மேலும் அறிய

PM Security Breach | பிரதமர் பாதுகாப்பு: இண்டெலிஜன்ஸ், ப்ளூ புக்' விதிமுறைகளை உதாசீனப்படுத்தியதா பஞ்சாப் காவல்துறை?

"புளூ புக் கூறுவது படி, பிரதமரின் வருகையின்போது பஞ்சாபில் நடந்ததைப் போன்ற ஏதேனும் பாதகமான சூழ்நிலை ஏற்பட்டால், பாதுகாப்பிற்கான தற்காலிக வழியை மாநில காவல்துறை தயார் செய்ய வேண்டும்"

சிறப்புப் பாதுகாப்புக் குழுவின் (SPG) நீலப் புத்தகம் பிரதமரின் பாதுகாப்பிற்கான பாதுகாப்பு வழிகாட்டுதல்களை வகுத்துள்ளது. "புளூ புக் கூறுவது படி, பிரதமரின் வருகையின் போது பஞ்சாபில் நடந்ததைப் போன்ற ஏதேனும் பாதகமான சூழ்நிலை ஏற்பட்டால், பாதுகாப்பிற்கான தற்காலிக வழியை மாநில காவல்துறை தயார் செய்ய வேண்டும்" என்று MHA அதிகாரி கூறினார். இண்டெலிஜன்ஸ் அதிகாரிகள் பஞ்சாப் காவல்துறையுடன் தொடர்பில் இருப்பதாகவும், போராட்டக்காரர்கள் நடமாட்டம் குறித்து அவர்களை எச்சரித்ததாகவும், விஐபிக்கு முழுப் பாதுகாப்பு அளிப்பதாக பஞ்சாப் காவல்துறை அதிகாரிகள் உறுதியளித்ததாகவும் அவர் மேலும் கூறினார்.

சிறப்புப் பாதுகாப்புக் குழு (SPG) பணியாளர்கள் பிரதமருக்கு அருகாமையில் இருக்கிறார்கள், மீதமுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை மாநில அரசு கவனித்துக்கொள்கிறது. ஏதேனும் திடீர் மாற்றங்கள் ஏற்பட்டால், மாநில காவல்துறை SPG யை தொடர்புகொள்ளும், விஐபிகளின் பயண திட்டம் அதற்கேற்ப மாற்றப்படும் என்று அந்த அதிகாரி கூறினார். 2021 ஆம் ஆண்டில், பாகிஸ்தானில் இருந்து பஞ்சாப் எல்லையில் சுமார் 150 ட்ரோன் காட்சிகள் பதிவு செய்யப்பட்டன, மேலும் இதுபோன்ற பல காட்சிகள் கணக்கிடப்படவில்லை. பல ட்ரோன்களில் டிபன் குண்டுகள், கைக்குண்டுகள், கைத்துப்பாக்கிகள் மற்றும் பணம் ஆகியவற்றை காண முடிந்தது. பிரதமரின் வருகையின் போது பஞ்சாப் காவல்துறை மேற்கொண்ட காவலர் வரிசைப்படுத்தல், பிரதான சாலையை சீராக்குதல், காவலர் டெண்ட், தடுப்புகள் மற்றும் பிற பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றிய விவரங்களை MHA-இன் குழு கோருகிறது.

PM Security Breach | பிரதமர் பாதுகாப்பு: இண்டெலிஜன்ஸ், ப்ளூ புக்' விதிமுறைகளை உதாசீனப்படுத்தியதா பஞ்சாப் காவல்துறை?

"பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து புலனாய்வு அமைப்புகளிடம் இருந்து அறிக்கை கோரப்பட்டுள்ளது," என்று அவர் கூறினார். ஃபெரோஸ்பூர் மாவட்டத்தில் உள்ள இந்திய-பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள விவசாய வயலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருள் நிரப்பப்பட்ட டிபன் பாக்ஸை பஞ்சாப் போலீசார் நவம்பர் 4-ஆம் தேதி மீட்டனர்.

42,750 கோடி மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஃபெரோஸ்பூருக்குச் செல்லவிருந்தார். உள்துறை அமைச்சகம் "கடுமையான பாதுகாப்பு குறைபாடுகளை" உணர்ந்து பஞ்சாப் அரசிடம் இருந்து விரிவான அறிக்கையை கோரியுள்ளது. இந்த தவறுக்கு மாநில அரசு பொறுப்பேற்று கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. புதன்கிழமை காலை பத்திண்டாவில் இறங்கிய பிரதமர் மோடி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஹுசைனிவாலாவில் உள்ள தேசிய தியாகிகள் நினைவிடத்துக்குச் செல்லவுள்ளதாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

PM Security Breach | பிரதமர் பாதுகாப்பு: இண்டெலிஜன்ஸ், ப்ளூ புக்' விதிமுறைகளை உதாசீனப்படுத்தியதா பஞ்சாப் காவல்துறை?

