![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
PM Modi: அடுத்த வாரம் இந்தோனேஷியா பயணம்.. ஜோ பைடனை சந்திக்கிறார் பிரதமர் மோடி.. திட்டம் என்னென்ன..?
பிரதமர் மோடி அடுத்த வாரம் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான ஆசியான் - இந்தியா மாநாட்டில் பங்கேற்கிறார்.
![PM Modi: அடுத்த வாரம் இந்தோனேஷியா பயணம்.. ஜோ பைடனை சந்திக்கிறார் பிரதமர் மோடி.. திட்டம் என்னென்ன..? Prime Minister Modi will attend the Association of Southeast Asian Nations -India summit next week PM Modi: அடுத்த வாரம் இந்தோனேஷியா பயணம்.. ஜோ பைடனை சந்திக்கிறார் பிரதமர் மோடி.. திட்டம் என்னென்ன..?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/03/f95d2a78243c6e6fa7467fc9eb3bdc331693708845941571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஜி20 உச்சிமாநாட்டிற்கு வரும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை வரவேற்பதற்காகவும், ஆசியான் தொடர்பான கூட்டங்களில் கலந்து கொள்வதற்காகவும் அடுத்த வாரம் பிரதமர் நரேந்திர மோடி இந்தோனேஷியாவிற்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
பிரதமர் மோடி அடுத்த வாரம் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான ஆசிய - இந்தியா மாநாட்டில் பங்கேற்கிறார். அதன்படி, இந்தோனேசியாவிற்கு செல்லும் பிரதமர் மோடி 6,7-ம் தேதிகளில் அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு, அமெரிக்க அதிபர் ஜோ பைடனை செப்டம்பர் 8ம் தேதி ஒரு கட்டமைக்கப்பட்ட இருதரப்பு பேச்சுவார்த்தைக்காக சந்திப்பார் என வெள்ளை மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில், “வருகின்ற 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்க, இரு தினங்களுக்கு முன்னரே அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியா வரவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவலை வெள்ளி மாளிகை வெளியிட்டுள்ளது.
அதன்படி, வரும் 7ம் தேதி இந்தியா வரும் ஜோ பைடன், அடுத்த நாளான 8ம் தேதி பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்த சந்திப்பின்போது இந்தியா - அமெரிக்கா இடையேயான இருதரப்பு உறவு, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளது” என வெள்ளை மாளிகை தெரிவித்தது.
ஜி20 மாநாட்டில் பசுமை ஆற்றல், காலநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கை உள்ளிட்ட உலகளாவிய முக்கிய விவகாரங்களும் விவாதிக்கப்படுகிறது.
தென் கிழக்கு ஆசியா நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி நடத்து பேச்சுவார்த்தையில், அந்த நாடுகளுடன் இந்தியாவின் வர்த்தகம், பாதுகாப்பு உறவை மேம்படுத்துவது குறித்து பேச இருப்பதாக கூறப்படுகிறது.
பிரதமர் மோடி திட்ட பயணம்:
பிரதமர் மோடி வருகின்ற புதன்கிழமை இந்தோனேசியா ஜகார்த்தா செல்கிறார். மேலும், தற்போதைய ஆசியான் தலைவராக இருக்கும் மோடி, இந்தோனேசியா நடத்தும் 20வது ஆசியான் - இந்தியா உச்சி மாநாடு மற்றும் 18-வது கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார்.
ஆசியான் என்பது 11 நாடுகளை கொண்ட அமைப்பாகும். இதில் இந்தியா உட்பட பல நாடுகளுடன் இணைந்து தனி உச்சிமாநாடுகளை நடத்துகிறது.
ஜகார்த்தாவில் சீன பிரதமர் லீ கியாங்கை பிரதமர் மோடி சந்திக்க வாய்ப்பு உள்ளது. ஜகார்த்தாவில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை பிரதிநிதித்துவப்படுத்துவதைத் தவிர, ஜி 20 உச்சிமாநாட்டிற்கு சீன தூதுக்குழுவிற்கும் தலைமை தாங்குவார். ஆஸ்திரேலிய, தென் கொரிய மற்றும் ஜப்பானிய பிரதமர்களும் ஆசியான் கூட்டங்களில் கலந்து கொண்ட பிறகு டெல்லி வருவார்கள்.
ஜி20 மாநாடு வெள்ளிக்கிழமை மாலை கலாச்சார நிகழ்ச்சியுடன் தொடங்க உள்ளது. உச்சிமாநாட்டின் வணிக முடிவு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும். விருந்தினராக, அழைக்கப்பட்ட அனைத்து தலைவர்களுடனும் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)