மேலும் அறிய

Crime: எலிக்கு சித்திரவதை...விலங்கு நல ஆர்வலர் புகார்... 10 மணிநேரம் சிறையில் இருந்த நபர்.. என்ன நடந்தது?

இறந்த எலியின் உடலை புகார்தாரரிடமிருந்து பெற்று உடற்கூராய்வுக்காக கால்நடை மருத்துவமனைக்கு காவல் துறையினர் முன்னதாக அனுப்பி வைத்துள்ளனர்.

எலியை சித்திரவதை கொலை செய்த 34 வயது நபர் விசாரணைக் காவலில் வைக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

உத்தரப் பிரதேசம், பதவுன் நகரைத்தைச் சேர்ந்த மனோஜ் குமார் எனும் இந்நபர் மீது முன்னதாக விலங்கு நல ஆர்வலர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் அந்நபரிடம் காவல் துறையினர் சுமார் 10 மணிநேரம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஐஏஎன்எஸ் தளத்தில் வெளியிடப்பட்ட செய்தியின்படி,  குற்றம் சாட்டப்பட்ட மனோஜ் குமார் தனது குழந்தைகள் முன் எலியை நீரில் முக்கி சித்திரவதை செய்ததாக விக்கேந்திர ஷர்மா எனும் விலங்கு நல ஆர்வலர் முன்னதாகப் புகார் அளித்துள்ளார்.

"மனோஜ் குமார் எலியின் வாலில் கல்லைக் கட்டி நீரில் மூழ்கடித்து துன்புறுத்தியதை நான் கண்டேன். அவரை நான் அழைத்து இதுகுறித்து கேட்டபோது அச்செயலை மீண்டும் செய்வேன் என மனோஜ் குமார் பதிலளித்தார். நான் எலியை உயிருடன் மீட்க முயற்சித்தும் முடியவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் முன்னதாக மனோஜ் குமாரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்த காவலர்கள், எலிகள் 'விலங்குகள்' பிரிவின் கீழ் வராததால் விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் இவ்வழக்கு வராது எனக்கூறி அந்நபரை விடுவித்துள்ளனர்.

ஆனால் இறந்த எலியின் உடலை புகார்தாரரிடமிருந்து பெற்று உடற்கூராய்வுக்காக கால்நடை மருத்துவமனைக்கு காவல் துறையினர் முன்னதாக அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து, கால்நடை மருத்துவமனை ஊழியர்கள் எலியை உடற்கூராய்வு செய்ய மறுத்த நிலையில், பரேலியில் உள்ள இந்தியக் கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்துக்கு (IVRI) எலியின் உடல் முன்னதாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த விவகாரத்தில் சட்ட ஆலோசனை கேட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து முன்னதாகப் பேசிய காவல் துறையினர் உடற்கூராய்வு அறிக்கையை சமர்ப்பிக்க கால்நடை ஆராய்ச்சி நிறுவன அலுவலர்கள் ஒரு வார காலம் அவகாசம் கேட்டுள்ளதாகவும், இந்தப் பரிசோதனைக்கு வேண்டிய 225 ரூபாயை புகார்தாரரே செலுத்தியதாகவும் தெரிவித்துள்ளனர்.

முந்தைய சம்பவம்

இதேபோல் முன்னதாக அகமதாபாத்தின் ஓல்ட் சிட்டி பகுதியில் உள்ள ஷாஹ்பூர் பகுதியில் ஒரு கும்பல் நாயை அடித்துக் கொன்று, அதன் உடலை ஊர்வலமாக எடுத்துச் சென்று சித்திரவதை செய்த இரண்டு பேர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஷாஹ்பூர் காவல் நிலையத்திற்கு வெளியே விலங்குகள் உரிமைக் குழு போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து காவல்துறை நடவடிக்கை எடுத்தது.

