மேலும் அறிய

Rahul Gandhi: மணிப்பூர் சீரியசான விஷயம்.. அதை பத்தின விவாதத்தில பிரதமர் ஜோக் அடிச்சிருக்கக் கூடாது.. ராகுல் காந்தி விளாசல்

நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் பிரதமர் மோடி அளித்த பதிலை ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார்.

நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் நேற்று பிரதமர் மோடி பதில் அளித்திருந்தார். அதில், மணிப்பூர் குறித்து பிரதமர் மோடி போதுமான அளவு பேசவில்லை என்றும் எதிர்க்கட்சிகளை குறிவைப்பதிலேயே அவரின் உரை அமைந்திருந்ததாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

இந்த நிலையில், டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமையகத்தில் இன்று செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட ராகுல் காந்தி, பிரதமர் மோடி அளித்த பதில் குறித்து கடுமையாக விமர்சனம் செய்தார். மணிப்பூர் சீரியசான விவகாரம் என்றும் அது தொடர்பான விவாதத்தில் பிரதமர் ஜோக் அடிச்சிருக்கக் கூடாது என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

"பிரதமர் செய்யும் செயலா?"

இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "நேற்று நாடாளுமன்றத்தில் பிரதமர் சுமார் 2 மணி 13 நிமிடங்கள் பேசினார். இறுதியில், மணிப்பூர் குறித்து 2 நிமிடம் மட்டுமே பேசினார். மணிப்பூர் பல மாதங்களாக எரிந்து கொண்டிருக்கிறது, மக்கள் கொல்லப்படுகிறார்கள், பாலியல் வன்கொடுமைகள் நடக்கின்றன. ஆனால், விவாதத்தில் பிரதமர் சிரித்து பேசுகிறார். ஜோக் அடிக்கிறார். இது பிரதமர் செய்யும் செயல் அல்ல.

இந்திய ராணுவத்தால் இந்த முட்டாள்தனத்தை 2 நாட்களில் நிறுத்த முடியும். ஆனால், மணிப்பூர் தொடர்ந்து எரிவதை பிரதமர் விரும்புகிறார். தீயை அணைக்க விரும்பவில்லை. 19 வருட அனுபவத்தில் மணிப்பூரில் நான் பார்த்ததையும் கேட்டதையும் பார்த்ததே இல்லை. பிரதமரும் உள்துறை அமைச்சரும் பாரத மாதாவை கொன்றிருக்கிறார்கள். மணிப்பூரில் இந்தியாவை அழித்திருக்கிறார்கள் என நாடாளுமன்றத்தில் பேசினேன்.

"அற்ப அரசியல்வாதி போல் பேசக்கூடாது"

இவை வெற்று வார்த்தைகள் அல்ல. மணிப்பூரில், மெய்தேயி  சமூக மக்களின் பகுதிக்குச் சென்றபோது, ​​எங்கள் பாதுகாப்புப் பிரிவில் குக்கி சமூகத்தை சேர்ந்தவர் இருந்தால், அந்த நபரைக் கொன்றுவிடும், இங்கு அழைத்து வரக்கூடாது என்று சொன்னார்கள். குக்கி சமூக மக்கள் வாழும் பகுதிக்கு போனபோது, ​​மெய்தேயி சமூகத்தவரை அழைத்து வந்தால் அவர்ககளை சுட்டு வீழ்த்துவோம் என்று சொன்னார்கள். எனவே, அது ஒரு மாநிலம் அல்ல. இரண்டு மாநிலங்களாக பிளவுப்பட்டு கிடக்கிறது. மாநிலம் கொலை செய்யப்பட்டு பிளவுப்பட்டு கிடக்கிறது.

பிரதமர் குறைந்தபட்சம் மணிப்பூருக்குச் சென்று, மக்களிடம் பேசி, நான் உங்கள் பிரதமர் உங்களுடன் இருக்கிறேன் என நம்பிக்கை வார்த்தை கூறலாம். பேசலாம். ஆனால், அவருக்கு இம்மாதிரியான நோக்கம் இருப்பதாக தெரியவில்லை. 2024இல் பிரதமர் மோடி பிரதமராவாரா என்பது கேள்வி அல்ல. மணிப்பூர் பற்றியதுதான் கேள்வி. அங்குதான், குழந்தைகள், மக்கள் கொல்லப்படுகிறார்கள்.

பிரதமர் பிரதமரானதும், அவர் அரசியல்வாதியாக இருக்க கூடாது. நாட்டின் குரலின் பிரதிநிதியாக மாற வேண்டும். அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு, பிரதமர் அற்ப அரசியல்வாதி போல் பேசாமல், தன் பின் இந்திய மக்கள் இருப்பதை உணர்ந்து பேச வேண்டும். நரேந்திர மோடி இப்படி பேசுவது வருத்தமாக இருக்கிறது. பிரதமர், தான் யார் என்பதையே புரிந்து கொள்ளவில்லை" என்றார்.

 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Jana Nayagan Censor: சென்சார் ஓவர்..! என்ன சான்று? விஜயின் கடைசி திரைப்படம் எவ்வளவு நேரம் ஓடும்? - ரிப்போர்ட்
Jana Nayagan Censor: சென்சார் ஓவர்..! என்ன சான்று? விஜயின் கடைசி திரைப்படம் எவ்வளவு நேரம் ஓடும்? - ரிப்போர்ட்
CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
ABP Premium

வீடியோ

Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jana Nayagan Censor: சென்சார் ஓவர்..! என்ன சான்று? விஜயின் கடைசி திரைப்படம் எவ்வளவு நேரம் ஓடும்? - ரிப்போர்ட்
Jana Nayagan Censor: சென்சார் ஓவர்..! என்ன சான்று? விஜயின் கடைசி திரைப்படம் எவ்வளவு நேரம் ஓடும்? - ரிப்போர்ட்
CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
All-New Tata Punch Turbo: வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
The AQI Illusion: காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
Trump's Next Target: ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
Embed widget