மேலும் அறிய

பணிச்சுமையால் உயிரிழந்த பெண்.. என்னாது அவர் வேலை செய்த நிறுவனத்துக்கு உரிமமே இல்லையா? ஷாக்

இளம்பெண் அன்னா செபாஸ்டியன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பி வரும் நிலையில், அவரின் மரணத்திற்கு காரணமாக கூறப்படும் EY நிறுவனம் குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அதீத வேலைப்பளுவால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக இளம்பெண் அன்னா செபாஸ்டியன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பி வரும் நிலையில், அவரின் மரணத்திற்கு காரணமாக கூறப்படும் அவர் பணிபுரிந்த எர்ன்ஸ்ட் அண்ட் யங் இந்தியா (E&Y) நிறுவனம் உரிமம் இன்றி இயங்கி வந்தது தெரிய வந்துள்ளது.

இன்றைய உலகில் மன அழுத்தம் என்பது மிகப்பெரிய பிரச்னையாக மாறியுள்ளது. ஒவ்வொருவரும் ஒருவித மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். குறிப்பாக, வேலை அழுத்தம் என்பது இன்றைய காலகட்டத்தில் அனைவரையும் பாதிக்கக்கூடிய பிரச்சனையாகிவிட்டது.

உரிமம் இன்றி இயங்கிய EY நிறுவனம்:

இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் 26 வயதான பட்டய கணக்காளர் (Chartered Accountant) அன்னா செபாஸ்டியன் அதீத வேலை அழுத்தம் காரணமாக உயிரிழந்ததாக புகார் எழுந்தது. அவரின் மரணத்தை தொடர்ந்து, அவர் பணிபுரிந்து வந்த எர்ன்ஸ்ட் அண்ட் யங் இந்தியா (E&Y) நிறுவனம் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

இந்த நிலையில், E&Y நிறுவனம் குறித்து அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. கடந்த 2007ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் இந்த நிறுவனம் பணி நேரத்தை ஒழுங்குபடுத்தும் உரிமம் இல்லாமல் இயங்கி வந்துள்ளது. இதை மாநில அரசின் உயர் அதிகாரி உறுதி செய்துள்ளார்.

இதுகுறித்து மகாராஷ்டிராவின் கூடுதல் தொழிலாளர் ஆணையர் சைலேந்திர போல் கூறுகையில், "மாநில கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் கட்டாயமாக பதிவு செய்திருக்க வேண்டும். ஆனால், பதிவு செய்யாமல் இயங்கி வந்திருக்கிறது.

நடவடிக்கை எடுக்கப்படுமா?

வயது வந்தோருக்கான அதிகபட்ச வேலை நேரத்தை ஒவ்வொரு நாளும் ஒன்பது மணிநேரமாகவும் ஒவ்வொரு வாரமும் 48 மணிநேரமாகவும் சட்டம் வரையறுக்கிறது. சட்டத்தின் கீழ் பதிவு செய்ய கடந்த 2024ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் தொழிலாளர் துறையில் விண்ணப்பித்திருக்கிறது. இந்த அலுவலகத்தை தொடங்கிய 2007 முதல் விண்ணப்பிக்காததால் நாங்கள் அதை நிராகரித்தோம்.

இத்தனை ஆண்டுகளாக ஏன் பதிவு செய்ய முன்வரவில்லை என்பது குறித்து விளக்கமளிக்க ஏழு நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது" என்றார். இந்த சட்டத்திற்கு உட்பட்டு செயல்படவில்லை என்றால் நிறுவனங்கள் மீது கடுமையான தண்டனை வழங்கப்படும்.

சட்டத்திற்கு இணங்கி செயல்படாமல், அதீத வேலைப்பளு காரணமாக அசம்பாவிதம் நடந்து ஊழியருக்கு கடுமையான காயம் அல்லது மரணம் ஏற்பட்டால், ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது ₹ 500,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Vijay Modi Meeting: டெல்லி சந்திப்பு; விஜய்யிடம் பிரதமர் மோடி பேசிய முதல் வார்த்தை.! முதலமைச்சரின் ரியாக்ஷன் என்ன.?
டெல்லி சந்திப்பு; விஜய்யிடம் பிரதமர் மோடி பேசிய முதல் வார்த்தை.! முதலமைச்சரின் ரியாக்ஷன் என்ன.?
அடுத்த இடி.. காஸ்ட்லியாகும் ரயில் பயணம்- ஜூன் 1 முதல் உணவு, குளிர்பானங்கள் விலை உயர்வு
அடுத்த இடி.. காஸ்ட்லியாகும் ரயில் பயணம்- ஜூன் 1 முதல் உணவு, குளிர்பானங்கள் விலை உயர்வு
உயர்நீதிமன்ற உத்தரவுக்கு பின், கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் வீடுகளில் ED ரெய்டு..
உயர்நீதிமன்ற உத்தரவுக்கு பின், கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் வீடுகளில் ED ரெய்டு..
Top 10 Headlines: இந்தியாவில் எபோலா தொற்று? .. உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை.. 11 மணி வரை நடந்தது என்ன?
Top 10 Headlines: இந்தியாவில் எபோலா தொற்று? .. உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை.. 11 மணி வரை நடந்தது என்ன?
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

