மேலும் அறிய

Harassment Allegation: மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் புகார்.. உச்சநீதிமன்றம் அதிரடி அறிவிப்பு...

மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் புகார் தொடர்பான மனுவை ஏற்று விசாரிப்பதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அறிவித்துள்ளார். 

மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் புகார் தொடர்பான மனுவை ஏற்று விசாரிப்பதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அறிவித்துள்ளார். 

இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் மீது மல்யுத்த வீராங்கனைகள் அளித்த பாலியல் புகார்கள் தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்,  வீராங்கனைகள் அளித்த பாலியல் புகார்கள்  தீவிரமானவை என்றும் நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட வேண்டியவை என்றும் தெரித்துள்ளார். 

மல்யுத்த வீராங்கனைகள் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் ஆஜராகி வாதிட்டார். ஒரு சிறுமி உள்ளிட்ட 7 வீராங்கனைகள் வழக்கு தொடர்ந்துள்ளதாக கபில் சிபில் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் வீராங்கனைகளின் புகார் தொடர்பாக அமைக்கப்பட்ட குழு அளித்த அறிக்கை வெளியிடப்படவில்லை எனவும், குற்றம்சாட்டப்பட்ட நபர் மீது வழக்குப் பதிவு செய்யப்படவில்லை எனவும் கபில் சிபில் புகார் தெரிவித்தார். புகார் அளித்த மல்யுத்த வீராங்கனைகளின் பெயர்களை வெளியிடக்கூடாது எனவும், மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷண் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மீண்டும் போராட்டம்

இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷன் சிங் மீதான பாலியல் புகாரில் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாததைக் கண்டித்து டெல்லியில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் நேற்று மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன்  சிங், இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாகவும், அவர் மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பஜ்ரங் பூனியா, சாக்‌ஷி மாலிக் உள்ளிட்ட மல்யுத்த நட்சத்திரங்கள் டெல்லியில் கடந்த ஜனவரி மாதம் போராட்டம் நடத்தினர். 

முன்னணி மல்யுத்த வீரர்கள்,  பிரிஜ் பூஷன் சிங் மீது பாலியல் துன்புறுத்தல் புகார் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யக்கோரி கடந்த திங்கள் கிழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.பிரிஜ் பூஷன்  சிங்கிற்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஐந்து பேர் கொண்ட மேற்பார்வைக் குழு மேற்கொண்ட விசாரணை குறித்த தகவலை மத்திய அரசு வெளியிட வேண்டும் என்று மல்யுத்த வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக் மற்றும் ரவி தஹியா உள்ளிட்டோர் ஜனவரி மாதம் தங்கள் போராட்டத்தைத் தொடங்கினர். இந்நிலையில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் குற்றச்சாட்டுகளை விசாரிக்க, பிரபல குத்துச்சண்டை வீராங்கனை எம்.சி.மேரி கோம் தலைமையில் ஐந்து பேர் கொண்ட மேற்பார்வைக் குழுவை அமைப்பதாக  அறிவித்திருந்தார். இதனையடுத்து அவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர்.  குழு தனது அறிக்கையை ஏப்ரல் முதல் வாரத்தில் சமர்ப்பித்தது, ஆனால் அமைச்சகம் அது தொடர்பான எந்த தகவலையும் இதுவரை வெளியிடவில்லை என அவர்கள் கூறியுள்ளனர்.  இந்நிலையில் மீண்டும் போராட்டம் நடைபெற்றது. 

டெல்லி காவல்துறை விசாரணைக் குழுவிடம் அறிக்கை கேட்டுள்ளது. தங்களுக்கு 7 புகார்கள் வந்துள்ளதாகவும், இது தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Richest CM: பாவம் மம்தா.. மாஸ் காட்டும் சந்திரபாபு , ஸ்டாலின் நிலைமை என்ன? - நாட்டின் பணக்கார முதலமைச்சர்கள்
Richest CM: பாவம் மம்தா.. மாஸ் காட்டும் சந்திரபாபு , ஸ்டாலின் நிலைமை என்ன? - நாட்டின் பணக்கார முதலமைச்சர்கள்
US Tariff: ”சீனாவை எதிர்க்கனும்னா இந்தியா வேண்டும்” ட்ரம்பை எச்சரிக்கும் சொந்த கட்சி தலைவர்
US Tariff: ”சீனாவை எதிர்க்கனும்னா இந்தியா வேண்டும்” ட்ரம்பை எச்சரிக்கும் சொந்த கட்சி தலைவர்
TVK Vijay: துணை முதல்வர் பதவி.. 70 சீட்டு.. கூட்டணிக்கு கூப்பிட்ட விஜய் - எந்த கட்சியை தெரியுமா?
TVK Vijay: துணை முதல்வர் பதவி.. 70 சீட்டு.. கூட்டணிக்கு கூப்பிட்ட விஜய் - எந்த கட்சியை தெரியுமா?
Top 10 News Headlines: விஜய் வீழ்ச்சியின் முதல்படி, கோடிகளில் விளம்பர ஊதியம், கில் விலகல்? - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: விஜய் வீழ்ச்சியின் முதல்படி, கோடிகளில் விளம்பர ஊதியம், கில் விலகல்? - 11 மணி வரை இன்று
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஜெகதீப் தன்கர் எங்கே போனார்?ஒரு மாதத்தில் கிடைத்த முதல் தகவல் வெளிவந்த ரகசியம்..! | Jagdeep Dhankhar
”TARGET திமுக கூட்டணி”விஜய்-ன் அதிரடி அறிவிப்புகள்? சம்பவம் செய்யுமா தவெக மாநாடு? | TVK Vijay Speech
CM-ஐ கன்னத்தில் அறைந்த நபர் முடியை இழுத்து தாக்குதல் டெல்லியில் நடந்தது என்ன? | Rekha Gupta Attacked
“கால உடைச்சிட்டாங்க அம்மா”காரின் முன்பு விழுந்த விவசாயி ஆக்‌ஷன் எடுத்த ஆட்சியர் | Pudukkottai Farmer Issue
சிக்கி தவிக்கும் தேர்தல் ஆணையம் வெச்சு செய்யும் எதிர்க்கட்சிகள் பாயிண்ட்ஸ் எப்ப வரும் SIR? | Congress | Rahul Gandhi vs ECI

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Richest CM: பாவம் மம்தா.. மாஸ் காட்டும் சந்திரபாபு , ஸ்டாலின் நிலைமை என்ன? - நாட்டின் பணக்கார முதலமைச்சர்கள்
Richest CM: பாவம் மம்தா.. மாஸ் காட்டும் சந்திரபாபு , ஸ்டாலின் நிலைமை என்ன? - நாட்டின் பணக்கார முதலமைச்சர்கள்
US Tariff: ”சீனாவை எதிர்க்கனும்னா இந்தியா வேண்டும்” ட்ரம்பை எச்சரிக்கும் சொந்த கட்சி தலைவர்
US Tariff: ”சீனாவை எதிர்க்கனும்னா இந்தியா வேண்டும்” ட்ரம்பை எச்சரிக்கும் சொந்த கட்சி தலைவர்
TVK Vijay: துணை முதல்வர் பதவி.. 70 சீட்டு.. கூட்டணிக்கு கூப்பிட்ட விஜய் - எந்த கட்சியை தெரியுமா?
TVK Vijay: துணை முதல்வர் பதவி.. 70 சீட்டு.. கூட்டணிக்கு கூப்பிட்ட விஜய் - எந்த கட்சியை தெரியுமா?
Top 10 News Headlines: விஜய் வீழ்ச்சியின் முதல்படி, கோடிகளில் விளம்பர ஊதியம், கில் விலகல்? - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: விஜய் வீழ்ச்சியின் முதல்படி, கோடிகளில் விளம்பர ஊதியம், கில் விலகல்? - 11 மணி வரை இன்று
விஜயகாந்தை 'அண்ணன்' என விஜய் சொன்னது ஏன்? சீமான் சொன்னதை பிரேமலதா உறுதிப்படுத்திய பரபரப்பு!
விஜயகாந்தை 'அண்ணன்' என விஜய் சொன்னது ஏன்? சீமான் சொன்னதை பிரேமலதா உறுதிப்படுத்திய பரபரப்பு!
Dowry Crime: வரதட்சணை.. மகன் முன்பே மனைவியை எரித்துக் கொன்ற கணவன் - மாமியார் எனும் மிருகம், ரூ.36 லட்சம்
Dowry Crime: வரதட்சணை.. மகன் முன்பே மனைவியை எரித்துக் கொன்ற கணவன் - மாமியார் எனும் மிருகம், ரூ.36 லட்சம்
Mahindra BE6: சும்மா.. 135 நொடிகளில் விற்றுத் தீர்ந்த 999 யூனிட்கள் - யானை விலை, போட்டி போட்டு வாங்க காரணம் என்ன?
Mahindra BE6: சும்மா.. 135 நொடிகளில் விற்றுத் தீர்ந்த 999 யூனிட்கள் - யானை விலை, போட்டி போட்டு வாங்க காரணம் என்ன?
Tamilnadu Roundup 24.08.2025: 29ம் தேதி வரை மழை.. காலை உணவுத்திட்டத்தால் முதல்வர் பெருமிதம் - 10 மணி சம்பவங்கள்
Tamilnadu Roundup 24.08.2025: 29ம் தேதி வரை மழை.. காலை உணவுத்திட்டத்தால் முதல்வர் பெருமிதம் - 10 மணி சம்பவங்கள்
Embed widget