மேலும் அறிய

ரயிலில் மது அருந்தினால் கடும் அபராதம்! ரயில்வேயின் அதிரடி அறிவிப்பு: பயணிகள் கவனத்திற்கு!

மது அருந்திவிட்டு பயணிகள் தகராறில் ஈடுபட்டால்,  குறைந்தபட்சம் 6 மாத சிறை மற்றும் ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படலாம் - ரயில்வே நிர்வாகம்

இந்தியாவில் ரயில் போக்குவரத்து என்பது மிக முக்கிய போக்குவரத்து சேவையாக இருந்து வருகிறது. குறிப்பாக தொலைதூரம் பயணிப்பவர்களுக்கு, ரயில் சேவை வரப்பிரசாதமாக இருந்து வருகிறது. இந்திய ரயில்வே நாள்தோறும் 13,000 ரயில்களை இயக்கி வருகிறது. இதில் நாள்தோறும் 4 கோடி மக்கள் பயணிக்கிறார்கள். சாதாரண புறநகர் ரயில்கள், விரைவு ரயில்கள், வந்தே பாரத் ரயில்கள், சரக்கு ரயில்கள் என இதில் ஏராளம். ரயில் பயணங்களில் ஏற்படும் சிக்கல்களை தடுக்கவும், பெரும்பாலும் போக்குவரத்து சிரமங்களை தவிர்க்க ரயில்வே நிர்வாகம் சார்பில் பல்வேறு பணிகளை செய்து வருகிறது.


ரயிலில் மது அருந்தினால் கடும் அபராதம்! ரயில்வேயின் அதிரடி அறிவிப்பு: பயணிகள் கவனத்திற்கு!

ரயில்வேயின் விளக்கம்

தற்போது, ஐஆர்சிடிசி இணையதளம் வாயிலாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.  இதற்கிடையில், ரயில்களில் சில அசம்பாவித சம்பவங்களும் நடந்து வருகிறது. ரயில் படிகட்டுகளில் நின்று வருவது, அவசர கால செயினை இழுப்பது போன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது. மேலும், சில பயணிகள் ரயில்கள் மது அருந்திவிட்டு பயணம் செய்வதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகிறது. இதற்கு தற்போது இந்தியன் ரயில்வே விளக்கியுள்ளது.

இது குறித்து ரயில்வே நிர்வாகத்தின் சார்பில் கூறப்படுவதாவது, ரயில்களில் மதுபானத்தை எடுத்துச் செல்வதோ அல்லது உட்கொள்வதோ கடுமையான பாதுகாப்பு ஆபத்தை ஏற்படுத்துகிறது. குடிபோதையில் இருக்கும் பயணிகள் சக பயணிகளிடம் தவறாக நடந்து கொள்ளலாம், சிரமத்தை ஏற்படுத்தலாம். இதானால், ரயில்களில் மது அருந்தவோ அல்லது மது எடுத்து வருவதற்கு தடை விதிக்கப்படுகிறது.  


ரயிலில் மது அருந்தினால் கடும் அபராதம்! ரயில்வேயின் அதிரடி அறிவிப்பு: பயணிகள் கவனத்திற்கு!

மது அருந்த தடை

ரயில் ஊழியர்கள் கூட ரயிலில் பயணம் செய்யும்போது, மது அருந்த தடை செய்யப்பட்டுள்ளது.  மேலும் அவ்வாறு செய்வது கடுமையான குற்றமாகக் கருதப்படுகிறது. ஒரு பயணி மதுவை எடுத்துச் செல்வது கண்டறியப்பட்டால், அவர்களுக்கு அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கைகளை அவர்கள் எதிர்கொள்ளலாம் என ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர். 

அதாவது, ரயில் மற்றும் ரயில் நிலையத்தில் மது அருந்தினால் முதல்முறையாக ரூ.100 அபராதம் விதிக்கப்படுகிறது. அதே தவறை மீண்டும் செய்தால் ஒரு மாத சிறை மற்றும் ரூ.250 அபராதம்  விதிக்கப்படுகிறது. அதன்பிறகும் தொடர்ந்து செய்தால், தண்டனை காலம் அதிகரிக்கலாம். அதே நேரத்தில், மது அருந்திவிட்டு பயணிகள் தகராறில் ஈடுபட்டால்,  குறைந்தபட்சம் 6 மாத சிறை மற்றும் ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படலாம் என அதிகாரிகள் கூறியுள்ளனர். 

ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை

மேலும், பண்டிகைகள் மற்றும் விடுமுறை நாட்களில், ஏராளமான மக்கள் தங்கள் குடும்பத்தினரைப் பார்க்க அல்லது சுற்றிப் பார்க்க ரயிலில் பயணிக்கும்போது, ​​பயணிகள் எந்த சூழ்நிலையிலும் மது பாட்டில்களை கொண்டு வர வேண்டாம் என்று ரயில்வே எச்சரித்துள்ளது. எனவே, ரயிலில் பயணம் செய்யும்போது, மது அருந்துவதையும், மது அருந்திவிட்டு தகராறில் ஈடுபடுவதையும் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
Crime: ஆட்டோ டயரில் சிறுநீர் கழித்த நாயால் முற்றிய தகராறு.. இளைஞர் கொடூர கொலை
Crime: ஆட்டோ டயரில் சிறுநீர் கழித்த நாயால் முற்றிய தகராறு.. இளைஞர் கொடூர கொலை
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
விவசாயிகளுக்கு ஆட்சியர் அதிரடி உத்தரவு: அனைத்து நிலங்களையும் உடனே பதிவு செய்யுங்கள்! பதிவு செய்தால் மட்டுமே அரசு சலுகைகள்....
விவசாயிகளுக்கு ஆட்சியர் அதிரடி உத்தரவு: அனைத்து நிலங்களையும் உடனே பதிவு செய்யுங்கள்! பதிவு செய்தால் மட்டுமே அரசு சலுகைகள்....
Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
Embed widget