தமிழ்நாட்டுக்கு புதிய DGP UPSC ஓகே சொன்ன 3 பேர்! விஜய்யின் CHOICE யார்?
தவெகவில் குவியும் அதிமுகவினர்
”இன்னைக்கு வரை தான் TIME
”என்னை காதலிக்க மாட்டியா” பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர்! பகீர் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay Modi Meeting: ‘எங்களின் உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம்’ - பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் பேசியது என்ன? வெளியான பரபரப்புத் தகவல்கள்
‘எங்களின் உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம்’ - பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் பேசியது என்ன? வெளியான பரபரப்புத் தகவல்கள்
பிரதமரை சந்திக்க போன இடத்தில் ஏஜண்ட்க்கு என்ன வேலை..? தவெகவினர் கேள்வி
பிரதமரை சந்திக்க போன இடத்தில் ஏஜண்ட்க்கு என்ன வேலை..? தவெகவினர் கேள்வி
Vijay Modi Meeting: டெல்லி சந்திப்பு; விஜய்யிடம் பிரதமர் மோடி பேசிய முதல் வார்த்தை.! முதலமைச்சரின் ரியாக்ஷன் என்ன.?
டெல்லி சந்திப்பு; விஜய்யிடம் பிரதமர் மோடி பேசிய முதல் வார்த்தை.! முதலமைச்சரின் ரியாக்ஷன் என்ன.?
EPS Vs CV Shanmugam: தனித்து விடப்பட்ட சிவி சண்முகம்; சமாதானமாகாமல் ஆவேசம்; ராஜினாமா செய்கிறாரா.? அடுத்து என்ன.?
தனித்து விடப்பட்ட சிவி சண்முகம்; சமாதானமாகாமல் ஆவேசம்; ராஜினாமா செய்கிறாரா.? அடுத்து என்ன.?
Maruti Victoris CNG Review: Fuel விலை கூடுதேன்னு கவலைப்படாதீங்க, காப்பாத்த ஒரு கார் இருக்கு.! மாருதி விக்டோரிஸ் CNG ரிவ்யூவ்
Fuel விலை கூடுதேன்னு கவலைப்படாதீங்க, காப்பாத்த ஒரு கார் இருக்கு.! மாருதி விக்டோரிஸ் CNG ரிவ்யூவ்
70 கிலோமீட்டர் மைலேஜ் தரும் அசத்தலான 6 பைக்குகள்! பெட்ரோல் விக்குற விலையில இதான் பெஸ்ட்!
70 கிலோமீட்டர் மைலேஜ் தரும் அசத்தலான 6 பைக்குகள்! பெட்ரோல் விக்குற விலையில இதான் பெஸ்ட்!
வெளியேறப்போவது யார்? இன்னும் சற்று நேரத்தில் எலிமினேட்டர்! குஜராத்துடன் மல்லுகட்டப்போவது சன்ரைசர்ஸா? ராஜஸ்தானா?
வெளியேறப்போவது யார்? இன்னும் சற்று நேரத்தில் எலிமினேட்டர்! குஜராத்துடன் மல்லுகட்டப்போவது சன்ரைசர்ஸா? ராஜஸ்தானா?
'என்னை ஏன் பேசவிடல?' - தவெக எம்எல்ஏவை ரவுண்ட் கட்டிய திமுகவினர்; பாதியிலேயே கிளம்பினார் - என்ன நடந்தது?
'என்னை ஏன் பேசவிடல?' - தவெக எம்எல்ஏவை ரவுண்ட் கட்டிய திமுகவினர்; பாதியிலேயே கிளம்பினார் - என்ன நடந்தது?
Embed widget