மேலும் அறிய

RBI New Rule: கடன்ல செல்போன் வாங்கிட்டு EMI கட்டாம இருக்கறவங்களுக்கு ஆப்பு வருது - ரிசர்வ் வங்கி திட்டம்

கடனில் செல்போன் வாங்கிவிட்டு தவணை கட்டாமல் இருந்தால், அந்த போனை முடக்க நிதி நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க ரிசர்வ் வங்கி பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிய ஸ்மார்ட்போன்களை வாங்குவதற்காக, வாடிக்கையாளர்கள் நிதி நிறுவனங்களிடம் இருந்து கடன் பெற்று, அதனை திருப்பி செலுத்தாவிட்டால், செல்போன்களை முடக்குவதற்கு வகை செய்யும் புதிய விதிமுறையை ரிசர்வ் வங்கி உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடனில் செல்போன் வாங்குவது அதிகரிப்பு

செல்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனையில், மூன்றில் ஒரு பங்கு சாதனங்களை வாடிக்கையாளர்கள் கடனில் வாங்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தற்போது நாட்டில், 1.16 கோடி செல்போன் இணைப்புகள் செயல்பாட்டில் உள்ளதாக, தொலைத் தொடர்பு கட்டுப்பாட்டு ஆணையமான டிராயின் தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், அண்மைக்காலமாக, செல்போன் வாங்குவதற்காக கடன் பெறுவதும், அதை திருப்பி செலுத்தாமல் இருப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் தான், இந்த புதிய விதிமுறையை கொண்டு வருவது குறித்து ரிசர்வ் வங்கி பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால், இது வாடிக்கையாளர் நலனை பாதிக்கும் என்ற அச்சமும் ஒருபுறம் எழுந்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் திட்டம் என்ன.?

கடன் தவணையை செலுத்தாத வாடிக்கையாளர்களின் செல்போன்களை, செயலிகள் மூலம் முடக்கும் நிதி நிறுவனங்களின் செயல்பாடுகளுக்கு ரிசர்வ் வங்கி கடந்த ஆண்டு எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால், இந்த ஆண்டு அந்த நிலை மாறி இருப்பதாக கூறப்படுகிறது.

கடன் வழங்கும் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களுடன் ரிசர்வ் வங்கி ஆலோசனை நடத்தியது. இதைத் தொடர்ந்து, விரைவில் கடன் தவணை செலுத்தாதவர்களின் செல்போன்களை முடக்குவது குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பான புதிய விதிமுறையை ரிசர்வ் வங்கி உருவாக்கினால், அது தொடர்பாக, கடன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என்பதையும், நிதி நிறுவனங்களால் முடக்கப்படும் செல்போன்களில் இருந்து எந்த தனிப்பட்ட தகவல்களையும் எடுக்கக் கூடாது என்பதும் கட்டாயமாக்கப்படும் என தெரிகிறது.

கடனை திரும்பப் பெறுவதற்கான விதிமுறைகள் நிதி நிறுவனங்களுக்கு இருக்க வேண்டும் என்பது ஒருபுறம் இருந்தாலும், அது நுகர்வோரின் தகவல்களை பாதுகாக்கும் வகையில் அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.

