![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Pondicherry Poisonous Gas : கழிவறையில் விஷவாயு தாக்குதல் - புதுச்சேரியில் 3 பெண்கள் உயிரிழப்பு, பொதுமக்கள் வெளியேற்றம்
Poison Gas Attack: புதுச்சேரியில் கழிவறையில் விஷவாயு தாக்கி, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
![Pondicherry Poisonous Gas : கழிவறையில் விஷவாயு தாக்குதல் - புதுச்சேரியில் 3 பெண்கள் உயிரிழப்பு, பொதுமக்கள் வெளியேற்றம் Poison gas attack in toilet 3 people died in Puducherry people evacuated Pondicherry Poisonous Gas : கழிவறையில் விஷவாயு தாக்குதல் - புதுச்சேரியில் 3 பெண்கள் உயிரிழப்பு, பொதுமக்கள் வெளியேற்றம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/11/5d72a92e1606da69e139a5c6e8796faf1718083192260739_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Poison Gas Attack: புதுச்சேரியில் கழிவறையில் விஷவாயு தாக்கி 3 பெண்கள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விஷவாயு தாக்கி பெண்கள் பலி:
புதுச்சேரி: ரெட்டியார்பாளையம் பகுதியைச் சேர்ந்த மூதாட்டி செந்தாமரை வீட்டு கழிவறயில் விஷவாயு தாக்கி மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அவரை மீட்க சென்ற மகள் மற்றும் பேத்தியும் அடுத்தடுத்து மயங்கி விழுந்துள்ளனர். மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்த, 15 வயதான பாக்கியலட்சுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்..
விஷ வாவு தாக்கி மூன்று பெண்கள் பலி
புதுச்சேரி, ரெட்டியார் பாளையம் பகுதியைச் சேர்ந்த மூதாட்டி செந்தாமரை காலை கழிவறைக்கு சென்றுள்ளார். அப்பொழுது கழிவறையில் விஷவாய்வு தாக்கியதால் அங்கேயே மயக்கம் அடைந்து கீழே விழுந்துள்ளார். இதனை கண்டு அவரை தூக்குவதற்காக அவரது மகள் காமாட்சி சென்றபோது காமாட்சியும் விஷவாயுத்தாக்கி கீழே மயங்கி விழுந்துள்ளார்.
இந்த நிலையில் செந்தாமரையின் பேத்தி பாக்கியலட்சுமி தனது தாய் மற்றும் பாட்டியை தூக்க கழிவறைக்குச் சென்றபோது அவரும் மயங்கி விழுந்துள்ளார்.
இந்த நிலையில் அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்ததின் பேரில் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து அவர்கள் மூன்று பேரையும் மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் அப்பொழுது மருத்துவர் பரிசோதனை செய்ததில் செந்தாமரை மற்றும் காமாட்சி ஆகியோர் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
மேலும் விஷவாயு தாக்கிய நிலையில் பாக்கியலட்சுமி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழநதார்., மேலும் அக்கம்பக்க வீடுகளில் இருப்பவர்கள் உடனடியாக வெளியேறும்படி காவல்துறை வலியுறுத்தியுள்ளது. பாதாள சாக்கடை நிரம்பி வழிவது குறித்து தெரிவித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். கழிவறைக்குச் சென்ற போது விஷவாயுத்தாக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் புதுச்சேரியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)