மேலும் அறிய

"உலகிற்கு இந்தியா அளித்த விலைமதிப்பற்ற பரிசு" குடியரசு தலைவர் முர்மு சொன்னது என்ன? அடடே இதுதானா!

பல்வேறு மருத்துவ முறைகளுக்குள் ஆரோக்கியமான போட்டி இருப்பது நல்லது என்றும், ஆனால் ஒருவரை ஒருவர் விமர்சிக்க முயற்சிக்கக் கூடாது என்றும் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இன்று (08.10.2024) அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தின் 7வது நிறுவன தின விழாவில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத்தலைவர், ஆயுர்வேதம் உலகின் பழமையான மருத்துவ முறைகளில் ஒன்று என்று கூறினார். இது உலகிற்கு இந்தியா அளித்த விலைமதிப்பற்ற பரிசு என்றும் மனம், உடல், ஆன்மா ஆகியவற்றுக்கு இடையில் ஆயுர்வேதம் சமநிலையை பராமரிக்கும் என்றும் கூறினார்.

"ஆயுர்வேதத்தின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை"

நம்மைச் சுற்றியுள்ள மரங்கள், தாவரங்களின் மருத்துவ குணம் குறித்து நாம் அறிந்திருப்பதாகவும், அவற்றைப் பயன்படுத்தி வருவதாகவும் குடியரசுத்தலைவர் கூறினார். பழங்குடியின சமூகத்தில், மூலிகைகளையும், மருத்துவ தாவரங்களையும் குறித்த அறிவு அதிகமாக உள்ளது என அவர் தெரிவித்தார்.

சமூகம் நவீனத்துவத்தை ஏற்றுக்கொண்டு இயற்கையிலிருந்து விலகிச் செல்லும் போது, நாம் பாரம்பரிய அறிவைப் பயன்படுத்துவதை நிறுத்துவதாக அவர் கூறினார். தற்போது மக்களிடையே இயற்கை மருத்துவம் தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது என்றும், தற்போது ஒருங்கிணைந்த மருத்துவ முறை பற்றிய சிந்தனை உலகம் முழுவதும் பிரபலமாகி வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

பல தலைமுறைகளாக ஆயுர்வேதத்தின் மீது நமக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது என்று குடியரசுத்தலைவர் கூறினார். கடந்த சில ஆண்டுகளாக ஆயுர்வேதக் கல்லூரிகளும் அவற்றில் மாணவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

"மனிதகுலத்திற்கு நன்மை செய்வதே அனைவரின் நோக்கம்"

வரும் காலங்களில் தகுதி வாய்ந்த ஆயுர்வேத மருத்துவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். ஆயுர்வேதத்தின் வளர்ச்சி மனிதர்களுக்கு மட்டுமல்ல, விலங்குகளுக்கும் சுற்றுச்சூழலுக்கும் நன்மை பயக்கும் என்று குடியரசுத் தலைவர் கூறினார்.

பல மரங்கள், தாவரங்கள்  தொடர்பான பயன்பாடு குறித்து நமக்குத் தெரியாததால் அவை அழிந்து வருகின்றன என்று அவர் தெரிவித்தார். அவற்றின் முக்கியத்துவத்தை நாம் அறிந்து நாம் அவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்று  அவர் கேட்டுக் கொண்டார்.

பல்வேறு மருத்துவ முறைகளுக்குள் ஆரோக்கியமான போட்டி இருப்பது நல்லது என்றும், ஆனால் ஒருவரை ஒருவர் விமர்சிக்க முயற்சிக்கக் கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டார். நோயாளிகளை குணப்படுத்துவதன் மூலம் மனிதகுலத்திற்கு நன்மை செய்வதே அனைவரின் நோக்கம் என்று குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்தார்.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"அழுக்கேறிய மூளையை சுத்தம் செய்ய முடியாது" தாத்தா ஸ்டைலில் உதயநிதி போட்ட ஒற்றை ட்வீட்!
Nobel Prize 2024: வேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு கூட்டாக அறிவிப்பு; யார் யாருக்கு? ஏன்?
Nobel Prize 2024: வேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு கூட்டாக அறிவிப்பு; யார் யாருக்கு? ஏன்?
MK Stalin:
"நம்மை நம்பி நாம்" முதல்வர் மு.க.ஸ்டாலினின் புதிய அதிரடி திட்டம்..!
Breaking News LIVE OCT 9: ரஜினியின் வேட்டையன் படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி.!
ரஜினியின் வேட்டையன் படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thalavai Sundaram Removed From ADMK | தளவாய் நீக்கப்பட்டது ஏன்?தூக்கியடித்த EPS..தூண்டில் போடும் BJPPolice Attack Old Man | வியாபாரியை அறைந்த SI காலில் விழுந்த முதியவர் பரபரப்பு CCTV காட்சிJammu & Kashmir Election Results : சொல்லி அடித்த ராகுல்! மண்ணை கவ்விய பாஜக!மோடி சறுக்கியது எப்படி?Thalavai Sundaram Removed From ADMK:  தளவாய் சுந்தரம் நீக்கம்!எடப்பாடி  அதிரடி..பாஜகவுடன் நெருக்கமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"அழுக்கேறிய மூளையை சுத்தம் செய்ய முடியாது" தாத்தா ஸ்டைலில் உதயநிதி போட்ட ஒற்றை ட்வீட்!
Nobel Prize 2024: வேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு கூட்டாக அறிவிப்பு; யார் யாருக்கு? ஏன்?
Nobel Prize 2024: வேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு கூட்டாக அறிவிப்பு; யார் யாருக்கு? ஏன்?
MK Stalin:
"நம்மை நம்பி நாம்" முதல்வர் மு.க.ஸ்டாலினின் புதிய அதிரடி திட்டம்..!
Breaking News LIVE OCT 9: ரஜினியின் வேட்டையன் படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி.!
ரஜினியின் வேட்டையன் படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி.!
சாம்சங் ஊழியர்கள் போராட்டம் நடத்த தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!
சாம்சங் ஊழியர்கள் போராட்டம் நடத்த தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!
மாநிலக் கல்லூரி மாணவர் சுந்தர் கொலை; மாணவர்கள் போராட்டம்- 6 நாட்கள் விடுமுறை விட்ட நிர்வாகம்
மாநிலக் கல்லூரி மாணவர் சுந்தர் கொலை; மாணவர்கள் போராட்டம்- 6 நாட்கள் விடுமுறை விட்ட நிர்வாகம்
Vettaiyan Pre Sales : முன்பதிவுகளில் இந்தியன் 2 வசூலை முந்திய வேட்டையன்...வேட்டையன் ப்ரீ பிஸ்னஸ் பற்றி தெரிந்துகொள்ளலாம்
Vettaiyan Pre Sales : முன்பதிவுகளில் இந்தியன் 2 வசூலை முந்திய வேட்டையன்...வேட்டையன் ப்ரீ பிஸ்னஸ் பற்றி தெரிந்துகொள்ளலாம்
தேர்தல் ஆணையம் பாஜக வெற்றிக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளது; உச்சநீதிமன்றம் செல்வோம் - செல்வ பெருந்தகை
தேர்தல் ஆணையம் பாஜக வெற்றிக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளது; உச்சநீதிமன்றம் செல்வோம் - செல்வ பெருந்தகை
Embed widget