மேலும் அறிய

சீனாவுக்கு மத்திய அரசின் கண்டிப்பு: கையாலாகதவர்களின் நடவடிக்கை என சு.சுவாமி கிண்டல்

இந்திய எல்லைக்கு உட்பட்ட அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள 15 இடங்களின் பெயர்களை சீனா மாற்றியுள்ளதாக எழுந்த புகார் குறித்த மத்திய அரசின் எதிர்வினையைக் கிண்டல் செய்துள்ளார் சுப்பிரமணியன் சுவாமி. 

இந்திய எல்லைக்கு உட்பட்ட அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள 15 இடங்களின் பெயர்களை சீனா மாற்றியுள்ளதாக எழுந்த புகார் குறித்த மத்திய அரசின் எதிர்வினையைக் கிண்டல் செய்துள்ளார் மாநிலங்களவை எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி. 

அண்மையில் சீன அரசு, அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள பல்வேறு இடங்களின் பெயர்களை மாற்றியுள்ளதாகத் தகவல் வெளியானது. இது குறித்து மத்திய அரசுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கேள்விகள் எழுந்தன.


சீனாவுக்கு மத்திய அரசின் கண்டிப்பு: கையாலாகதவர்களின் நடவடிக்கை என சு.சுவாமி கிண்டல்

இந்நிலையில், இது குறித்து வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், அருணாச்சலப் பிரதேசம் இன்றும், என்றும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. அங்குள்ள பகுதிகளுக்கு சீனா புதிதாக பெயர்களை வைத்துவிடுவதால் மட்டும் இந்த உண்மை மாறிவிடாது. சீனா இப்படி அத்துமீறுவது

இது முதன்முறையல்ல. இதற்கு முன்னால் 2017லும் இதுபோன்ற சம்பவங்களில் சீனா ஈடுபட்டுள்ளது என்று விளக்கமளித்துள்ளார்.

இந்த விளக்கத்தைச் சுட்டிக் காட்டியுள்ள சுப்பிரமணியன் சுவாமி, கையாலாகதவர்கள் கூறும் பதில் எனக் காட்டமாகப் பதிவிட்டுள்ளார்.

இதற்கிடையில் சீன அரசு ஊடகமான சினுவா செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், சீன அரசு எல்லைப் பாதுகாப்புச் சட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. அதன்படியே அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள உள்ள 15 இடங்களின் பெயர்களை சீன திருத்தியுள்ளது. இது சீன வரைபடத்தில் இணைப்பதற்காக இவ்வாறாக திருத்தப்பட்டுள்ளது என்று கூறியுள்ளது.

அருணாசலப் பிரதேசத்தை தங்கள் நாட்டின் ஒரு பகுதி எனக் கூறும் சீனா, லடாக் பகுதியிலும் தொடர்ந்து அத்துமீறி வருகிறது. சீனாவுக்கு பதிலடியாக இந்தியாவும் எல்லையில் ராணுவ பலத்தை அதிகரித்துள்ளது. 

இருநாடுகளுக்கும் இடையே  எல்லையில் நீடிக்கும் பதற்றத்தை முடிவுக்கு கொண்டு வர இதுவரை பலகட்டப் பேச்சுவார்த்தை ராணுவ மட்டத்தில் நடத்தப்பட்டது.  எனினும், உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை. எ
ல்லையில் இருநாடுகளுக்கும் இடையே பதற்றம் நீடித்து வரும் நிலையில்  எல்லைப் பகுதிகளுக்கான புதிய சட்டத்தை சீனா நிறைவேற்றியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சீனாவின் தேசிய சபையில் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டம் வரும் ஜனவரி 2022 முதல் அமலுக்கு வரும் என்று அந்நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. 

புதிய சட்டத்தில், எல்லைப் பகுதிகளை பாதுகாப்பதற்காக சீன அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்கும். எல்லைப் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக  அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும். எல்லைப் பகுதிகளில் சமூக மேம்பாடு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை வழங்கிட இந்த சட்டம் வழி செய்யும்அண்டை நாடுகளுடனான எல்லைப் பிரச்சினைகளில் சுமூக தீர்வு காண இந்த சட்டம் வழி செய்யும் என்பன போன்ற அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. 

இதன் அடிப்படையில் தான் சீனா, அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள 15 இடங்களின் பெயர்களை மாற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget