மேலும் அறிய

Ujwala Scheme : ஒருமுறை கூட சிலிண்டர் வாங்காத 90 லட்சம் பேர்... பரிதாப நிலையில் உஜ்வாலா திட்டம்..

பிரதமரின் உஜ்வாலா திட்டத்தில் பயனடைந்த பயனாளர்களில் 90 லட்சம் பேர் கடந்த ஓராண்டில் ஒருமுறை கூட, மறுமுறை எரிவாயு சிலிண்டரை பெறவில்லை என்ற அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரதமரின் உஜ்வாலா திட்டத்தில் பயனடைந்த பயனாளர்களில் 90 லட்சம் பேர் கடந்த ஓராண்டில் ஒருமுறை கூட, மறுமுறை எரிவாயு சிலிண்டரைப் பெறவில்லை என்ற அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளது.


Ujwala Scheme : ஒருமுறை கூட சிலிண்டர் வாங்காத 90 லட்சம் பேர்... பரிதாப நிலையில் உஜ்வாலா திட்டம்..

கடந்த  2016-ஆம் ஆண்டில், மத்திய அரசின் உஜ்வாலா யோஜனா திட்டம், நாட்டிலுள்ள வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 5 கோடி பெண் உறுப்பினர்களுக்கு சமையல் எரிவாயு இணைப்புகளை வழங்குவதை இலக்காகக் கொண்டுத் தொடங்கப்பட்டது. பின்னர், இத்திட்டத்தின் இலக்கு 8 கோடி சமையல் எரிவாயு இணைப்புகளாக மாற்றியமைக்கப்பட்டது. இந்த இலக்கு வரையறுக்கப்பட்ட காலத்திற்கு 7 மாதங்கள் முன்பே, ஆகஸ்ட் 2019-இல்  எட்டப்பட்டது என்று மத்திய அரசு கூறியுள்ளது. அதோடு, 2021-22 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் கூடுதலாக ஒரு கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் முதற்கட்டத்தில் கொண்டுவரப்படாத குறைந்த வருமானம் உடைய குடும்பங்களுக்கு வைப்புத்தொகை இல்லாமல் கூடுதலாக ஒரு கோடி சமையல் எரிவாயு இணைப்புகளை வழங்க அரசு திட்டமிட்டது. இதற்கு உஜ்வாலா 2.0 திட்டம் என்று பெயரிடப்பட்ட இத்திட்டத்தை பிரதமர் மோடி கடந்த ஆண்டு ஆகஸ்ட் 10ம் தேதி உத்தரப்பிரதேசத்தில் தொடங்கிவைத்தார்.

இந்நிலையில், உஜ்வாலா திட்டத்தால் பயனடைந்த பயனாளர்கள் எத்தனை பேர் மீண்டும் எரிவாயு உருளையை வாங்கினர்? ஒரு முறைக்கு மேல் எரிவாயு உருளையை வாங்கியவர்கள் எத்தனை பேர் என்று தகவல் அரியும் உரிமைச்சட்டம் மூலம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்துள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள், உஜ்வாலா திட்டத்தால் பயன்பெற்ற பயனாளர்களில் 90 லட்சம் பேர் கடந்த ஓராண்டில் ஒரு முறைகூட மற்றொரு எரிவாயு உருளையை வாங்கவில்லை என்றும், சுமார்.1.08 கோடி பேர் ஒரே ஒரு முறை மற்றொரு எரிவாயு உருஐயை வாங்கியுள்ளனர் என்று கூறியுள்ளன.

இந்தியன் ஆயில் நிறுவனம் அளித்துள்ள பதிலில், 2021-2022 நிதியாண்டில் கடந்த மார்ச் 21ம் தேதி நிலவரப்படி இத்திட்டத்தால் பயனடைந்தவர்களில் 65 லட்சம் பேர் மீண்டும் சிலிண்டர் வாங்கவில்லை என்றும், சுமார் 52 லட்சம் பேர் ஒரு முறை மட்டும் மற்றொரு சிலிண்டர் வாங்கியுள்ளனர் என்று கூறியுள்ளது.

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் அளித்துள்ள பதிலில், 2021-2022 நிதியாண்டில்,  இத்திட்டத்தால் பயனடைந்தவர்களில் 9.12 லட்சம் பேர் மீண்டும் சிலிண்டர் வாங்கவில்லை என்றும், சுமார் 27.58 லட்சம் பேர் ஒரு முறை மட்டும் மற்றொரு சிலிண்டர் வாங்கியுள்ளனர் என்று கூறியுள்ளது.

பாரத் பெட்ரோலியம் நிறுவனம் அளித்துள்ள பதிலில், 2021-2022 நிதியாண்டில்,  இத்திட்டத்தால் பயனடைந்தவர்களில் 15.96 லட்சம் பேர் மீண்டும் சிலிண்டர் வாங்கவில்லை என்றும், சுமார் 28.56 லட்சம் பேர் ஒரு முறை மட்டும் மற்றொரு சிலிண்டர் வாங்கியுள்ளனர் என்று கூறியுள்ளது.

பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் 8.99 கோடி பேர் இதுவரை பயனடைதுள்ள நிலையில், 90 லட்சம் பேர் மீண்டும் எரிவாயு உருளையை வாங்கவில்லை என்றும், 1.08 கோடி பேர் ஒரே ஒரு முறை மட்டும் மற்றொரு சிலிண்டர்(refill) வாங்கியுள்ளனர் என்று இந்நிறுவனங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
Embed widget