மேலும் அறிய

Nawab Malik Arrested:பணமோசடி வழக்கில் மகாராஷ்டிர அமைச்சர் நவாப் மாலிக்கை கைது செய்தது அமலாக்கத்துறை

பணமோசடி வழக்கில் மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரபல நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் தொடர்பான பணமோசடி வழக்கில் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவரும் மகாராஷ்டிரா அமைச்சருமான நவாப் மாலிக் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை அமலாக்கத்துறை கைது செய்து விசாரணை செய்ய உள்ளது. 

நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் பணமோசடி செய்தது தொடர்பாக அமலாக்கத்துறை பலரிடம் விசாரணை நடத்தி வருகிறது. அந்தவகையில் இந்த வழக்கு தொடர்பாக விசாரிக்க இன்று காலை அமலாக்கத்துறையினர் மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக்கின் வீட்டிற்கு சென்றதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக அவருடைய ட்விட்டர் பக்கத்திலும் உறுதி செய்யப்பட்டது. 

 

இந்நிலையில் தற்போது அந்த வழக்கு தொடர்பாக விசாரிக்க அவரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. அவரை கைது செய்த பின்பு மருத்துவ பரிசோதனைக்காக அமலாக்கத்துறை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளது. இதன்பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 

இவருடைய கைது தொடர்பாக சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மத்திய அரசிற்கு எதிராக யார் குற்றம்சாட்டினாலும் அவர்கள் மீது இது போன்ற நடவடிக்கை பாய்ந்து வருகிறது என்று இரு கட்சி தலைவர்களும் குற்றம்சாட்டி வருகின்றனர். இருப்பினும் இந்த கட்சிகளின் குற்றச்சாட்டை பாஜக மறுத்து வருகிறது. நவாப் மாலிக் தாவூத் இப்ராஹிமிற்கு தொடர்புடைய நபரிடம் இருந்து நிலம் ஒன்றை வாங்கியுள்ளார். ஆகவே தான் அவர் மீது விசாரணை நடத்தப்படுகிறது என்று  பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. 

இந்தியாவில் 1993ல் மும்பையில் நடந்த குண்டுவெடிப்புக்கு முக்கிய காரணமாக இருந்தவர் தாவூத் இப்ராஹிம். இவர் தற்போது வரை தலைமறைவாக உள்ளார். இவருடன் தொடர்பில் உள்ள நபர்களை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது.  1993ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் தொடர்புடைய தாவூத் இப்ராஹிமின் கூட்டாளி அபுபக்கர் 29 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டார். எனினும் தற்போது வரை தாவூத் இப்ராஹிம் எங்கு இருக்கிறார் என்று யாருக்கும் தகவல் கிடைக்கவில்லை. தாவூத் இப்ராஹிம் மீதான பண மோசடி வழக்கை அமலாக்கத்துறை தீவிரம் காட்டிவருகிறது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget