மேலும் அறிய

Joshimath Sinking: குடியிருப்புகள் மீது கோயில் இடிந்து விழுந்து விபத்து - அப்புறப்படுத்தப்பட்ட 50 குடும்பங்கள்: நடந்தது என்ன?

நிலச்சரிவால் உத்தராகண்டில் கோயில் இடிந்து விழுந்ததால் பொதுமக்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.

உத்தராகண்ட் மாநிலம் ஜோஷிமத்தின் சிங்தார் வார்டில் வெள்ளிக்கிழமை அதாவது நேற்று மாலை கோயில் ஒன்று  நிலச்சரிவால் இடிந்து விழுந்ததால், பல வீடுகளில் பெரிய விரிசல்கள் ஏற்பட்டது. இதனால் பெரும் பேரழிவு ஏற்படும் என்று குடியிருப்புவாசிகள் அச்சத்தில் உள்ளனர். கிட்டத்தட்ட 50 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டதாக பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சம்பவம் நடந்தபோது கோயிலுக்குள் யாரும் இருக்கவில்லை என்று உள்ளூர்வாசிகள் கூறியதாக PTI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, நிலச்சரிவு பாதித்த பகுதியில் இன்று ஆய்வு நடத்துகிறார். மேலும் அவர் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்தித்து நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவார் என அவரது அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது. 

இதற்கிடையில், சாமோலி மாவட்ட நிர்வாகம், வீடுகள் சேதமடைந்து வசிக்கத் தகுதியற்ற குடும்பங்கள் அல்லது வீடற்ற குடும்பங்களுக்கு முதல்வர் நிவாரண நிதியில் இருந்து 6 மாதங்களுக்கு தலா 4,000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தது. விஷ்ணு பிரயாக் ஜல் வித்யுத் பரியோஜனா ஊழியர்களுக்கான காலனியில் வசிக்கும் 50 குடும்பங்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மைத் துறை இயக்குநர் பங்கஜ் சவுகான் தெரிவித்தார்.

ஜோஷிமத்தில் நிலச்சரிவு மற்றும் அதன் தாக்கம் குறித்து "விரைவான ஆய்வு" நடத்த மத்திய அரசு வெள்ளிக்கிழமை ஒரு குழுவை அமைத்தது. சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகம், மத்திய நீர் ஆணையம், இந்திய புவியியல் ஆய்வு, மற்றும் தூய்மையான கங்கைக்கான தேசிய இயக்கம் உள்ளிட்டவற்றின் பிரதிநிதிகள் அடங்கிய குழு "விரைவான ஆய்வு மற்றும் காரணத்தை ஆராயும்" என்று ஜல் சக்தி அமைச்சகம் வெளியிட்டுள்ள அலுவலக குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இக்குழு நிகழ்வு மற்றும் அதன் தாக்கம் " குறித்து மூன்று நாட்களுக்குள் NMCG க்கு அறிக்கை சமர்ப்பிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மனித குடியிருப்புகள், கட்டிடங்கள், நெடுஞ்சாலைகள், உள்கட்டமைப்பு மற்றும் ஆற்றங்கரை அமைப்புகளில் நிலம் மூழ்கியதால் ஏற்படும் பாதிப்புகளை இந்த குழு ஆராயவுள்ளது.  குறிப்பாக மார்வாரி பகுதியில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு நீர்நிலைகளால் அங்குள்ள பல வீடுகள் பல்வேறு அளவுகளில் சேதமடைந்துள்ளன, அதே நேரத்தில் நீர்நிலையிலிருந்து தண்ணீர் தொடர்ந்து அதிகரித்துகொண்டே உள்ளது. இதனால் பாதிப்படைந்த பொதுமக்கள் மறுவாழ்வு கோரி, ஜோஷிமத் தாலுகா அலுவலகத்தில்  தர்ணா நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

சமோலி மாவட்டத்தில் 6,000 அடி உயரத்தில் அமைந்துள்ள ஜோஷிமத் நகரம், பத்ரிநாத் மற்றும் ஹேம்குந்த் சாஹிப் செல்லும் பாதையில் அமைந்துள்ளது, இது அதிக ஆபத்துள்ள நில அதிர்வு 'மண்டலம்-V’ ஆக உள்ளது. 

PTI இன் படி, உள்ளூர் நகராட்சியின் முன்னாள் தலைவர் ரிஷி பிரசாத் சதி கூறுகையில், ஒரு வருடத்திற்கும் மேலாக நிலச்சரிவு ஏற்பட்டு  வருகிறது, ஆனால் கடந்த பதினைந்து நாட்களில் நிலச்சரிவும் அதன் பாதிப்பும் அதிகமாகியுள்ளது என கூறியுள்ளார்.  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
TVK Alliance Talks Team: வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
"அந்தரத்தில் தொங்கிய சொகுசு பேருந்து! விக்கிரவாண்டியில் நள்ளிரவில் பயங்கர விபத்து - பயணிகள் அதிர்ஷ்டவசமாக மீட்பு!"
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
Embed widget