மேலும் அறிய

பணிச்சுமையால் உயிரிழந்த பெண்.. என்னாது அவர் வேலை செய்த நிறுவனத்துக்கு உரிமமே இல்லையா? ஷாக்

இளம்பெண் அன்னா செபாஸ்டியன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பி வரும் நிலையில், அவரின் மரணத்திற்கு காரணமாக கூறப்படும் EY நிறுவனம் குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அதீத வேலைப்பளுவால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக இளம்பெண் அன்னா செபாஸ்டியன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பி வரும் நிலையில், அவரின் மரணத்திற்கு காரணமாக கூறப்படும் அவர் பணிபுரிந்த எர்ன்ஸ்ட் அண்ட் யங் இந்தியா (E&Y) நிறுவனம் உரிமம் இன்றி இயங்கி வந்தது தெரிய வந்துள்ளது.

இன்றைய உலகில் மன அழுத்தம் என்பது மிகப்பெரிய பிரச்னையாக மாறியுள்ளது. ஒவ்வொருவரும் ஒருவித மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். குறிப்பாக, வேலை அழுத்தம் என்பது இன்றைய காலகட்டத்தில் அனைவரையும் பாதிக்கக்கூடிய பிரச்சனையாகிவிட்டது.

உரிமம் இன்றி இயங்கிய EY நிறுவனம்:

இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் 26 வயதான பட்டய கணக்காளர் (Chartered Accountant) அன்னா செபாஸ்டியன் அதீத வேலை அழுத்தம் காரணமாக உயிரிழந்ததாக புகார் எழுந்தது. அவரின் மரணத்தை தொடர்ந்து, அவர் பணிபுரிந்து வந்த எர்ன்ஸ்ட் அண்ட் யங் இந்தியா (E&Y) நிறுவனம் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

இந்த நிலையில், E&Y நிறுவனம் குறித்து அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. கடந்த 2007ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் இந்த நிறுவனம் பணி நேரத்தை ஒழுங்குபடுத்தும் உரிமம் இல்லாமல் இயங்கி வந்துள்ளது. இதை மாநில அரசின் உயர் அதிகாரி உறுதி செய்துள்ளார்.

இதுகுறித்து மகாராஷ்டிராவின் கூடுதல் தொழிலாளர் ஆணையர் சைலேந்திர போல் கூறுகையில், "மாநில கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் கட்டாயமாக பதிவு செய்திருக்க வேண்டும். ஆனால், பதிவு செய்யாமல் இயங்கி வந்திருக்கிறது.

நடவடிக்கை எடுக்கப்படுமா?

வயது வந்தோருக்கான அதிகபட்ச வேலை நேரத்தை ஒவ்வொரு நாளும் ஒன்பது மணிநேரமாகவும் ஒவ்வொரு வாரமும் 48 மணிநேரமாகவும் சட்டம் வரையறுக்கிறது. சட்டத்தின் கீழ் பதிவு செய்ய கடந்த 2024ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் தொழிலாளர் துறையில் விண்ணப்பித்திருக்கிறது. இந்த அலுவலகத்தை தொடங்கிய 2007 முதல் விண்ணப்பிக்காததால் நாங்கள் அதை நிராகரித்தோம்.

இத்தனை ஆண்டுகளாக ஏன் பதிவு செய்ய முன்வரவில்லை என்பது குறித்து விளக்கமளிக்க ஏழு நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது" என்றார். இந்த சட்டத்திற்கு உட்பட்டு செயல்படவில்லை என்றால் நிறுவனங்கள் மீது கடுமையான தண்டனை வழங்கப்படும்.

