11 ஆண்டுகால பேஸ்புக் காதலிக்காக ஸ்வீடனிலிருந்து இந்தியா பறந்து வந்த காதலர்! முடிவு என்ன தெரியுமா?
அந்த வகையில் முகநூலில் 11 ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்த இருவர் தற்போது நிஜ வாழ்க்கையில் தம்பதிகளக இணைந்துள்ளனர்
சமூக வலைத்தளங்களில் நண்பர்களாக அறிமுகமாகி பின்னர் வாழ்க்கை இணையர்களாக தொடர்ந்தவர்கள் இங்கு அதிகம். அந்த வகையில் முகநூலில் 11 ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்த இருவர் தற்போது வாழ்க்கையில் தம்பதிகளக இணைந்துள்ளனர். இந்த ரியல் லைஃப் ஸ்டோரி அனைவரையும் சுவாரசியம் கொள்ளச் செய்துள்ளது. ஸ்வீடனை சேர்ந்த ஒரு பெண் சமூக ஊடகங்கள் வழியாக இந்தியாவைச் சேர்ந்த ஒருவரை பின் தொடர்ந்து நட்பு பின்னர் காதலாக மாறிய நிலையில் அவரை தற்போது திருமணம் செய்துள்ளார்.
கிறிஸ்டன் லீபர்ட் தனது சொந்த நாட்டிலிருந்து இந்தியாவுக்கு வந்து, உத்தரபிரதேசத்தில் உள்ள எட்டாவில் வசிக்கும் பவன் குமாருடன் திருமணம் செய்துகொண்டுள்ளார். இவர்களின் திருமணப் புகைப்படம் தற்போது ஃபேஸ்புக்கில் வைரலாகி உள்ளது.
उत्तर प्रदेश: स्वीडन की युवती को फेसबुक पर भारतीय युवक से प्यार हुआ, भारत पहुंचकर युवती ने युवक से विवाह किया।
— ANI_HindiNews (@AHindinews) January 28, 2023
क्रिस्टन लिबर्ट ने कहा, "मैं भारत इससे पहले भी आई हूं, मुझे भारत बेहद पसंद है और मैं इस शादी से बेहद खुश हूं।" (28.01) pic.twitter.com/eaw8UWnO1s
இருவரும் வெள்ளிக்கிழமை ஜனவரி 27 அன்று இந்து மதச் சடங்குகளின்படி அந்த மாவட்டத்தில் உள்ள ஒரு உள்ளூர் பள்ளியில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.கிறிஸ்டன் மற்றும் பவன் முதன்முதலில் பேஸ்புக்கில் 2012ல் பேசிப் பழகத் தொடங்கினர். அதை அடுத்து அவர் இந்தியாவுக்கு முன்னர் ஒருமுறை வந்து பவனை சந்தித்திருக்கிறார்..
இதுகுறித்து அவர் கூறுகையில்,"நான் இதற்கு முன்பு இந்தியாவுக்கு வந்திருக்கிறேன், நான் இந்தியாவை நேசிக்கிறேன், இந்த திருமணத்தில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்," என்று ஊடகத்திடம் குறிப்பிட்டுள்ளார். கிறிஸ்டன் திருமணம் செய்துள்ள பி.டெக் பொறியியல் பட்டதாரியான பவன் குமார், ஒரு நிறுவனத்தில் பொறியாளராகப் பணிபுரிகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்டன் உடனான காதல் மற்றும் திருமணம் செய்து கொள்வது தொடர்பான தனது முடிவை, பவன் குமார் குடும்பத்தில் தெரிவித்துள்ளார். அவர்களும் சம்மதம் தெரிவிக்க, இதுதொடர்பான தகவலை கிறிஸ்டனிடம் தெரிவித்துள்ளார். அதைகேட்டதும் மகிழ்ச்சி அடைந்த கிறிஸ்டன் ஸ்வீடனிலிருந்து, ஆக்ரா வந்தடைந்து அங்கிருந்து ஆவ்காட் பகுதிக்கு வந்தடைந்துள்ளார். அங்கு பவன் குமாரின் குடும்பத்தை சந்தித்த பிறகு, இந்துக்களின் பாரம்பரிய முறைப்படி திருமணத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
திருமணம் தொடர்பாக பேசிய பவன்குமாரின் பெற்றோர், ”இந்த திருமணத்தில் எங்களுக்கு முழு உடன்பாடு உள்ளது. குழந்தைகளின் மகிழ்ச்சியில் தான் நமது மகிழ்ச்சி இருக்கிறது” என மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளனர்.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்புதான், கேமிங் செயலியான லுடோவில் சந்தித்த ஒரு நபரை திருமணம் செய்ய சட்டப்பூர்வமாக இந்தியாவிற்குள் நுழைந்த பாகிஸ்தானிய பெண் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானில் உள்ள ஐதராபாத்தில் இருந்து கர்நாடகாவில் உள்ள முலாயம் சிங் யாதவ் என்கிற அந்த நபரை சந்திக்க வந்துள்ளார். ஆனால் நேபாள எல்லை வழியாக உரிய ஆவணங்கள் இன்றி அந்தப் பெண் இந்தியாவுக்குள் நுழைந்ததாக கர்நாடக போலீசார் தெரிவித்தனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
and tablets