தமிழகத்தில் குறையும் கொரோனா: இன்று 26,513 பேருக்கு பாதிப்பு
தமிழகம் மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.

Background
தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 27 ஆயிரத்து 936 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். சென்னையில் மட்டும் 2 ஆயிரத்து 596 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரேநாளில் 31 ஆயிரத்து 223 நபர்கள் கொரோனாவில் இருந்து குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், மாநிலம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோர் மொத்த எண்ணிக்கை 20 லட்சத்து 39 ஆயிரத்து 716 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 478 நபர்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் குறையும் கொரோனா: இன்று 26,513 பேருக்கு பாதிப்பு
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 26,513 பேருக்கு கொரோனா தொற்று உறுதி . சென்னையில் ஒரே நாளில் 2,467 பேருக்கு பாசிட்டிவ். இன்று ஒரே நாளில் 496 பேர் உயிரிழப்பு
கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் தமிழகம் வருகை
பூனேவிலிருந்து 4,20,570 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தது



















