மேலும் அறிய

"அனைத்து கிராமங்களிலும் தொலைத்தொடர்பு சேவை" இன்ப அதிர்ச்சி கொடுத்த மத்திய அமைச்சர் சிந்தியா!

தொலைத்தொடர்பு இணைப்புக்காக இன்னும் 24,000 கிராமங்களை அடையாளம் கண்டுள்ளதாகவும் 100 சதவிகித தொலைத்தொடர்பு சேவையை கொண்டு சேர்ப்பது மத்திய அரசின் இலக்கு என மத்திய அமைச்சர் சிந்தியா தகவல்.

அடுத்த 12 மாதங்களில், நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களிலும் 100 சதவிகித தொலைத்தொடர்பு சேவையை கொண்டு வருவது மத்திய அரசின் இலக்கு என மத்திய தகவல் தொடர்பு மற்றும் வடகிழக்கு பிராந்திய வளர்ச்சித்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.

"24,000 கிராமங்களில் 100 சதவிகித தொலை தொடர்பு சேவை" இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய ஜோதிராதித்ய சிந்தியா, "இதற்காக அமைச்சரவையால் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், ஒவ்வொரு வாரமும் பணியின் முன்னேற்றத்தை நானே கண்காணித்து வருகிறேன்" என்றார்.

தொடர்ந்து விரிவாக பேசிய அவர், "100 சதவீதம் சென்று சேர்வதில் பிரதமர் உறுதியாக உள்ளார். தொலைத்தொடர்பு இணைப்புக்காக இன்னும் 24,000 கிராமங்களை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். இந்த அனைத்து கிராமங்களையும் சென்றடைவதற்கான சிறப்புத் திட்டமும், இதற்காக அனுமதிக்கப்பட்ட நிதியும் ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ளன.

வடகிழக்கு மாநிலங்களில் உள்ள பகுதிகளும் இதில் அடக்கம். மேலும், இந்த இடங்களை அடைய உத்திகள் வகுக்கப்படுகின்றன. புதிய தொலைத்தொடர்புச் சட்ட விதிகள், தேவையான உள்கட்டமைப்பை அமைப்பதற்கும், வி-சாட் மற்றும் செயற்கைக்கோள் போன்ற கலப்பு தொழில்நுட்பங்களை கொண்டு வருவதற்கும் உதவி புரிந்துள்ளன. தொலை தொடர்பு சேவைகளை அடுத்த 12 மாதங்களில் 100 சதவிகிதம் கொண்டு சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர் தகவல்: நான் வாரந்தோறும் பணிகளைக் கண்காணித்து வருகிறேன். ஏற்கனவே, 13,000-14,000 கிராமங்களில் 100 சதவிகித தொலை தொடர்பு சேவை சென்று சேர்க்கப்பட்டுள்ளது" என்றார்.

வடகிழக்கு மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி குறித்து பேசிய சிந்தியா, "கடந்த 75 வருடங்களாக வடக்கு கிழக்கு மாநிலங்கள் அனாதை போல் நடத்தப்பட்டது. ஆனால், இப்பகுதியை வளர்ச்சியின் இயந்திரமாக மாற்றுவதில் பிரதமர் நரேந்திர மோடி உறுதியாக உள்ளார்.

அசாம் மற்றும் சிக்கிமில் வெள்ள மேலாண்மைக்காக சுமார் ரூபாய் 11,000 கோடி சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் பட்ஜெட் விதிகளின்படி இப்பகுதியில் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியின் 100 புதிய கிளைகள் தொடங்கப்படும்.

பெண்கள், விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்காக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்களால் இப்பகுதி பலன் அடையும். முறையான உள்கட்டமைப்புடன், பெரிய தொழில்துறை திட்டங்கள் விரைவில் இப்பகுதியில் கொண்டு வரப்படும்" என்றார்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN Weather: ஜனவரியில் புயல்? உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி - கனமழை எங்கெல்லாம்? தமிழக வானிலை அறிக்கை
TN Weather: ஜனவரியில் புயல்? உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி - கனமழை எங்கெல்லாம்? தமிழக வானிலை அறிக்கை
TN Cabinet: சம்பள உயர்வு, கவர்ச்சி திட்டங்கள்? இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் - சி.எம்., ஸ்டாலின் முடிவு என்ன?
TN Cabinet: சம்பள உயர்வு, கவர்ச்சி திட்டங்கள்? இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் - சி.எம்., ஸ்டாலின் முடிவு என்ன?
Jana Nayagan Censor: சென்சார் ஓவர்..! என்ன சான்று? விஜயின் கடைசி திரைப்படம் எவ்வளவு நேரம் ஓடும்? - ரிப்போர்ட்
Jana Nayagan Censor: சென்சார் ஓவர்..! என்ன சான்று? விஜயின் கடைசி திரைப்படம் எவ்வளவு நேரம் ஓடும்? - ரிப்போர்ட்
CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
ABP Premium

வீடியோ

Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather: ஜனவரியில் புயல்? உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி - கனமழை எங்கெல்லாம்? தமிழக வானிலை அறிக்கை
TN Weather: ஜனவரியில் புயல்? உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி - கனமழை எங்கெல்லாம்? தமிழக வானிலை அறிக்கை
TN Cabinet: சம்பள உயர்வு, கவர்ச்சி திட்டங்கள்? இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் - சி.எம்., ஸ்டாலின் முடிவு என்ன?
TN Cabinet: சம்பள உயர்வு, கவர்ச்சி திட்டங்கள்? இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் - சி.எம்., ஸ்டாலின் முடிவு என்ன?
Jana Nayagan Censor: சென்சார் ஓவர்..! என்ன சான்று? விஜயின் கடைசி திரைப்படம் எவ்வளவு நேரம் ஓடும்? - ரிப்போர்ட்
Jana Nayagan Censor: சென்சார் ஓவர்..! என்ன சான்று? விஜயின் கடைசி திரைப்படம் எவ்வளவு நேரம் ஓடும்? - ரிப்போர்ட்
CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
All-New Tata Punch Turbo: வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
Embed widget