விலங்குகளை துன்புறுத்தும் வழக்குகளில் கடுமையான தண்டனையை உறுதி செய்வதற்காக பிசிஏ சட்டம் 1960இல் திருத்தம் செய்ய வேண்டும் என ஏற்கெனவே விலங்கு நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விலங்குகளை துன்புறுத்திய வழக்கில் தொடர்புடையவர்கள் வெறும் 50 ரூபாய் அபராதம் செலுத்தி தப்பித்து விடலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

சபரிமலை நிறை புத்தரிசி பூஜை: ஆகஸ்ட் 3ல் ஐஸ்வர்யம் பெருகும் தரிசனம்! முன்பதிவு அவசியம்.
சபரிமலை நிறை புத்தரிசி பூஜை: ஆகஸ்ட் 3ல் ஐஸ்வர்யம் பெருகும் தரிசனம்! முன்பதிவு அவசியம்.
ரயிலின் பொதுப் பெட்டிகள் ஏன் நடுவில் வைக்கப்படுவதில்லை? காரணம் இதுதான்!
ரயிலின் பொதுப் பெட்டிகள் ஏன் நடுவில் வைக்கப்படுவதில்லை? காரணம் இதுதான்!
வருமான வரி ரீஃபண்ட் 24 மணி நேரத்தில்: வரி செலுத்துவோருக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி!
வருமான வரி ரீஃபண்ட் 24 மணி நேரத்தில்: வரி செலுத்துவோருக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி!
வருமான வரி தாக்கல் செய்தீர்களா? ஈ-வெரிஃபிகேஷன் செய்யாவிட்டால் ITR செல்லாது!
வருமான வரி தாக்கல் செய்தீர்களா? ஈ-வெரிஃபிகேஷன் செய்யாவிட்டால் ITR செல்லாது!

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Office: உச்சத்தில் இருக்க உயரமான இடத்தில் அலுவலகமா.? முதல்வர் விஜய்க்கு தயாராகும் அறை இவ்வளவு ஸ்பெஷலா.?
உச்சத்தில் இருக்க உயரமான இடத்தில் அலுவலகமா.? முதல்வர் விஜய்க்கு தயாராகும் அறை இவ்வளவு ஸ்பெஷலா.?
MK Stalin: “கர்நாடக போக வேண்டாம்” - விஜய்யை எச்சரித்த ஸ்டாலின்! பின்னணி என்ன?
“கர்நாடக போக வேண்டாம்” - விஜய்யை எச்சரித்த ஸ்டாலின்! பின்னணி என்ன?
டெல்லி நீட் போராட்டம் வாபஸ்! கரப்பான் ஜனதா கட்சி- அரசு இடையே உடன்பாடு; கோரிக்கைகள் நிலை?
டெல்லி நீட் போராட்டம் வாபஸ்! கரப்பான் ஜனதா கட்சி- அரசு இடையே உடன்பாடு; கோரிக்கைகள் நிலை?
TVK Budget: ஒவ்வொரு அமைச்சருடனும் 3 மணி நேர ஆலோசனை.. எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள விஜய் அரசின் முதல் பட்ஜெட்!
TVK Budget: ஒவ்வொரு அமைச்சருடனும் 3 மணி நேர ஆலோசனை.. எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள விஜய் அரசின் முதல் பட்ஜெட்!
Trump Vs China Russia: “ஈரானுக்கு ஹெல்ப் பண்ணீங்கன்னா, அப்புறம்..“ சீனா, ரஷ்யாவுக்கு ட்ரம்ப் மிரட்டல்; என்ன சொன்னார் பாருங்க
“ஈரானுக்கு ஹெல்ப் பண்ணீங்கன்னா, அப்புறம்..“ சீனா, ரஷ்யாவுக்கு ட்ரம்ப் மிரட்டல்; என்ன சொன்னார் பாருங்க
Top 3 Most Fuel Efficient Hybrid SUVs: ஹைப்ரிட்லயே நாங்க தான் டாப்.! பக்கா சொகுசுடன் அதிகமான மைலேஜும் தரும் 3 SUV-க்கள் எவை தெரியுமா.?
ஹைப்ரிட்லயே நாங்க தான் டாப்.! பக்கா சொகுசுடன் அதிகமான மைலேஜும் தரும் 3 SUV-க்கள் எவை தெரியுமா.?
''இதான் ஆரம்பம்; இன்னும் 3 முக்கிய கோரிக்கை''- அமைச்சர் ராஜினாமாவை அடுத்து CJP முழக்கம்!
''இதான் ஆரம்பம்; இன்னும் 3 முக்கிய கோரிக்கை''- அமைச்சர் ராஜினாமாவை அடுத்து CJP முழக்கம்!
Dharmendra Pradhan Resign: மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா; மாணவர்களின் தொடர் போராட்டத்தையடுத்து முடிவு
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா; மாணவர்களின் தொடர் போராட்டத்தையடுத்து முடிவு
Embed widget