மேலும் அறிய

PM Modi: "2047க்குள் வளர்ந்த நாடு! வெற்று முழக்கம் அல்ல, 140 கோடி பேரின் கனவு" சுதந்திர தினத்தில் பிரதமர் மோடி சூளுரை

2047ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவோம் என்று பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் நாட்டு மக்களுக்கு உறுதி அளித்துள்ளார்.

நாட்டின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி 11வது முறையாக இன்று தேசிய கொடியை ஏற்றினார். தேசிய கொடியை ஏற்றிய பிறகு பிரதமர் மோடி நாட்டு மக்கள் மத்தியில் உரையாற்றினார்.

துணை நிற்போம்:

நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி ஆற்றியுள்ள சுதந்திர தின உரையில் பேசியதாவது, “ சுதந்திர திர போராட்டத்தில் இன்னுயிர் தந்தவர்களை போற்றுகிறோம். கடந்த சில ஆண்டுகளாக பேரிடர்களை எதிர்கொண்டாலும் நாம் அதில் இருந்து மீண்டு வருகிறோம். வயநாடு உள்ளிட்ட பேரிடர் பாதிப்புகள் வேதனை அளிக்கிறது. நாட்டின் விடுதலைக்காக தியாகம் செய்தவர்களுக்கு நாம் கடன்பட்டுள்ளோம்.

வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு துணைநிற்போம். நாட்டை பாதுகாக்க, வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கு பலர் உழைத்து வருகின்றனர். விவசாயிகள், ராணுவ வீரர்கள் நாட்டுக்காக கடுமையாக உழைக்கின்றனர். பேரிடர் காலங்களில் உறவுகளை இழந்தவர்களுக்கு இந்த தேசம் துணை நிற்கிறது.

2047க்குள் வளர்ந்த நாடு:

2047ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவோம். அப்போது பிரிட்டிஷ் அரசை எதிர்த்து 40 கோடி மக்கள்தான் போராடினார்கள். தற்போது 140 கோடி மக்கள் உள்ள நிலையில் இந்தியாவின் வலிமை வளர்ச்சி அடைந்துள்ளது. நாட்டு மக்கள் இந்த பாரதத்திற்காக தங்களை அர்ப்பணிக்க வேண்டும்.

தேசத்திற்காக உயிர் தியாகம் செய்தவர்களுக்கு இன்று அஞ்சலி செலுத்தும் நாள். 20247ல் வளர்ச்சியடைந்த இந்தியாவில் நமது ஊடகத்துறை, உலகளாவிய ஊடகத்துறையாக மாற்றம் பெறும். உலக அளவில் 3வது பெரிய பொருளாதாரத்தை இந்தியா வெகு விரைவில் அடையும்.

வெற்று முழக்கம் அல்ல:

40 கோடி இந்தியர்களால் நமக்கு சுதந்திரம் கிடைத்தது. 140 கோடி பேர் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவோம். 2047க்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை எட்டுவோம். ஜல்ஜீவன் திட்டத்தால் 15 கோடி குடும்பங்கள் பயன் அடைந்துள்ளனர்.

உலகின் மிகப்பெரும் உற்பத்தி மையமாக இந்தியாவை உருவாக்க வேண்டும். 2047ல் வளர்ந்த இந்தியா என்பது வெற்று முழக்கம் அல்ல. அது 140 கோடி இந்தியர்களின் கனவு. இந்தியாவில் நீதித்துறையில் மாற்றம் தேவை. மாற்றங்களை கொண்டு வருவோம்.”

இவ்வாறு அவர் பேசினார்.

பிரதமர் மோடி 11வது முறையாக தொடர்ந்து தேசிய கொடியை செங்கோட்டையில் ஏற்றியுள்ளார். இதன்மூலம் தொடர்ந்து 10 முறை தேசிய கொடியை செங்கோட்டையில் ஏற்றிய பிரதமர் மன்மோகன்சிங்கின் சாதனையை பிரதமர் மோடி முறியடித்துள்ளார். சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டை முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட பலரும் பங்கேற்றுள்ளனர். சுதந்திர தின உரை முடிந்த பிறகு முப்படைகளின் அணிவகுப்பை பிரதமர் மோடி ஏற்க உள்ளார்.

 

 

 

 

தலைப்பு செய்திகள்

SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
ஓணம் சத்யா: 26 பாரம்பரிய உணவுகள்... என்னென்ன தெரியுமா?
ஓணம் சத்யா: 26 பாரம்பரிய உணவுகள்... என்னென்ன தெரியுமா?
விபத்தில் சிக்கிய சைக்கிள்... வெளியே வந்த குடல்.. சட்டையைக் கொண்டு சிறுவன் செய்த செயல்
விபத்தில் சிக்கிய சைக்கிள்... வெளியே வந்த குடல்.. சட்டையைக் கொண்டு சிறுவன் செய்த செயல்
ஆய்வுக்கு வந்த கல்வி அமைச்சர்.. வாடகைக்கு அழைத்து வரப்பட்ட மாணவர்கள்.. வெடித்த சர்ச்சை!
ஆய்வுக்கு வந்த கல்வி அமைச்சர்.. வாடகைக்கு அழைத்து வரப்பட்ட மாணவர்கள்.. வெடித்த சர்ச்சை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
Gold and silver rate today : சவரனுக்கு ரூ.5,160 அதிகரிப்பு.! 3 நாளில் கிடு கிடுவென உயர்ந்த தங்கம் விலை- இன்றைய விலை என்ன தெரியுமா.?
சவரனுக்கு ரூ.5,160 அதிகரிப்பு.! 3 நாளில் கிடு கிடுவென உயர்ந்த தங்கம் விலை- இன்றைய விலை என்ன தெரியுமா.?
Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!
Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!
எய்தவரை விட்டு விட்டு அம்புகளை மட்டும் நோவதில் பயனில்லை.! டிவிகே அரசுக்கு எதிராக சீறிய CPM சண்முகம்
எய்தவரை விட்டு விட்டு அம்புகளை மட்டும் நோவதில் பயனில்லை.! டிவிகே அரசுக்கு எதிராக சீறிய CPM சண்முகம்
Udhayanidhi Stalin: விஜய் அறிவித்த கார் தேவையில்லை.. உதயநிதி பேச்சால் சட்டசபையில் கடும் வாக்குவாதம்!
Udhayanidhi Stalin: விஜய் அறிவித்த கார் தேவையில்லை.. உதயநிதி பேச்சால் சட்டசபையில் கடும் வாக்குவாதம்!
Udhayanidhi Stalin: ”இந்த உருட்டல் மிரட்டல் வேண்டாம்.! FILE-ஐ ஓபன் பண்ணுங்க சிஎம்” - சட்டசபையில் சீறிய உதயநிதி
”இந்த உருட்டல் மிரட்டல் வேண்டாம்.! FILE-ஐ ஓபன் பண்ணுங்க சிஎம்” - சட்டசபையில் சீறிய உதயநிதி
Embed widget