மேலும் அறிய

ரயிலில் மது அருந்தினால் கடும் அபராதம்! ரயில்வேயின் அதிரடி அறிவிப்பு: பயணிகள் கவனத்திற்கு!

மது அருந்திவிட்டு பயணிகள் தகராறில் ஈடுபட்டால்,  குறைந்தபட்சம் 6 மாத சிறை மற்றும் ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படலாம் - ரயில்வே நிர்வாகம்

இந்தியாவில் ரயில் போக்குவரத்து என்பது மிக முக்கிய போக்குவரத்து சேவையாக இருந்து வருகிறது. குறிப்பாக தொலைதூரம் பயணிப்பவர்களுக்கு, ரயில் சேவை வரப்பிரசாதமாக இருந்து வருகிறது. இந்திய ரயில்வே நாள்தோறும் 13,000 ரயில்களை இயக்கி வருகிறது. இதில் நாள்தோறும் 4 கோடி மக்கள் பயணிக்கிறார்கள். சாதாரண புறநகர் ரயில்கள், விரைவு ரயில்கள், வந்தே பாரத் ரயில்கள், சரக்கு ரயில்கள் என இதில் ஏராளம். ரயில் பயணங்களில் ஏற்படும் சிக்கல்களை தடுக்கவும், பெரும்பாலும் போக்குவரத்து சிரமங்களை தவிர்க்க ரயில்வே நிர்வாகம் சார்பில் பல்வேறு பணிகளை செய்து வருகிறது.


ரயிலில் மது அருந்தினால் கடும் அபராதம்! ரயில்வேயின் அதிரடி அறிவிப்பு: பயணிகள் கவனத்திற்கு!

ரயில்வேயின் விளக்கம்

தற்போது, ஐஆர்சிடிசி இணையதளம் வாயிலாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.  இதற்கிடையில், ரயில்களில் சில அசம்பாவித சம்பவங்களும் நடந்து வருகிறது. ரயில் படிகட்டுகளில் நின்று வருவது, அவசர கால செயினை இழுப்பது போன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது. மேலும், சில பயணிகள் ரயில்கள் மது அருந்திவிட்டு பயணம் செய்வதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகிறது. இதற்கு தற்போது இந்தியன் ரயில்வே விளக்கியுள்ளது.

இது குறித்து ரயில்வே நிர்வாகத்தின் சார்பில் கூறப்படுவதாவது, ரயில்களில் மதுபானத்தை எடுத்துச் செல்வதோ அல்லது உட்கொள்வதோ கடுமையான பாதுகாப்பு ஆபத்தை ஏற்படுத்துகிறது. குடிபோதையில் இருக்கும் பயணிகள் சக பயணிகளிடம் தவறாக நடந்து கொள்ளலாம், சிரமத்தை ஏற்படுத்தலாம். இதானால், ரயில்களில் மது அருந்தவோ அல்லது மது எடுத்து வருவதற்கு தடை விதிக்கப்படுகிறது.  


ரயிலில் மது அருந்தினால் கடும் அபராதம்! ரயில்வேயின் அதிரடி அறிவிப்பு: பயணிகள் கவனத்திற்கு!

மது அருந்த தடை

ரயில் ஊழியர்கள் கூட ரயிலில் பயணம் செய்யும்போது, மது அருந்த தடை செய்யப்பட்டுள்ளது.  மேலும் அவ்வாறு செய்வது கடுமையான குற்றமாகக் கருதப்படுகிறது. ஒரு பயணி மதுவை எடுத்துச் செல்வது கண்டறியப்பட்டால், அவர்களுக்கு அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கைகளை அவர்கள் எதிர்கொள்ளலாம் என ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர். 

அதாவது, ரயில் மற்றும் ரயில் நிலையத்தில் மது அருந்தினால் முதல்முறையாக ரூ.100 அபராதம் விதிக்கப்படுகிறது. அதே தவறை மீண்டும் செய்தால் ஒரு மாத சிறை மற்றும் ரூ.250 அபராதம்  விதிக்கப்படுகிறது. அதன்பிறகும் தொடர்ந்து செய்தால், தண்டனை காலம் அதிகரிக்கலாம். அதே நேரத்தில், மது அருந்திவிட்டு பயணிகள் தகராறில் ஈடுபட்டால்,  குறைந்தபட்சம் 6 மாத சிறை மற்றும் ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படலாம் என அதிகாரிகள் கூறியுள்ளனர். 

ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை

மேலும், பண்டிகைகள் மற்றும் விடுமுறை நாட்களில், ஏராளமான மக்கள் தங்கள் குடும்பத்தினரைப் பார்க்க அல்லது சுற்றிப் பார்க்க ரயிலில் பயணிக்கும்போது, ​​பயணிகள் எந்த சூழ்நிலையிலும் மது பாட்டில்களை கொண்டு வர வேண்டாம் என்று ரயில்வே எச்சரித்துள்ளது. எனவே, ரயிலில் பயணம் செய்யும்போது, மது அருந்துவதையும், மது அருந்திவிட்டு தகராறில் ஈடுபடுவதையும் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

Gummidipoondi Gudur Train: தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - முழு விவரம்
தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - வேலைவாய்ப்பு, பலன் விவரங்கள்
கேரளாவின் அதிசய கோவில்கள்: குறிப்பிட்ட நாட்களில் ஆண்கள் நுழைய தடை ஏன்?
கேரளாவின் அதிசய கோவில்கள்: குறிப்பிட்ட நாட்களில் ஆண்கள் நுழைய தடை ஏன்?
ஓணம் சிறப்பு ரயில்: சென்னை-கொல்லம் பயணிகளுக்கு முக்கிய வழிகாட்டுதல்கள்!விபரம் இதோ.
ஓணம் சிறப்பு ரயில்: சென்னை-கொல்லம் பயணிகளுக்கு முக்கிய வழிகாட்டுதல்கள்!விபரம் இதோ.
மோகன்லால் 'அதிமனோகரம்' படத்திற்குத் தடை: சபரிமலை வனத்துறை அதிரடி!விபரம் இதோ
மோகன்லால் 'அதிமனோகரம்' படத்திற்குத் தடை: சபரிமலை வனத்துறை அதிரடி!விபரம் இதோ

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
Embed widget