மேலும் அறிய

காங்கிரஸ் கட்சியின் முக்கிய முடிவுகளை எடுத்தவர்கள் இவர்கள்தான்...ராஜினாமா கடிதத்தில் குலாம் நபி ஆசாத்..

ராகுல் காந்தி முதிர்ச்சியற்று செயல்பட்டதாக விமர்சித்த அவர், கட்சியில் உள்ள ஆலோசனை அமைப்பை அவர் அழித்ததாக குற்றம்சாட்டி உள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும், ஜி-23 அதிருப்தி குழுவின் முக்கிய தலைவருமான குலாம் நபி ஆசாத் இன்று கட்சியில் இருந்து விலகினார். ராகுல் காந்தி முதிர்ச்சியற்று செயல்பட்டதாக விமர்சித்த அவர், கட்சியில் உள்ள ஆலோசனை அமைப்பை அவர் அழித்ததாக குற்றம்சாட்டி உள்ளார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு குலாம் நபி ஆசாத் அனுப்பிய ராஜிநாமா கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய தகவல்களை கீழே காண்போம்:

துரதிர்ஷ்டவசமாக, ராகுல் காந்தி அரசியலுக்கு வந்த பிறகு, குறிப்பாக ஜனவரி 2013க்குப் பிறகு, அவர் உங்களால் (சோனியா காந்தி) துணைத் தலைவராக நியமிக்கப்பட்டபோது, ​​முன்பு இருந்த முழு ஆலோசனை அமைப்பும் அவரால் அழிக்கப்பட்டது.

செய்தியாளர் சந்திப்பில் செய்தியாளர்கள் முன்பு அவசர சட்டத்தின் நகலை கிழித்தது அவரது (ராகுல் காந்தி) முதிர்ச்சியின்மைக்கு மிகத் தெளிவான எடுத்துக்காட்டுகளில் ஒன்று.

இந்த குழந்தைத்தனமான நடத்தை, பிரதமர் மற்றும் மத்திய அரசின் அதிகாரத்தை முற்றிலுமாகத் தகர்த்தது. 2014 இல் ஐக்கிய முற்போக்கு அரசின் தோல்விக்கு இந்த ஒரே ஒரு நடவடிக்கையானது, பிற காரணங்களை காட்டிலும் முக்கிய பங்காற்றியது. வலதுசாரி சக்திகள் மற்றும் சில நேர்மையற்ற கார்ப்பரேட்களின் கலவையான அவதூறு மற்றும் பிரச்சாரத்தை காட்டிலும் ராகுல் காந்தியின் குழந்தைத்தனமான போக்கு தோல்விக்கு மிக முக்கிய காரணியாக அமைந்துள்ளதாக குலாம் நபி ஆசாத் குற்றம் சாட்டியுள்ளார்.

2014ல் இருந்து உங்களின் தலைமையிலும், அதைத் தொடர்ந்து ராகுல் காந்தியின் தலைமையிலும் காங்கிரஸ் இரண்டு மக்களவைத் தேர்தல்களில் அவமானகரமான முறையில் தோல்வியடைந்துள்ளது. 2014 - 2022க்கு இடையில் நடைபெற்ற 49 சட்டப்பேரவைத் தேர்தல்களில் 39ல் தோல்வியடைந்துள்ளது. 
நான்கு மாநிலத் தேர்தல்களில் மட்டுமே அக்கட்சி வெற்றிபெற்று ஆறு நிகழ்வுகளில் கூட்டணியில் ஆட்சிக்கு வர முடிந்தது. துரதிர்ஷ்டவசமாக, இன்று காங்கிரஸ் இரண்டு மாநிலங்களில் மட்டுமே ஆட்சி செய்து வருகிறது. மேலும் இரண்டு மாநிலங்களில் ஆளும் கூட்டணியின் ஓர் அங்கமாக உள்ளது.

கோபத்தில் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகிய பிறகு, கட்சிக்காக தங்கள் உயிரைக் கொடுத்த கட்சியின் மூத்த நிர்வாகிகள் அனைவரும் செயற்குழுக் கூட்டத்தில் அவமதிக்கப்பட்டார்கள். நீங்கள் இடைக்காலத் தலைவராகப் பொறுப்பேற்றீர்கள். கடந்த மூன்று ஆண்டுகளாக இன்றும் நீங்கள் தொடர்ந்து அந்த பதவியை வகித்து வருகிறீர்கள். 

இன்னும் மோசமான விஷயம் என்னவென்றால், ஐக்கிய முற்போக்கு அரசாங்கத்தின் ஒருமைப்பாட்டைத் தகர்த்த 'ரிமோட் கண்ட்ரோல் மாடல்' இப்போது இந்திய தேசிய காங்கிரஸை தகர்த்து வருகிறது. நீங்கள் பெயரளவில் மட்டுமே தலைவராக இருக்கும் போது, ​​அனைத்து முக்கியமான முடிவுகளையும்  ராகுல் காந்தியோ அல்லது அதைவிட மோசமாக அவருடைய பாதுகாவலர்கள் மற்றும் உதவியாளர்கள் (தனிப்பட்ட உதவியாளர்கள்) எடுக்கின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget