுக்கு எதிரான மாணவர்கள் போராட்டம்..முதல்வர் விஜய் ஆதரவு தெரிவிக்காதற்கு இதுதான் காரணமா!
SC On CJP: மாணவர்கள் மீது தாக்குதல்..! ”நேரத்தை வீணடிக்காதீர்கள், எங்களுக்கு விருப்பமில்லை” CJI கருத்தால் அதிர்ச்சி
மாணவர்கள் மீது தாக்குதல்..! ”நேரத்தை வீணடிக்காதீர்கள், எங்களுக்கு விருப்பமில்லை” CJI கருத்தால் அதிர்ச்சி
விஜய், ராகுல், டாஸ்மாக்: இன்றைய பரபரப்பான முக்கிய தலைப்புச் செய்திகள்! நீங்கள் அறிய வேண்டியவை!
விஜய், ராகுல், டாஸ்மாக்: இன்றைய பரபரப்பான முக்கிய தலைப்புச் செய்திகள்! நீங்கள் அறிய வேண்டியவை!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு
Palani temple land scam | 100 கோடி நிலம் 2 கோடிக்கு! பத்திரத்தில் ஷாக் தகவல்! பழனி கோயில் பகீர்
Bribery : ₹100 லஞ்சம்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ராகுல் காந்தி நேற்றைய கைதுக்கு இன்று கண்டனம்.! எதிர்ப்பு தெரிவிக்க விஜய் காலம் தாழ்த்தியது ஏன்.? பரபரப்பு பின்னனி
ராகுல் காந்தி நேற்றைய கைதுக்கு இன்று கண்டனம்.! எதிர்ப்பு தெரிவிக்க விஜய் காலம் தாழ்த்தியது ஏன்.? பரபரப்பு பின்னனி
Cockroach Party : 'கரப்பான் பூச்சி கட்சி உருவானது எப்படி?’ தமிழ்நாட்டில் பெருகும் இளைஞர்கள் ஆதரவு..!
'கரப்பான் பூச்சி கட்சி உருவானது எப்படி?’ பின்னணியும் நோக்கமும்..!
SC On CJP: மாணவர்கள் மீது தாக்குதல்..! ”நேரத்தை வீணடிக்காதீர்கள், எங்களுக்கு விருப்பமில்லை” CJI கருத்தால் அதிர்ச்சி
மாணவர்கள் மீது தாக்குதல்..! ”நேரத்தை வீணடிக்காதீர்கள், எங்களுக்கு விருப்பமில்லை” CJI கருத்தால் அதிர்ச்சி
அசுரத்தனமாக அதிகரிக்கும் அரிசி விலை; என்ன காரணம்? அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிக்க கோரிக்கை
அசுரத்தனமாக அதிகரிக்கும் அரிசி விலை; என்ன காரணம்? அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிக்க கோரிக்கை
BJP DMK: ”நிதி, கல்வி, ரயில்வே துறைகள் OK-வா - TVK-க்கு குடைச்சல் கொடுக்கவும் தயார்” திமுகவிற்கு பாஜக அழைப்பு?
”நிதி, கல்வி, ரயில்வே துறைகள் OK-வா - TVK-க்கு குடைச்சல் கொடுக்கவும் தயார்” திமுகவிற்கு பாஜக அழைப்பு?
Cheapset 6 Seater: நாட்டின் மலிவான 6 சீட்டர் - கடும் உழைப்பாளி, எளிய டிசைன், 850KM மைலேஜ் - EMI விவரங்கள்
நாட்டின் மலிவான 6 சீட்டர் - கடும் உழைப்பாளி, எளிய டிசைன், 850KM மைலேஜ் - EMI விவரங்கள்
டைனிங் டேபிள் வேண்டாமே; தரையில் சம்மணமிட்டு சாப்பிடுவதால் இவ்ளோ நன்மைகளா? அறிவியல் விளக்கம்
டைனிங் டேபிள் வேண்டாமே; தரையில் சம்மணமிட்டு சாப்பிடுவதால் இவ்ளோ நன்மைகளா? அறிவியல் விளக்கம்
MK Stalin: ”பாஜக, ஒன்றிய அரசு, ராகுல் காந்தி” இல்லாத ஸ்டாலின் அறிக்கை - நீட் தேர்வை ஒழிக்க வேண்டும் என முழக்கம்
”பாஜக, ஒன்றிய அரசு, ராகுல் காந்தி” இல்லாத ஸ்டாலின் அறிக்கை - நீட் தேர்வை ஒழிக்க வேண்டும் என முழக்கம்
Embed widget