மேலும் அறிய

Dengue: அச்சுறுத்தும் டெங்கு! அலட்சியமா இருந்தா இனிமேல் அபராதம் மக்களே - எவ்வளவு?

டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் டெங்கு கொசு உற்பத்தியாகும் அளவிற்கு அலட்சியமாக செயல்படுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

பொதுவாக பருவ காலங்கள் மாறும்போது காய்ச்சல் உள்பட உடல்நலக்குறைவு மனிதர்களுக்கு ஏற்படுவது இயல்பாகும். அந்த வகையில், இந்தியாவில் பெரும் அச்சறுத்தலாக விளங்குவது டெங்கு காய்ச்சல் ஆகும். டெங்கு காய்ச்சல் பாதிப்பைத் தடுப்பதற்காகவும், உயிரிழப்புகளைத் தடுப்பதற்காகவும் மத்திய மற்றும் அந்தந்த மாநில அரசுகள் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

கர்நாடகாவை அச்சுறுத்தும் டெங்கு:

தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கர்நாடகாவில் டெங்கு காய்ச்சலால் சுமார் 25 ஆயிரம் பேர் இந்தாண்டு பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்தாண்டுடன் ஒப்பிடும்போது இந்தாண்டு 5 ஆயிரம் பேருக்கு பாதிப்பு அதிகம். இதையடுத்து, அந்த மாநில அரசு டெங்கு தடுப்பு நடவடிக்கையை தீவிரமாக எடுத்துள்ளது.

டெங்கு காய்ச்சலை தொற்று நோயாக அறிவித்துள்ள அந்த மாநில அரசு, டெங்குவை பரப்பும் விதமாக அலட்சியமாக நடந்து கொள்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்ற அதிரடி அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.

அபராதம்:

அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஒவ்வொரு நிலம், கட்டிடம், தண்ணீர் தொட்டிகள், பூங்காக்கள், விளையாட்டு மைதானம் உள்ளிட்ட எந்த இடத்திலும் கொசுக்கள் உற்பத்தியாவதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுப்பது ஒவ்வொரு கட்டிட, அந்த இடத்தின் உரிமையாளரின் கடமையாகும்.

வீடுகள் தோறும் சென்று ஆய்வு நடத்த அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. அப்போது, ஏதேனும் கொசுக்கள் உற்பத்தியாகும் விதத்தில் அலட்சியமாக வீட்டு மற்றும் கட்டிட உரிமையாளர் செயல்பட்டு இருந்தால் 400 ரூபாய் முதல் 2 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.

எவ்வளவு?

வீடுகளில் உள்ள பூந்தொட்டிகள், வாளிகள் அல்லது கட்டிடத்திற்குள் கொசுக்கள் உற்பத்தியாவதற்கு ஏதுவாக தண்ணீர் தேங்கியிருந்தால் நகர்ப்புறங்களில் ரூபாய் 400-ம், கிராமப்புறங்களில் ரூபாய் 200ம் அபராதம் விதிக்கப்படும்.

வணிக நிறுவனங்களுக்கு டெங்கு ஒழிப்பு விதிகளைப் பின்பற்றாவிட்டால் அபராதம் இரு மடங்கு விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. வணிக நிறுவனங்கள், அலுவகலங்கள், கல்வி நிறுவனங்கள், உணவகங்கள், ஓய்வு விடுதிகள், கடைகள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள், பஞ்சர் பார்க்கும் கடைகள், தாவரங்கள் விற்பனை செய்யும் கடைகள் தண்ணீர் தேவையில்லாமல் தேங்கியிருந்தால் கிராமப்புறங்களில் ரூபாய் 500ம், நகர்ப்புறங்களில் ரூபாய் 1000ம் அபராதமாக விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.

மாநில அரசு அபராதம் விதிக்கும் என்று எச்சரித்துள்ளதால் கர்நாடகத்தில் வீடு மற்றும் கட்டிட உரிமையாளர்கள் தேவையற்ற தண்ணீர் தேங்காமல் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும், அந்த மாநில சுகாதாரத்துறையும் டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. உடல்நலக்குறைவு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று மருத்துவரிடம் சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.

தமிழ்நாட்டிலும் டெங்கு காய்ச்சல் பாதிப்பைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழகத்தில் இன்று ( 20.09.24 ) மின் தடை ஏற்படும் பகுதிகள் - லிஸ்ட் இதோ
தமிழகத்தில் இன்று ( 20.09.24 ) மின் தடை ஏற்படும் பகுதிகள் - லிஸ்ட் இதோ
Rasi Palan Today, Sept 20: மிதுனத்துக்கு மகிழ்ச்சியான நாள், மன வருத்தங்கள் நீங்கும்.. உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan: மிதுனத்துக்கு மகிழ்ச்சியான நாள், மன வருத்தங்கள் நீங்கும்.. உங்கள் ராசிக்கான பலன்
ஒரே நாடு ஒரே தேர்தல்.. நவீன் பட்நாயக் எடுத்த முடிவு.. பாஜகவுக்கு கஷ்டம்தான் போலயே!
ஒரே நாடு ஒரே தேர்தல்.. நவீன் பட்நாயக் எடுத்த முடிவு.. பாஜகவுக்கு கஷ்டம்தான் போலயே!
பரபரப்பு..!ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் செல்வப்பெருந்தகைக்கு தொடர்பு.? ராகுல் காந்திக்கு BSP கடிதம்
பரபரப்பு..!ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் செல்வப்பெருந்தகைக்கு தொடர்பு.? ராகுல் காந்திக்கு BSP கடிதம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Trichy News | திமுக கொடியுடன் ஆடு திருடும் கும்பல்..தீவிரமாக தேடும் போலீஸ்VCK vs PMK  | Graph-ஐ உயர்த்திய திருமா! விசிக ரூட்டில் பாமக?அன்புமணி மாஸ்டர் பிளான்Shakthi Vasudevan | GP Muthu Fight | ரகளை செய்த GP முத்து..BEEP-ல் பூசாரியுடன் சண்டை..என்ன காரணம் தெரியுமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழகத்தில் இன்று ( 20.09.24 ) மின் தடை ஏற்படும் பகுதிகள் - லிஸ்ட் இதோ
தமிழகத்தில் இன்று ( 20.09.24 ) மின் தடை ஏற்படும் பகுதிகள் - லிஸ்ட் இதோ
Rasi Palan Today, Sept 20: மிதுனத்துக்கு மகிழ்ச்சியான நாள், மன வருத்தங்கள் நீங்கும்.. உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan: மிதுனத்துக்கு மகிழ்ச்சியான நாள், மன வருத்தங்கள் நீங்கும்.. உங்கள் ராசிக்கான பலன்
ஒரே நாடு ஒரே தேர்தல்.. நவீன் பட்நாயக் எடுத்த முடிவு.. பாஜகவுக்கு கஷ்டம்தான் போலயே!
ஒரே நாடு ஒரே தேர்தல்.. நவீன் பட்நாயக் எடுத்த முடிவு.. பாஜகவுக்கு கஷ்டம்தான் போலயே!
பரபரப்பு..!ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் செல்வப்பெருந்தகைக்கு தொடர்பு.? ராகுல் காந்திக்கு BSP கடிதம்
பரபரப்பு..!ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் செல்வப்பெருந்தகைக்கு தொடர்பு.? ராகுல் காந்திக்கு BSP கடிதம்
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு  - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
"65 நாடுகளுக்கு ஏற்றுமதி.. சர்வதேச சந்தையில் தனித்துவம்" ஆச்சி குழும தலைவர் பத்மசிங் ஐசக் பேச்சு!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
Embed widget