மேலும் அறிய

‛நாட்டில் மனித உரிமை மீறல் அதிகரிக்கவில்லை; ஆனால் உத்தரப்பிரதேசத்தில்...’ - மத்திய அரசு

நாட்டில் மனித உரிமை மீறல்கள் அதிகரிக்கவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

நாட்டில் மனித உரிமை மீறல்கள் அதிகரிக்கவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவம்பர் 29 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அப்போது மாநிலங்களைவையில் நேற்று பேசிய திமுக எம்பி சண்முகம் நாட்டில், நாளுக்கு நாள் மனித உரிமை மீறல்கள் அதிகரிக்கிறதா என்ற கேள்விகளை முன்வைத்தார். 

திராவிட முன்னேற்றக் கழக எம்பி எம்.சண்முகம் எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் கூறுகையில், “தேசிய மனித உரிமைகள் ஆணையம் அளித்த தரவுகளின்படி இந்தியாவில் மனித உரிமை மீறல்கள் அதிகரிக்கவில்லை” எனத் தெரிவித்தார். 

அரசு பகிர்ந்துள்ள தரவுகளின்படி, தேசிய மனித உரிமைகள் ஆணையம்  இந்த ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி வரை 64,170 மனித உரிமை மீறல் வழக்குகளை பதிவு செய்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டுள்ளதாக அந்த தரவுகள் தெரிவிக்கின்றன.

2018ஆம் ஆண்டு 89,584 வழக்குகளும், 2019ஆம் ஆண்டு 76,628 வழக்குகளும், 2020ஆம் ஆண்டு 74,968 வழக்குகளும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய மனித உரிமைகள் ஆணையம் 2018 முதல் மனித உரிமைகள் மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மொத்தம் ரூ. 63.67 கோடியை நிவாரணமாக பரிந்துரை செய்துள்ளது.


‛நாட்டில் மனித உரிமை மீறல் அதிகரிக்கவில்லை; ஆனால் உத்தரப்பிரதேசத்தில்...’ - மத்திய அரசு

நாட்டில் உள்ள மொத்த மனித உரிமை மீறல்கள் வழக்குகளில் உத்தரபிரதேசத்தில் அதிகபட்சமாக 24,242 வழக்குகள் பதிவாகியுள்ளன. உத்தரப்பிரதேசத்தில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக மனித உரிமை மீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. உத்தரபிரதேசத்தில் 2018 ஆம் ஆண்டு 41,947 வழக்குகளும், 2019ஆம் ஆண்டு 32,693 வழக்குகளும் 2020ஆம் ஆண்டில் 30,164 வழக்குகளும் பதிவாகியுள்ளன. 

கடந்த 3 ஆண்டுகளில் இந்த அக்டோபர் 31 வரை தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் ஆண்டுதோறும் பதிவு செய்யப்படும் மனித உரிமை மீறல் வழக்குகளில் 40% உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவை என கணக்கிடப்பட்டுள்ளது. 


‛நாட்டில் மனித உரிமை மீறல் அதிகரிக்கவில்லை; ஆனால் உத்தரப்பிரதேசத்தில்...’ - மத்திய அரசு

டெல்லியில் 2018ஆம் ஆண்டில் 6,562 வழக்குகளும், 2019ஆம் ஆண்டில் 5,842 வழக்குகளும், 2020ஆம் ஆண்டில் 6,067 வழக்குகளும் மற்றும் இந்த ஆண்டு அக்டோபர் 31 வரை 4,972 வழக்குகளும் பதிவாகியுள்ளன என மத்திய அரசு பகிர்ந்த தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

 

 

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

 

 

 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 

 

 

யூட்யூபில் வீடியோக்களை காண  

தலைப்பு செய்திகள்

Independence day 2026: 80-வது சுதந்திர தினத்தில் மாஸ் காட்டப்போகும் Gen-Z ... முதல்முறையாக எதிரொலிக்கும் 'வந்தே மாதரம்'!
80-வது சுதந்திர தினத்தில் மாஸ் காட்டப்போகும் Gen-Z ... முதல்முறையாக எதிரொலிக்கும் 'வந்தே மாதரம்'!
Khudiram Bose: பகத் சிங் தெரியும்; குதிராம் போஸ் தெரியுமா? 18 வயதிலேயே நாட்டுக்காக தூக்கு மேடை ஏறிய தியாகி!
Khudiram Bose: பகத் சிங் தெரியும்; குதிராம் போஸ் தெரியுமா? 18 வயதிலேயே நாட்டுக்காக தூக்கு மேடை ஏறிய தியாகி!
FCRA Bill: உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
Students Protest : தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு
தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினை; ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினை; ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Tamilisai: சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
Tamil Thai Vazhthu : ‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
Embed widget