மேலும் அறிய

Kerala train fire incident: தீ விபத்தை நேரில் கண்டவர்கள் சாட்சி.. காத்திருந்த பைக்கில் ஏறி சென்ற மர்மநபர்... தீவிர விசாரணையில் காவல்துறை..

பெட்டி முழுவதும் தீ மளமளவென பரவி பயணிகளின் ஆடைகள் மற்றும் இருக்கைகளை எரிக்க தொடங்கியது. இதனால், ரயிலில் இருந்து பலத்த அலறல் சத்தம் கேட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

கோழிக்கோடு எலத்தூர் அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் 3 பேர் உயிரிழந்த தீ விபத்து திட்டமிட்டு நடந்ததாக காவல்துறையினர் சந்தேகித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  தொடர்ந்து, விபத்தை ஏற்படுத்திய அடையாளம் தெரியாத மர்ம நபர், பைக்கில் தப்பி சென்றது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் காவல்துறை அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளது. 

இலத்தூர் காட்டு பகுதியில் இறங்கிய மர்ம நபர், அடையாளம் தெரியாத நபர் கொடுத்த பைக்கில் ஏறி தப்பி சென்றதாக, நேரில் கண்ட சாட்சிகள் கொடுத்த வாக்குமூலத்தில் தெரிய வந்துள்ளது, இருப்பினும், இந்த சம்பவம் தொடர்பான முழு விவரங்கள் தெரியவில்லை. 

கேரள காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தீ விபத்தை ஏற்படுத்திய நபர் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில், முன்பதிவு எதுவும் செய்யாமலும், பயணச்சீட்டு எதுவும் இல்லாமல் பயணம் செய்ததாகவும் தெரியவந்துள்ளது. 

என்ன நடந்தது..? 

கேரள மாநிலம் ஆழப்புழா ரயில் நிலையத்தில் இருந்து கண்ணூர் வரை செல்லும் ரயில் நேற்று இரவு 9.50 மணியளவில் கோழிக்கோடு ரயில் நிலையத்திற்கு சென்றபோது டி1 பெட்டியில் அடையாளம் தெரியாத நபர் ஏறியுள்ளார். அப்போது ஏறிய நபருக்கும் அங்கிருந்த பயணி ஒருவருக்கும் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அந்த மர்ம நபர் தனது கையில் வைத்திருந்த பெட்ரோலை சக பயணியின் மீது ஊற்றி தீ வைத்துள்ளார். இதை பார்த்த மற்ற பயணிகள் தீயை அணைக்க முயன்றதில் தீக்காயம் அடைந்தனர். 

அந்த நேரத்தில், பெட்டி முழுவதும் தீ மளமளவென பரவி பயணிகளின் ஆடைகள் மற்றும் இருக்கைகளை எரிக்க தொடங்கியது. இதனால், ரயிலில் இருந்து பலத்த அலறல் சத்தம் கேட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். சத்தம் கேட்டு பயணிகள் அவசரச் சங்கிலியை இழுத்தபோது, ​​எலத்தூரில் உள்ள கோரபுழா ஆற்றுக்கு மேலே டி1 பெட்டி இருந்தது. ரயில் வேகம் குறைந்தவுடன் காயம் பட்ட சில பேர் தங்களது உயிரை காப்பாற்றி கொள்ள வெளியே குதித்ததாகவும் கூறப்படுகிறது. தீ விபத்தை ஏற்படுத்திய அந்த மர்ம நபர் ரயில் நின்றதும் இறங்கி தப்பி சென்றுள்ளார். 

பயத்தில் மற்ற பெட்டிகளில் இருந்த  பயணிகளும் நான்கு பெட்டிகளின் அவசர சங்கிலியை இழுத்து, தீ விபத்து குறித்து ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.இரவு 11.45 மணியளவில் கண்ணூர் ரயில் நிலையத்திற்கு ரயில் வந்தவுடன் டி1 பெட்டிக்கு பாதுகாப்புப் படையினர் சீல் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விபத்தில் இதுவரை 3 உயிரிழந்துள்ளதாகவும், 9 பயணிகள் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
Embed widget