மேலும் அறிய

என்றென்றும் ஹீரோ..! புனித்ராஜ்குமாரின் ஊக்கம்.. கர்நாடகாவில் அதிகரிக்கும் கண்தானம்.!

பெங்களூரிவில் ஒரு ரசிகர் புனித்தைப் போல தன் கண்களை தானம் செய்வதற்காகவே தற்கொலை செய்து கொண்டார்

மறைந்த கன்னட சூப்பர் புனித் ராஜ்குமாரின் மரணத்திற்கு பிறகு அவரது ரசிகர்கள் கண்தானம் செய்வதற்காக மருத்துவமனைகளில் வரிசைக் கட்டி நிற்கின்றனர். இரண்டு நாட்களாகவே கர்நாடகாவில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு போனில் அழைத்து கண் தானம் தொடர்பாக பலரும் கேட்டு வருவதாக கூறப்படுகிறது. 

புனித் ராஜ்குமார் கடந்த வாரம் தன்னுடைய வீட்டில் உள்ள ஜிம்மில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்த போது, அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதை தொடர்ந்து, மிகவும் ஆபத்தான நிலைமையில் பெங்களூருவில் உள்ள விக்ரம் மருத்துவமனையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், மாரடைப்பு ஏற்பட்டதாக மருத்துவர்கள் கூறினர். ஐசியூவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை மதியம் சிகிச்சை பலனின்றி காலமானார்.


என்றென்றும் ஹீரோ..! புனித்ராஜ்குமாரின் ஊக்கம்.. கர்நாடகாவில் அதிகரிக்கும் கண்தானம்.!

உயிருடன் இருக்கும்போது பல்வேறு உதவிகளைச் செய்து வந்த நடிகர் புனித் ராஜ்குமார், தன் மரணத்திலும் தன் கண்களை தானமாக வழங்கி பார்வையற்றோர் வாழ்வில் ஒளியேற்றியுள்ளார். புனித் ராஜ்குமாரின் இரண்டு கண்களும் பெங்களூருவிலுள்ள நாராயண நேத்ராலயா கண் வங்கியில் சேமித்து வைக்கப்பட்டன. நவீன தொழில்நுட்பம் மூலம் 4 பாகங்களாகப் பிரிக்கப்பட்ட கண்கள், சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் கொண்ட 4 பேருக்குப் பொருத்தப்பட்டுள்ளன என்றும் அதன் மூலம் புனித் ராஜ்குமாரால் 4 பேர் பார்வை பெற்றுள்ளனர் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

இதையடுத்து அவர் மரணத்திற்கு பிறகு அவரைப்போலவே ரசிகர்கள் கண்தானம் செய்வதற்காக மருத்துவமனைகளில் வரிசைக் கட்டி நிற்கின்றனர். புனித் ராஜ்குமாரின் தந்தையின் மரணத்தின்போது இதே போன்ற சூழல்தான் நிலவியது. ராஜ் குமாரும் தன்னுடைய கண்களைத் தானமாக வழங்கியிருந்தார். இருவரின் கண் தானத்தின் காரணாக 6 பேருக்கு பார்வை கிடைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இது அவர்களின் ரசிகர்களையும் கண் தானம் செய்ய ஊக்குவித்துள்ளது. 


கர்நாடகாவின் பல்லாரி மற்றும் விஜயநகரா மாவட்டங்களில் புனித் ராஜ்குமாருக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர். இந்த மாவட்டங்களில்தான் அவருக்கு  அதிக படங்கள் எடுக்கப்பட்டன. புனித்தின் எளிமை மற்றும் சாதாரண மக்களுடன் அவர் நடந்துக் கொள்ளும் விதம் ஆகியவை நிறைய பேருக்கு அவரை பிடிக்க செய்தன. அப்படி பல்லாயிரம் இதயங்களை வென்றிருந்தார் புனித். புனித் இறந்துபோனதை இன்றளவும் அவரது ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவர் இறந்த துக்கம் தாளாமல் சில ரசிகர்கள் தற்கொலை செய்துக் கொண்டனர். சிலருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. 
இது தொடர்பாக பேசிய அவரது ரசிகர் ஒருவர், பெங்களூரிவில் ஒரு ரசிகர் புனித்தைப் போல தன் கண்களை தானம் செய்வதற்காகவே தற்கொலை செய்து கொண்டார். பல்லாரி, விஜயநகராவில் உள்ள ரசிகர்கள் கண்களை தானம் செய்ய முன்வந்துள்ளனர்” என தெரிவித்தார். 


என்றென்றும் ஹீரோ..! புனித்ராஜ்குமாரின் ஊக்கம்.. கர்நாடகாவில் அதிகரிக்கும் கண்தானம்.!
பெங்களூரு மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்கள், புனித்தின் கண்களை எடுத்து மாடர்ன் தொழில்நுட்பத்தின் மூலம் 4 பேருக்கு பொருத்தியுள்ளனர். இது ரசிகர்கள் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. 
இதனையடுத்து கண் தானம் செய்யும் முறையை எளிமைப்படுத்தவுள்ளதாக மருத்துவர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக புனித் ராஜ்குமார் நினைவாக அவருக்கு சிலை நிறுவப்படும் என அம்மாநில அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget