மேலும் அறிய

Chandrababu Naidu Arrested: சந்திரபாபு நாயுடு திடீர் கைது: பேருந்துகள் நிறுத்தம்... கடைகள் அடைப்பு.. ஆந்திராவில் உச்சகட்ட பதற்றம்..!

சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டடதை தொடர்ந்து ஆந்திராவில் பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

Chandrababu Naidu arrested: சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டடதை தொடர்ந்து ஆந்திராவில் பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. 

போக்குவரத்து பாதிப்பு:

ஆந்திர முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு குற்றப் புலனாய்வுத் துறையினரால் (சிஐடி) கைது செய்து செய்யப்பட்டுள்ளார். இவருடைய ஆட்சி காலத்தில் திறன் மேம்பாட்டு துறையின் ஊழல் நடைபெற்று இருப்பதாக கூறி இன்று காலை 6 மணியளவில் அவரை போலீசார் கைது செய்தனர். இந்த கைதை அடுத்து, ஆந்திரா மாநிலம் முழுவதும் பெரும் பதற்றம் நிலவுகிறது.

எந்தவித அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக போலீசார் பேருந்துகளை ஆங்காங்கே நிறுத்தி வைத்துள்ளனர். மேலும், ஆந்திரா முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலிருந்து ஆந்திராவிற்கு வரும் பேருந்துகளும் தமிழக எல்லையிலே நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் திருப்பதியில் ஏழுமலையான் கோயிலுக்கு வந்த பக்தர்கள் பேருந்துக்காக காத்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். ரயில் போக்குவரத்து மட்டும் இயக்கப்பட்டு வரக்கூடிய நிலையில் திருப்பதி - திருமலை இடையே மட்டும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. 

சந்திரபாபு நாயுடு கைது:

ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் சிஐடி அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டார்.  ஆந்திராவை அடுத்த நந்தியாலா நகரிலுள்ள ஞானபுரத்தில் உள்ள ஆர்கே ஃபங்ஷன் ஹாலில் இருந்து காலை 6 மணியளவில் சிஐடியினரால் கைது செய்யப்பட்டார். அவரை கைது செய்தபோது நந்தியால் ரேஞ்ச் டிஐஜி ரகுராமி ரெட்டி மற்றும் சிஐடி தலைமையில் பலத்த போலீஸ் படை குவிக்கப்பட்டுள்ளது.  முன்னதாக பூமா அகிலபிரியா, கலுவா சீனிவாசலு, பூமா பிரம்மானந்த ரெட்டி, ஜகத் விக்யாத் ரெட்டி, ஏவி சுப்பர் ரெட்டி, பிஜி ஜனார்தன் ரெட்டி உள்ளிட்ட பல தெலுங்கு தேச கட்சி தலைவர்களை போலீசார் கைது செய்தனர். ஆந்திர முதல்வராக 2014ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை இருந்தார் சந்திரபாபு நாயுடு. இவர் மீது திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.  சட்டவிரோதமாக ரூ.118 கோடி பெற்றதாக சந்திரபாபு நாயுடு மீது ஊழல் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் விசாரணை நடந்து வந்த நிலையில், இன்று அதிகாலை இவர் கைது செய்யப்பட்டார்.

திறன் பயிற்சியில் ஊழலா..? 

ஆந்திர மாநில திறன் மேம்பாட்டு ஊழல் (APSSDS) வழக்கில் சந்திரபாபு நாயுடு முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இந்த ஊழலில், பல நூறு கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக புகார் எழுந்துள்ளது. ஏபிஎஸ்எஸ்டிசி 2016 ஆம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியின் அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில், வேலையில்லாத இளைஞர்களுக்கு, அவர்களின் வேலைவாய்ப்பை அதிகரிக்க திறன் பயிற்சிகளை வழங்குவதன் மூலம் அவர்களை மேம்படுத்தும் நோக்கத்துடன் நிறுவப்பட்டது. ஆந்திரப் பிரதேச CED பதிவு செய்த FIR அடிப்படையில் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்க இயக்குனரகமும் (ED) விசாரணை நடத்தி வருகிறது. M/s DTSPL, அதன் இயக்குநர்கள் மற்றும் பலர் ஷெல் நிறுவனங்களின் உதவியுடன் பல நிலை பரிவர்த்தனைகளை மேற்கொண்டு அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதில், ரூ. 370 கோடி ரூபாய் வரை மோசடி நடந்ததாக கூறப்படுகிறது.

 

தலைப்பு செய்திகள்

சாதிவாரி கணக்கெடுப்பு செயலியில் சாதி பட்டியலை இணைக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு அன்புமணி அவசர கடிதம்!
சாதிவாரி கணக்கெடுப்பு செயலியில் சாதி பட்டியலை இணைக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு அன்புமணி அவசர கடிதம்!
சாதிவாரி கணக்கெடுப்பு: குழப்பம் தவிர்க்க அன்புமணி மோடிக்கு அதிரடி கோரிக்கை!
சாதிவாரி கணக்கெடுப்பு: குழப்பம் தவிர்க்க அன்புமணி மோடிக்கு அதிரடி கோரிக்கை!
சிலிண்டர் புக் பண்ண முடியாதா? வாடிக்கையாளர்களே மிஸ் பண்ணாம படிங்க!
சிலிண்டர் புக் பண்ண முடியாதா? வாடிக்கையாளர்களே மிஸ் பண்ணாம படிங்க!
இந்தியாவில் பார்க்க முடியுமா? ஆகஸ்ட் 12-ல் நிகழும் அரிதான 4 விண்வெளி நிகழ்வுகள்! தவறவிடாதீர்கள்!
இந்தியாவில் பார்க்க முடியுமா? ஆகