மேலும் அறிய

AIIMS: 7 நாட்களாக ஹேக் செய்யப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை சர்வர்; 200 கோடி கிரிப்டோகரன்சிக்கு பேரம் பேசும் ஹேக்கர்கள்..!

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் சர்வர் தொடர்ந்து 7வது நாளாக ஹேக் செய்யப்பட்டுள்ளதையடுத்து, 200 கோடி ரூபாய் கிரிப்டோகரன்சி அளிக்க வேண்டும் என ஹேக்கர்கள் பேரம் பேசியுள்ளனர்.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் சர்வர் தொடர்ந்து 7-வது நாளாக ஹேக் செய்யப்பட்டுள்ளதையடுத்து, 200 கோடி ரூபாய் கிரிப்டோகரன்சி அளிக்க வேண்டும் என ஹேக்கர்கள் பேரம் பேசியுள்ளனர். 

நாட்டின் தலைசிறந்த மருத்துவமனையாக இருப்பது மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கக் கூடிய எய்ம்ஸ் மருத்துவமனைதான். மத்திய மாநில அரசுகளின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கக் கூடிய மருத்துவமனைகள் நாடு முழுவதும் பல இருந்தாலும்,  நாட்டின் முதல் குடிமகன் முதல் சாமினியன் வரை அனைவருக்கும் உலகத் தரம் வாய்ந்த மருத்துவம் எய்ம்ஸ் மருத்துவமனையில் அளிக்கப்படுகிறது என்றால் அது உண்மைதான். 

நாட்டின் தலைநகரான டெல்லியில் அமைந்துள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் நோயாளிகள் மற்றும் அவர்களது நோயின் தன்மை குறித்த தகவல்கள் அடங்கிய எய்ம்ஸ் மருத்துவமனையின் சர்வர் ஹேக்கர்களால் கடந்த வாரம் புதன் கிழமை முடக்கப்பட்டது. முதலில் சர்வர் மிகவும் மந்தமாக செயல்படுகிறது. சிறிது நேரத்தில் சரி செய்து விடலாம் என நினைத்த டெக்னீசியன்ஸ், அதன் பின்னர் தான் சர்வர் ஹேக் செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. 

கடந்த 6 நாட்களாக ஹேக் செய்யப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையின் சர்வரை திரும்ப ஒப்படைக்க ஹேக்கர்கள் 200 கோடி ரூபாய் கிரிப்டோகரன்சி தர வேண்டும் என பேரம் பேசியுள்ளனர். கடந்த 6 நாட்களாக எவ்வளவோ முயற்சி செய்தும் சர்வர் மீட்கப்படததால் இன்றுடன் 7வது நாளாக சர்வர் ஹேக் செய்யப்பட்டுள்ளது. 

எய்ம்ஸ் மருத்துவமனை சர்வரில் முன்னாள் பிரதமர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள், பிரதிநிதிகள், நீதிபதிகள் உட்பட நாட்டின் குடிமக்களில் சுமார் மூன்று முதல் நான்கு கோடி மக்களின் தரவுகள் அவற்றில் உள்ளது குறிப்பிடத்தக்கது. சர்வர் ஹேக் செய்யப்பட்டுள்ளது தெரியவந்ததும், Computer Emergency Response Team எய்ம்ஸ் மருத்துவமனைக்கு விரைந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். ஆனால் பலன் அளிக்கவில்லை. அவர்கள் தொடர்ந்து முயற்சி செய்தும் வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்வத்தை தொடர்ந்து, டெல்லி காவல்துறை மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் என பல குழுக்களாக விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மிரட்டி பணம் பறித்தல் மற்றும் இணைய பயங்கரவாதம் தொடர்பான வழக்கு நவம்பர் 25 அன்று டெல்லி காவல்துறையின் உளவுத்துறை இணைவு மற்றும் வியூக நடவடிக்கைகள் (IFSO) பிரிவால் பதிவு செய்யப்பட்டது.

