மேலும் அறிய

PM Modi Speech : "நாடு முழுவதும் காவல்துறையினருக்கு ஒரே சீருடை" - பிரதமர் மோடி

நாடு முழுவதும் உள்ள காவல்துறையினருக்கு ஒரே மாதிரியான சீருடை பற்றி சிந்திக்க வேண்டும் என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.

ஒரே மொழி, ஒரே கலாசாரம், ஒரே மக்கள் என நாட்டு மக்களிடையே பல்வேறு விவகாரங்களை திணிக்க மத்திய அரசு  முயற்சிப்பதாக தொடர் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வருகிறது. ஆனால், நாட்டு மக்களிடையே ஒத்திசையை கொண்டு வரும் வகையில் இந்த திட்டங்கள் கொண்டு வரப்படுவதாக மத்திய அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள காவல்துறைக்கு ஒரே சீருடையை கொண்டு வருவதற்கான திட்டத்தை பிரதமர் மோடி இன்று முன்மொழிந்துள்ளார். இது ஆலோசனை மட்டும்தான், திணிப்பு அல்ல என்றும் அவர் கூறியுள்ளார். 

மாநில உள்துறை அமைச்சர்கள் கலந்து கொண்ட சிந்தனை அமர்வு கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, "காவல்துறைக்கான 'ஒரே நாடு, ஒரே சீருடை' என்பது ஒரு யோசனை மட்டுமே. நான் அதை உங்கள் மீது திணிக்க முயற்சிக்கவில்லை. சற்று சிந்தித்து பாருங்கள். இது நடக்கலாம். ஐந்து, 50 அல்லது 100 வருடங்களில் நடக்கலாம். ஆனால் அதைச் சிந்திப்போம்.

 

நாடு முழுவதும் உள்ள காவல்துறையின் அடையாளம் ஒரே மாதிரியாக இருக்கலாம். குற்றங்களையும் குற்றவாளிகளையும் கையாள்வதில் மாநிலங்கள் இடையே இணக்கமான ஒத்துழைப்பு வேண்டும்" என்றார்.

சட்டம் ஒழுங்கில் மாநிலங்களுக்கு இடையே ஒரே மாதிரியான கொள்கையை கொண்டு வர வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதை ஆதரித்து பேசிய மோடி, "கூட்டாட்சி என்பது அரசியலமைப்புச் சட்டத்தின் உணர்வு மட்டுமல்ல. மாநிலங்கள் மற்றும் மத்திய அரசின் பொறுப்பாகவும் இருக்கிறது.

அரசியலமைப்புச் சட்டத்தின்படி சட்டம் ஒழுங்கு என்பது மாநிலப் பட்டியலில் இருந்தாலும், அவை நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு தொடர்புடையது. ஒவ்வொரு மாநிலமும் கற்க வேண்டும். ஒருவருக்கொருவர் உத்வேகம் பெற வேண்டும். உள் நாட்டு பாதுகாப்புக்காக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

உள்நாட்டுப் பாதுகாப்பிற்காக மாநிலங்கள் ஒன்றிணைந்து செயல்படுவது என்பது அரசியலமைப்புச் சட்டம் மற்றும் தேசத்திற்கான பொறுப்பு. மத்திய மாநிலங்களின் கட்டுப்பாட்டில் உள்ள அமைப்புகளின் செயல்திறன், அதன் செயல்பாடுகளின் விளைவுகள் மற்றும் சாமானியர்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்த ஒருவருக்கொருவர் ஒத்துழைக்க வேண்டும்.

சட்டம், ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு விவகாரத்தில் வளர்ந்து வரும் சவால்களை எதிர்கொள்ள அனைத்து அமைப்புகளும் ஒருங்கிணைந்த நடவடிக்கைக்காக பாடுபடுவதால், பழைய சட்டங்களை மறுபரிசீலனை செய்து அவற்றை தற்போதைய சூழலுக்கு மாற்றுமாறு மாநில அரசாங்கங்களை வலியுறுத்துகிறேன்" என்றார்.

தலைப்பு செய்திகள்

Independence day 2026: 80-வது சுதந்திர தினத்தில் மாஸ் காட்டப்போகும் Gen-Z ... முதல்முறையாக எதிரொலிக்கும் 'வந்தே மாதரம்'!
80-வது சுதந்திர தினத்தில் மாஸ் காட்டப்போகும் Gen-Z ... முதல்முறையாக எதிரொலிக்கும் 'வந்தே மாதரம்'!
Khudiram Bose: பகத் சிங் தெரியும்; குதிராம் போஸ் தெரியுமா? 18 வயதிலேயே நாட்டுக்காக தூக்கு மேடை ஏறிய தியாகி!
Khudiram Bose: பகத் சிங் தெரியும்; குதிராம் போஸ் தெரியுமா? 18 வயதிலேயே நாட்டுக்காக தூக்கு மேடை ஏறிய தியாகி!
FCRA Bill: உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
Students Protest : தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு
தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
TN Weather News: சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
T.T.Praveen: தமிழை மலையாளத்தில் எழுதி பேச்சு.. சட்டசபையில் கவனம் ஈர்த்த பிரவீன் யார் தெரியுமா?
T.T.Praveen: தமிழை மலையாளத்தில் எழுதி பேச்சு.. சட்டசபையில் கவனம் ஈர்த்த பிரவீன் யார் தெரியுமா?
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
Rasi Palan Today (11-08-2026): கடகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு வெற்றி.. உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
Rasi Palan Today (11-08-2026): கடகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு வெற்றி.. உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Embed widget