மேலும் அறிய

Mosque : மசூதிபோல காட்சியளித்த பேருந்து நிலையம்.. மிரட்டல் விடுத்த பாஜக எம்பி.. அகற்றப்பட்ட குவிமாடம்..!

பார்ப்பதற்கு மசூதி போல காட்சி அளிப்பதாக கூறி பாஜக எம்பி விடுத்த மிரட்டலால் தற்போது அதன் தோற்றமே மாற்றப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதில், ஆளும் பாஜக, பிரதான எதிர்கட்சியான காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என பாஜக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால், பாஜக ஆட்சியில் ஊழல் அதிகரித்துவிட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதற்கிடையே, மைசூரில் உள்ள ஒரு பேருந்து நிலையம் பேசுபொருளாக மாறியது. அது, பார்ப்பதற்கு மசூதி போல காட்சி அளிப்பதாக கூறி பாஜக எம்பி விடுத்த மிரட்டலால் தற்போது அதன் தோற்றமே மாற்றப்பட்டுள்ளது.

பேருந்து நிலையத்தின் புதிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூகவலைதளத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது. சர்ச்சையை ஏற்படுத்திய அந்த பேருந்து நிலையம், கேரள எல்லையில் தேசிய நெடுஞ்சாலை 766-இல் கொள்ளேகல பகுதியில் அமைந்துள்ளது. முன்னதாக, அந்த பேருந்து நிலையத்தின் மேற்பகுதியில் தங்க நிறத்தில் மூன்று குவிமாடங்கள் இருந்தன. ஆனால், தற்போது அதற்கு ஒரு குவிமாடமே உள்ளது. அதுவும், சிவப்பு நிறத்தில் உள்ளது.

மசூதி போல காட்சியளித்த அந்த மூசூதியை இடிக்க பொறியாளர்களுக்கு கர்நாடக பாஜக எம்பி பிரதாப் சிம்ஹா உத்தரவிட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது. இதில், கவனிக்க வேண்டியது என்னவென்றால் அந்த பேருந்து நிலையத்தை பாஜக எம்எல்ஏதான் கட்டி இருக்கிறார்.

மசூதி குறித்து பேசியிருந்த பிரதாப் சிம்ஹா, "சமூக வலைதளங்களில் பார்த்திருக்கிறேன். பஸ் ஸ்டாண்டில் மூன்று குவிமாடங்கள் உள்ளன. நடுவில் பெரியது மற்றும் அதன் அருகில் இரண்டு சிறியது. அது மசூதிதான். மைசூரின் பெரும்பாலான பகுதிகளில் இத்தகைய வடிவமைப்பில் கட்டமைப்புகள் கட்டப்பட்டு வருகின்றன.

மூன்று நான்கு நாட்களில் கட்டிடத்தை இடிக்க பொறியாளர்களிடம் கூறியுள்ளேன். இல்லை என்றால் ஜேசிபியை எடுத்து இடித்து விடுவேன்" என குறிப்பிட்டிருந்தார். இவரது கருத்து, பிளவை ஏற்படுத்தும் விதமாக இருப்பதாக கூறி எதிர்கட்சியினர் உள்பட பல்வேறு தரப்பின விமர்சித்திருந்தனர். பேருந்து நிறுத்தத்தை கட்டிய உள்ளூர் பாஜக எம்எல்ஏ ராம் தாஸ், முதலில் தனது கட்சி எம்பியின் கருத்துக்களை நிராகரித்திருந்தார். பேருந்து நிழற்குடை வடிவமைப்பு மைசூர் அரண்மனை பாணியில் கட்டப்பட்டதாக அவர் விளக்கம் அளித்தார்.

பின்னர், உள்ளூர் மக்களுக்கு மன்னிப்பு கோரி கடிதம் ஒன்றை எழுதியுள்ள எம்எல்ஏ தாஸ், "மைசூரின் பாரம்பரியத்தை மனதில் கொண்டு பேருந்து நிறுத்தத்தை வடிவமைத்தேன்.

கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளன. அதனால்தான் இரண்டு குவிமாடங்களை அகற்றுகிறேன். யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று காலை, பேருந்து நிழற்குடையில் செய்யப்பட்ட மாற்றங்கள் குறித்த செய்தியை பிரதாப் சிம்ஹா பகிர்ந்துள்ளார். மேலும், தனது கவலைகளை நிவர்த்தி செய்த பாஜக எம்எல்ஏ மற்றும் மாவட்ட நிர்வாகத்துக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Gen Z இளைஞர்களின் மாதாந்திர சம்பளம் எங்கே போகிறது தெரியுமா? அதிரவைக்கும் உண்மை!
Gen Z இளைஞர்களின் மாதாந்திர சம்பளம் எங்கே போகிறது தெரியுமா? அதிரவைக்கும் உண்மை!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Maruti Baleno: ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Embed widget