ஒரு லட்சத்திற்கும் குறைவாக வழங்கப்படும் கடன்கள், தவணை செலுத்தப்படாமல் போகும் வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த புதிய விதிமுறை உருவாக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டால், எலக்ட்ரானிக் சாதனங்களுக்கு கடன் வழங்கும் தனியார் நிதி நிறுவனங்கள் பயபடையும் என்று தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் மறுபுறம், இந்த விதிமுறை லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. தற்போது செல்போன் தான் எல்லாவற்றிற்குமே அத்தியாவசியமாகிவிட்டதால், இது நிச்சயம் பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது. இதனால், முடக்கப்படும் செல்போனின் தனிப்பட்ட தகவல்களின் ரகசியம் காக்கப்படுவதை உறுதி செய்ய நிதி நிறுவனங்களிடம் ரிசர்வ் வங்கி வலியுறுத்தியுள்ளது.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
PM Modi Speech: தென்னகத்தின் சக்தி பீடம்; 1000 ஆண்டுகளுக்கு முன்பே நீர்மேலாண்மை செய்த மண் - கோவைக்கு மோடி புகழாரம்
தென்னகத்தின் சக்தி பீடம்; 1000 ஆண்டுகளுக்கு முன்பே நீர்மேலாண்மை செய்த மண் - கோவைக்கு மோடி புகழாரம்
Rain Alert: காற்றழுத்த தாழ்வு மண்டலம்:  நவம்பர் 22 முதல் 25 வரை எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? வானிலை மையத்தின் இன்றைய அறிக்கை
காற்றழுத்த தாழ்வு மண்டலம்: நவம்பர் 22 முதல் 25 வரை எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? வானிலை மையத்தின் இன்றைய அறிக்கை
Gold Rate Nov. 19th: ஆண்டவா.! இந்த தங்கத்துக்கு ஒரு பிரேக் போடுப்பா.! ஒரே நாளில் ரூ.1,600 உயர்ந்த விலை
ஆண்டவா.! இந்த தங்கத்துக்கு ஒரு பிரேக் போடுப்பா.! ஒரே நாளில் ரூ.1,600 உயர்ந்த விலை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kovi Chezhiyan Event Issue|மேடையில் பேசிய கோவி.செழியன்போதையில் தள்ளாடிய அதிகாரி விழாவில் சலசலப்பு
KN Nehru | ’’அண்ணே என் காரை ஓட்டுங்க’’ஆசையாய் கேட்ட திமுக நிர்வாகி உடனே நிறைவேற்றிய K.N.நேரு
கோவை, மதுரைக்கு NO METRO ஏன், பின்னணி என்ன?
Nitish Kumar |
MK Stalin Phone Call | ‘’கவலைப்படாதமா அப்பா நான் இருக்கேன்’’மாணவிக்கு முதல்வர் PHONE CALL

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
PM Modi Speech: தென்னகத்தின் சக்தி பீடம்; 1000 ஆண்டுகளுக்கு முன்பே நீர்மேலாண்மை செய்த மண் - கோவைக்கு மோடி புகழாரம்
தென்னகத்தின் சக்தி பீடம்; 1000 ஆண்டுகளுக்கு முன்பே நீர்மேலாண்மை செய்த மண் - கோவைக்கு மோடி புகழாரம்
Rain Alert: காற்றழுத்த தாழ்வு மண்டலம்:  நவம்பர் 22 முதல் 25 வரை எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? வானிலை மையத்தின் இன்றைய அறிக்கை
காற்றழுத்த தாழ்வு மண்டலம்: நவம்பர் 22 முதல் 25 வரை எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? வானிலை மையத்தின் இன்றைய அறிக்கை
Gold Rate Nov. 19th: ஆண்டவா.! இந்த தங்கத்துக்கு ஒரு பிரேக் போடுப்பா.! ஒரே நாளில் ரூ.1,600 உயர்ந்த விலை
ஆண்டவா.! இந்த தங்கத்துக்கு ஒரு பிரேக் போடுப்பா.! ஒரே நாளில் ரூ.1,600 உயர்ந்த விலை
ஆர்.கே நகரில் மீண்டும் டிடிவி.? திமுக, அதிமுகவின் அடுத்த மூவ் என்ன.?
ஆர்.கே நகரில் மீண்டும் டிடிவி.? திமுக, அதிமுகவின் அடுத்த மூவ் என்ன.?
படப்பிடிப்பில் தாகத வார்த்தையை உபயோகித்த இயக்குநர்..பேச்சுலர் பட நடிகை திவ்யபாரதி பரபரப்பு
படப்பிடிப்பில் தாகத வார்த்தையை உபயோகித்த இயக்குநர்..பேச்சுலர் பட நடிகை திவ்யபாரதி பரபரப்பு
TN TET 2026: சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்; எப்படி? என்ன தகுதி? முக்கிய தேதிகள்!
TN TET 2026: சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்; எப்படி? என்ன தகுதி? முக்கிய தேதிகள்!
Metro Rail: கோவை, மதுரைக்கான மெட்ரோ திட்டம் என்ன? எத்தனை ஆயிரம் கோடிகள் பட்ஜெட்? எவ்வளது தூரம் - விவரங்கள்
Metro Rail: கோவை, மதுரைக்கான மெட்ரோ திட்டம் என்ன? எத்தனை ஆயிரம் கோடிகள் பட்ஜெட்? எவ்வளது தூரம் - விவரங்கள்
Embed widget