மேலும் அறிய

காவிரியில் தமிழ்நாட்டுக்கு உரிமை இல்லையா? கன்னடர்களுக்கு ஆதரவான நிலைபாட்டை எடுத்த பிரகாஷ் ராஜ்

பிரகாஷ்ராஜ் கன்னடத்தில் போட்ட மற்றோர் பதிவு தற்போது சர்ச்சையை கிளப்பி வருகிறது.

காவிரி விவகாரத்தால் தமிழ்நாடு - கர்நாடக மாநிலங்களுக்கிடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த விவகாரம், பல ஆண்டுகளாக பிரச்னையாக இருந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் விஸ்வரூபம் எடுக்க தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நீரை கர்நாடக அரசு தராமல் இழுத்து அடித்து வருகிறது. 

விஸ்வரூபம் எடுத்த காவிரி விவகாரம்:

கர்நாடக அணைகளில் இருந்து வரும் அக்டோபர் 15ஆம் தேதி வரை, 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிட காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.  ஆனால், தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தருவதற்கு கன்னட அமைப்புகளும், விவசாய அமைப்புகளும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. 

இதனால் தமிழ்நாடு, கர்நாடக மாநிலங்களுக்கிடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இப்படியான சூழலில் நடிகர் சித்தார்த்திடம் கன்னட அமைப்பை சார்ந்தவர்கள் பிரச்னை செய்த சம்பவம் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

பெங்களூருவில் சித்தா படத்தின் ப்ரமோஷன் விழா நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, உள்ளே புகுந்த கன்னட அமைப்பினர்  மேடையில் அமர்ந்திருந்த சித்தார்த்தை நோக்கி கன்னடத்தில் ஏதோ கூறினர். நிகழ்ச்சி நடத்த எதிர்ப்பு தெரிவித்தனர். சித்தார்த்தை வெளியே செல்லுமாறும் வலியுறுத்தினர்.

சித்தார்த்தை மிரட்டிய கன்னட அமைப்புகள்:

தொடர்ந்து சித்தார்த்தை மிரட்டும் தொனியில் பேசியதால் அவர்  மேடையில் இருந்து எதுவும் பதில் பேசாமல் சிரித்துக்கொண்டே பாதியிலே இறங்கிச் சென்றார். இப்படியான சூழலில் பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ், சித்தார்த்திற்கு நடந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

பிரச்னையைத் தீர்க்கத் தவறிய அனைத்து அரசியல் கட்சிகளையும் அதன் தலைவர்களையும் கேள்வி கேட்பதற்குப் பதிலாக, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்காத பயனற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கேள்வி கேட்பதற்குப் பதிலாக, சாமானியர்களையும் கலைஞர்களையும் இப்படித் தொந்தரவு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என எக்ஸ் வலைதளத்தில் பிரகாஷ்ராஜ் பதிவிட்டார்.

பிரகாஷ்ராஜ் கன்னடத்தில் போட்ட பதிவால் சர்ச்சை:

மிரட்டல் விடுத்த கன்னட அமைப்புகளின் சார்பாக, வெளிப்படையாக மன்னிப்பு கேட்ட பிரகாஷ்ராஜ்-க்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். ஆனால், அதே பிரகாஷ்ராஜ் போட்ட மற்றோர் பதிவு தற்போது சர்ச்சையை கிளப்பி வருகிறது. சித்தார்த் விவகாரம் தொடர்பாக, பிரகாஷ்ராஜ் இரண்டு பதிவு போட்டிருந்தார்.

பிரகாஷ்ராஜ், ஆங்கிலத்தில் போட்ட பதிவுக்கும் கன்னடத்தில் போட்ட பதிவுக்கும் ஒரு சிறிய வித்தியாசம் உள்ளது. கன்னடத்தில் போட்ட பதிவில், "காவிரி நம்முடையது" என்ற ஹேஷ்டேக்குடன் பிரகாஷ்ராஜ் பதிவிட்டிருந்தார். ஆனால், ஆங்கிலத்தில் போடும்போது, அந்த ஹேஷ்டேக் இல்லாமல் பதிவிட்டுள்ளார். இதனால், அவர் காவிரி விவகாரத்தில் கன்னடர்களுக்கு ஆதரவான நிலைபாட்டை கொண்டுள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs ZIM Innings Highlights: அசரவைத்த அபி; ருத்ரதாண்டவத்தில் ருதுராஜ்; சிங்கமாக நின்ற ரிங்கு சிங்: ஜிம்பாப்வேக்கு 235 ரன்கள் இலக்கு!
IND vs ZIM Innings Highlights: அசரவைத்த அபி; ருத்ரதாண்டவத்தில் ருதுராஜ்; சிங்கமாக நின்ற ரிங்கு சிங்: ஜிம்பாப்வேக்கு 235 ரன்கள் இலக்கு!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் வேண்டும் - விக்கிரவாண்டியில் உதயநிதி பரப்புரை
Breaking News LIVE, July 7 : 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் வேண்டும் - விக்கிரவாண்டியில் உதயநிதி பரப்புரை
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM Innings Highlights: அசரவைத்த அபி; ருத்ரதாண்டவத்தில் ருதுராஜ்; சிங்கமாக நின்ற ரிங்கு சிங்: ஜிம்பாப்வேக்கு 235 ரன்கள் இலக்கு!
IND vs ZIM Innings Highlights: அசரவைத்த அபி; ருத்ரதாண்டவத்தில் ருதுராஜ்; சிங்கமாக நின்ற ரிங்கு சிங்: ஜிம்பாப்வேக்கு 235 ரன்கள் இலக்கு!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் வேண்டும் - விக்கிரவாண்டியில் உதயநிதி பரப்புரை
Breaking News LIVE, July 7 : 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் வேண்டும் - விக்கிரவாண்டியில் உதயநிதி பரப்புரை
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
Embed widget