மீட்பு நடவடிக்கை மற்றும் விசாரணைக்கு நடுவில், எய்ம்ஸ் மருத்துவமையில் உள்ள 5000 கணினிகளில் 1200 கணினிகளுக்கு வைரஸ் அட்டாக் செய்யப்படாமல் இருக்க ஆண்டி-வைரஸ்கள் போடப்பட்டுள்ளது. மேலும், இதற்கிடையில், என்ஐசி இ-மருத்துவமனை தரவுத்தளம் மற்றும் இ-மருத்துவமனைக்கான பயன்பாட்டு சேவையகங்கள் மீட்டமைக்கப்பட்டுள்ளன. NIC குழு, AIIMS இல் அமைந்துள்ள மற்ற இ-மருத்துவமனை சர்வர்களில் இருந்து வைரஸ்களை ஸ்கேன் செய்து சுத்தம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. மொத்தம் உள்ள 50 சர்வர்களில் 20 சர்வர்கள் ஸ்கேன் செய்யப்பட்டுள்ளன. இந்த மீட்பு நடவடிக்கையானது 24 மணிநேரமும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

நாட்டின் தலைநகர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகத்தின் சர்வர் ஹேக் செய்யப்பட்டு ஒரு வாரம் ஆகியும் மீட்கப்படாத நிலையில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தலைப்பு செய்திகள்

சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: கொள்முதல் நடைமுறையில் புதிய விதிகள்! விபரம் இதோ..
சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: கொள்முதல் நடைமுறையில் புதிய விதிகள்! விபரம் இதோ..
Independence Day 2026 Theme: எதிர்காலத்திற்கு உத்வேகம் அளிப்போம்.. 2026 சுதந்திர தினத்தின் தீம் என்ன?
Independence Day 2026 Theme: எதிர்காலத்திற்கு உத்வேகம் அளிப்போம்.. 2026 சுதந்திர தினத்தின் தீம் என்ன?
இந்தியாவில் குழந்தைகள் சோசியல் மீடியா பயன்படுத்த தடையா?.. வருகிறது சட்ட மசோதா!
இந்தியாவில் குழந்தைகள் சோசியல் மீடியா பயன்படுத்த தடையா?.. வருகிறது சட்ட மசோதா!
எதிரிகளை சுட்டெரிக்கும் அக்னித் தலம்: திருவண்ணாமலையில் அமித் ஷா! பரபரக்கும் அரசியல் பின்னணி!
எதிரிகளை சுட்டெரிக்கும் அக்னித் தலம்: திருவண்ணாமலையில் அமித் ஷா! பரபரக்கும் அரசியல் பின்னணி!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Wagon R CNG Real Milage: ஒரு கிலோ எரிபொருளில் மாருதி வேகன் ஆர் CNG எவ்வளவு மைலேஜ் தரும்.? சோதனை முடிவுகள் இதோ
ஒரு கிலோ எரிபொருளில் மாருதி வேகன் ஆர் CNG எவ்வளவு மைலேஜ் தரும்.? சோதனை முடிவுகள் இதோ
Scorpio N Facelift on EMI: ரூ.1 லட்சம் முன்பணம் செலுத்தி மஹிந்திரா ஸ்கார்பியோ N ஃபேஸ்லிஃப்ட் வாங்கினால் மாத EMI எவ்வளவு.? முழு விவரம்
ரூ.1 லட்சம் முன்பணம் செலுத்தி மஹிந்திரா ஸ்கார்பியோ N ஃபேஸ்லிஃப்ட் வாங்கினால் மாத EMI எவ்வளவு.? முழு விவரம்
டேங்க் ஃபுல் செய்தால் 1200 கி.மீ; 30 மாதங்களில் 4 லட்சம் கார்கள் விற்பனையாகி சாதனை- எந்த கார் தெரியுமா?
டேங்க் ஃபுல் செய்தால் 1200 கி.மீ; 30 மாதங்களில் 4 லட்சம் கார்கள் விற்பனையாகி சாதனை- எந்த கார் தெரியுமா?
Embed widget