மேலும் அறிய

Rahul Gandhi: மணிப்பூர் சீரியசான விஷயம்.. அதை பத்தின விவாதத்தில பிரதமர் ஜோக் அடிச்சிருக்கக் கூடாது.. ராகுல் காந்தி விளாசல்

நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் பிரதமர் மோடி அளித்த பதிலை ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார்.

நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் நேற்று பிரதமர் மோடி பதில் அளித்திருந்தார். அதில், மணிப்பூர் குறித்து பிரதமர் மோடி போதுமான அளவு பேசவில்லை என்றும் எதிர்க்கட்சிகளை குறிவைப்பதிலேயே அவரின் உரை அமைந்திருந்ததாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

இந்த நிலையில், டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமையகத்தில் இன்று செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட ராகுல் காந்தி, பிரதமர் மோடி அளித்த பதில் குறித்து கடுமையாக விமர்சனம் செய்தார். மணிப்பூர் சீரியசான விவகாரம் என்றும் அது தொடர்பான விவாதத்தில் பிரதமர் ஜோக் அடிச்சிருக்கக் கூடாது என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

"பிரதமர் செய்யும் செயலா?"

இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "நேற்று நாடாளுமன்றத்தில் பிரதமர் சுமார் 2 மணி 13 நிமிடங்கள் பேசினார். இறுதியில், மணிப்பூர் குறித்து 2 நிமிடம் மட்டுமே பேசினார். மணிப்பூர் பல மாதங்களாக எரிந்து கொண்டிருக்கிறது, மக்கள் கொல்லப்படுகிறார்கள், பாலியல் வன்கொடுமைகள் நடக்கின்றன. ஆனால், விவாதத்தில் பிரதமர் சிரித்து பேசுகிறார். ஜோக் அடிக்கிறார். இது பிரதமர் செய்யும் செயல் அல்ல.

இந்திய ராணுவத்தால் இந்த முட்டாள்தனத்தை 2 நாட்களில் நிறுத்த முடியும். ஆனால், மணிப்பூர் தொடர்ந்து எரிவதை பிரதமர் விரும்புகிறார். தீயை அணைக்க விரும்பவில்லை. 19 வருட அனுபவத்தில் மணிப்பூரில் நான் பார்த்ததையும் கேட்டதையும் பார்த்ததே இல்லை. பிரதமரும் உள்துறை அமைச்சரும் பாரத மாதாவை கொன்றிருக்கிறார்கள். மணிப்பூரில் இந்தியாவை அழித்திருக்கிறார்கள் என நாடாளுமன்றத்தில் பேசினேன்.

"அற்ப அரசியல்வாதி போல் பேசக்கூடாது"

இவை வெற்று வார்த்தைகள் அல்ல. மணிப்பூரில், மெய்தேயி  சமூக மக்களின் பகுதிக்குச் சென்றபோது, ​​எங்கள் பாதுகாப்புப் பிரிவில் குக்கி சமூகத்தை சேர்ந்தவர் இருந்தால், அந்த நபரைக் கொன்றுவிடும், இங்கு அழைத்து வரக்கூடாது என்று சொன்னார்கள். குக்கி சமூக மக்கள் வாழும் பகுதிக்கு போனபோது, ​​மெய்தேயி சமூகத்தவரை அழைத்து வந்தால் அவர்ககளை சுட்டு வீழ்த்துவோம் என்று சொன்னார்கள். எனவே, அது ஒரு மாநிலம் அல்ல. இரண்டு மாநிலங்களாக பிளவுப்பட்டு கிடக்கிறது. மாநிலம் கொலை செய்யப்பட்டு பிளவுப்பட்டு கிடக்கிறது.

பிரதமர் குறைந்தபட்சம் மணிப்பூருக்குச் சென்று, மக்களிடம் பேசி, நான் உங்கள் பிரதமர் உங்களுடன் இருக்கிறேன் என நம்பிக்கை வார்த்தை கூறலாம். பேசலாம். ஆனால், அவருக்கு இம்மாதிரியான நோக்கம் இருப்பதாக தெரியவில்லை. 2024இல் பிரதமர் மோடி பிரதமராவாரா என்பது கேள்வி அல்ல. மணிப்பூர் பற்றியதுதான் கேள்வி. அங்குதான், குழந்தைகள், மக்கள் கொல்லப்படுகிறார்கள்.