சட்டத்திற்கு இணங்கி செயல்படாமல், அதீத வேலைப்பளு காரணமாக அசம்பாவிதம் நடந்து ஊழியருக்கு கடுமையான காயம் அல்லது மரணம் ஏற்பட்டால், ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது ₹ 500,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

Monsoon Bills: பிறப்பு & இறப்பு To தொகுதி மறுவரையறை..! 5 புதிய மசோதாக்கள் - மழைக்கால கூட்டத்தொடர் ப்ளான்
பிறப்பு & இறப்பு To தொகுதி மறுவரையறை..! 5 புதிய மசோதாக்கள் - மழைக்கால கூட்டத்தொடர் ப்ளான்
மொத்தமாக மாறிய ஆந்திரா அரசியல்! நடிகர் விஜய்யை பார்த்து ஜூனியர் என்.டி.ஆர் எடுத்த அதிரடி முடிவு!
மொத்தமாக மாறிய ஆந்திரா அரசியல்! நடிகர் விஜய்யை பார்த்து ஜூனியர் என்.டி.ஆர் எடுத்த அதிரடி முடிவு!
TN Weather Update: எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
விவசாயிகளுக்கு அடித்த அதிர்ஷ்டம்! ரூ.4,149 கோடியைத் தொட்ட ஏலக்காய் பிசினஸ் – எகிறிய கிலோ விலை!
விவசாயிகளுக்கு அடித்த அதிர்ஷ்டம்! ரூ.4,149 கோடியைத் தொட்ட ஏலக்காய் பிசினஸ் – எகிறிய கிலோ விலை!

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai : மகளிர்களுக்கு ஜாக்பாட்.! மாதம் ரூ.2500 வங்கி கணக்குக்கு வரப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
மகளிர்களுக்கு ஜாக்பாட்.! மாதம் ரூ.2500 வங்கி கணக்குக்கு வரப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
ஃபிஃபா உலகக்கோப்பை இறுதி: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை- வெளியான அதிரடி அறிவிப்பு!
ஃபிஃபா உலகக்கோப்பை இறுதி: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை- வெளியான அதிரடி அறிவிப்பு!
Monsoon Bills: பிறப்பு & இறப்பு To தொகுதி மறுவரையறை..! 5 புதிய மசோதாக்கள் - மழைக்கால கூட்டத்தொடர் ப்ளான்
பிறப்பு & இறப்பு To தொகுதி மறுவரையறை..! 5 புதிய மசோதாக்கள் - மழைக்கால கூட்டத்தொடர் ப்ளான்
அதிக மைலேஜ் கிடைக்கணுமா? பெட்ரோலை நிரப்ப பெஸ்ட் டைம் எது? அறிவியல் உண்மைகள்!
அதிக மைலேஜ் கிடைக்கணுமா? பெட்ரோலை நிரப்ப பெஸ்ட் டைம் எது? அறிவியல் உண்மைகள்!
10 தேசிய விருதுகளை வாங்கி குவித்த தமிழ் திரைத்துறை.! தனுஷ், ஜி.வி.பிரகாஷை பாரட்டிய சிஎம் விஜய்
10 தேசிய விருதுகளை வாங்கி குவித்த தமிழ் திரைத்துறை.! தனுஷ், ஜி.வி.பிரகாஷை பாரட்டிய சிஎம் விஜய்
National Awards: தேசிய விருதா? சோப்பு டப்பாவா? புரட்டி எடுக்கும் நெட்டிசன்ஸ், என்ன இருக்குன்னு இதுக்குலா அவார்ட்?
தேசிய விருதா? சோப்பு டப்பாவா? புரட்டி எடுக்கும் நெட்டிசன்ஸ், என்ன இருக்குன்னு இதுக்குலா அவார்ட்?
R S Bharathi :
"விஜய்க்கு ஆபத்து வந்தா... அதுக்குக் காரணம் ஆதவ் அர்ஜுனாதான்!" -அலர்ட் செய்யும் ஆர்.எஸ்.பாரதி
R. B. Udhayakumar : ஜனநாயகன் படம் வெளியீட்டிற்கு அரசு விடுமுறையா.? அமைச்சர் புஸ்ஸி ஆனந்தை போட்டுத்தாக்கும் ஆர்.பி.உதயகுமார்
ஜனநாயகன் படம் வெளியீட்டிற்கு அரசு விடுமுறையா.? அமைச்சர் புஸ்ஸி ஆனந்தை போட்டுத்தாக்கும் ஆர்.பி.உதயகுமார்
Embed widget