மேலும் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், மழை மற்றும் மோசமான தெரிவுநிலை காரணமாக, வானிலை சரியாகும் வரை பிரதமர் சுமார் 20 நிமிடங்கள் காத்திருந்தார். வானிலை சீரடையாததால், சாலை வழியாக தேசிய தியாகிகள் நினைவிடத்திற்கு செல்வது என முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கு இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக ஆகும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. டிஜிபி பஞ்சாப் காவல்துறையின் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்தபிறகு பிரதமர் சாலை மார்க்கமாக பயணம் செய்தார்.

ஹுசைனிவாலாவில் உள்ள தேசிய தியாகிகள் நினைவிடத்தில் இருந்து சுமார் 30 கி.மீ தொலைவில், பிரதமரின் கார் மேம்பாலத்தை அடைந்தபோது, ​​சில போராட்டக்காரர்கள் சாலையை மறித்தனர். பிரதமர் 15-20 நிமிடங்கள் மேம்பாலத்தில் சிக்கிக் கொண்டார். "இது பிரதமரின் பாதுகாப்பில் பெரும் குளறுபடியாகும். பிரதமரின் அட்டவணை மற்றும் பயணத் திட்டம் முன்கூட்டியே பஞ்சாப் அரசுக்குத் தெரிவிக்கப்பட்டது. நடைமுறையின்படி, தளவாடங்கள், பாதுகாப்பு மற்றும் வைத்திருக்க தேவையான ஏற்பாடுகளை அவர்கள் செய்ய வேண்டும். தற்செயல் திட்டம் தயாராக இருந்தது, மேலும் தற்செயல் திட்டத்தைக் கருத்தில் கொண்டு, பஞ்சாப் அரசு கூடுதல் பாதுகாப்பை நிலைநிறுத்தி இருக்க வேண்டும், சாலை வழியாக பிரதமர் செல்ல எந்த இயக்கமும் அதில் தெளிவாக இல்லை. இந்த பாதுகாப்பு குறைபாடுக்குப் பிறகு, பிரதமர் கார் மீண்டும் பத்திண்டா விமான நிலையத்திற்குத் திரும்ப முடிவு செய்யப்பட்டது," என்று அந்த அறிக்கை மேலும் கூறியது.

பஞ்சாப் காவல்துறைக்கு மட்டுமே பிரதமரின் துல்லியமான வழி தெரியும் என்றும், "இதுபோன்ற காவல்துறை நடத்தையை ஒருபோதும் பார்த்ததில்லை" என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
ABP Premium

வீடியோ

Piyush Goyal on Vijay | ”விஜய் ஒரு SPOILER
TVK Ajitha | காரை மறித்த பெண் நிர்வாகி தவெகவில் இருந்து நீக்கம்?ஆக்‌ஷனில் இறங்கிய விஜய்
அதிமுக - பாஜக MEETING! MISS ஆன அண்ணாமலை! ஒதுக்கி வைக்கும் பாஜக
ஆதவ் அர்ஜூனாவுடன் ஒரே மேடையில் காங்கிரஸ் கட்சியினர்! கூட்டணிக்கான அச்சாரமா?
விஜய் சொன்னது பொய் கதை?”மக்களை அடிமையாக்கிய ஜோசப்” சர்ச்சையான KUTTY STORY உண்மை இதுதான்? | Christmas TVK Vijay Speech |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விஜய் ஒரு Spoiler .! அதிமுக- பாஜக கூட்டணியின் வெற்றிக்கு சிக்கல்.? போட்டுடைத்த பியூஸ் கோயல்
விஜய் ஒரு Spoiler .! அதிமுக- பாஜக கூட்டணியின் வெற்றிக்கு சிக்கல்.? போட்டுடைத்த பியூஸ் கோயல்
Pongal Gift: பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
America Offer illegal Immigrants: இலவச விமானப் பயணச்சீட்டு, 3000 டாலர்கள், அபராதம் ரத்து; ட்ரம்ப் அதிரடி ஆஃபர்; யாருக்கு தெரியுமா.?
இலவச விமானப் பயணச்சீட்டு, 3000 டாலர்கள், அபராதம் ரத்து; ட்ரம்ப் அதிரடி ஆஃபர்; யாருக்கு தெரியுமா.?
Bottle Water New Regulations: பாட்டில் குடிநீருக்கு புதிய விதிமுறைகள்; FSSAI கெடுபிடி; ஜனவரி 1 முதல் இதெல்லாம் கட்டாயம்
பாட்டில் குடிநீருக்கு புதிய விதிமுறைகள்; FSSAI கெடுபிடி; ஜனவரி 1 முதல் இதெல்லாம் கட்டாயம்
Embed widget