பிரதமர் பிரதமரானதும், அவர் அரசியல்வாதியாக இருக்க கூடாது. நாட்டின் குரலின் பிரதிநிதியாக மாற வேண்டும். அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு, பிரதமர் அற்ப அரசியல்வாதி போல் பேசாமல், தன் பின் இந்திய மக்கள் இருப்பதை உணர்ந்து பேச வேண்டும். நரேந்திர மோடி இப்படி பேசுவது வருத்தமாக இருக்கிறது. பிரதமர், தான் யார் என்பதையே புரிந்து கொள்ளவில்லை" என்றார்.

 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Draft SIR: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
Draft SIR: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
Udhayanidhi Vs Vijay: “அவர பேசவிட்டு பாருங்க, அப்போ தெரியும்“; விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி; என்ன கூறினார்.?
“அவர பேசவிட்டு பாருங்க, அப்போ தெரியும்“; விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி; என்ன கூறினார்.?
PM Modi Oman: “இந்திய பொருளாதாரத்தின் டிஎன்ஏ மாற்றியுள்ளது“; ஓமனில் பிரதமர் மோடி பேசியது என்ன.?
“இந்திய பொருளாதாரத்தின் டிஎன்ஏ மாற்றியுள்ளது“; ஓமனில் பிரதமர் மோடி பேசியது என்ன.?
US Venezuela Russia: “அபாயகரமான தவறை செய்யப் பார்க்கிறார் ட்ரம்ப்“; வெனிசுலாவிற்கு வக்காலத்து வாங்கும் ரஷ்யா
“அபாயகரமான தவறை செய்யப் பார்க்கிறார் ட்ரம்ப்“; வெனிசுலாவிற்கு வக்காலத்து வாங்கும் ரஷ்யா
ABP Premium

வீடியோ

Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Draft SIR: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
Draft SIR: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
Udhayanidhi Vs Vijay: “அவர பேசவிட்டு பாருங்க, அப்போ தெரியும்“; விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி; என்ன கூறினார்.?
“அவர பேசவிட்டு பாருங்க, அப்போ தெரியும்“; விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி; என்ன கூறினார்.?
PM Modi Oman: “இந்திய பொருளாதாரத்தின் டிஎன்ஏ மாற்றியுள்ளது“; ஓமனில் பிரதமர் மோடி பேசியது என்ன.?
“இந்திய பொருளாதாரத்தின் டிஎன்ஏ மாற்றியுள்ளது“; ஓமனில் பிரதமர் மோடி பேசியது என்ன.?
US Venezuela Russia: “அபாயகரமான தவறை செய்யப் பார்க்கிறார் ட்ரம்ப்“; வெனிசுலாவிற்கு வக்காலத்து வாங்கும் ரஷ்யா
“அபாயகரமான தவறை செய்யப் பார்க்கிறார் ட்ரம்ப்“; வெனிசுலாவிற்கு வக்காலத்து வாங்கும் ரஷ்யா
Trump on US Citizenship: 2026-ல் மாதத்திற்கு 100-200 பேரின் அமெரிக்க குடியுரிமை பறிப்பா.?! ட்ரம்ப் கூறிய பதில் என்ன தெரியுமா.?
2026-ல் மாதத்திற்கு 100-200 பேரின் அமெரிக்க குடியுரிமை பறிப்பா.?! ட்ரம்ப் கூறிய பதில் என்ன தெரியுமா.?
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
Putin Warns Ukraine: “அமைதித் திட்டத்த ஏத்துக்கோங்க, இல்லைன்னா...“; உக்ரைனுக்கு புதின் விடுத்த எச்சரிக்கை என்ன.?
“அமைதித் திட்டத்த ஏத்துக்கோங்க, இல்லைன்னா...“; உக்ரைனுக்கு புதின் விடுத்த எச்சரிக்கை என்ன.?
Chennai Power Cut: சென்னையில் டிசம்பர் 19-ம் தேதி எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? இதோ விவரம்
சென்னையில் டிசம்பர் 19-ம் தேதி எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? இதோ விவரம்
Embed widget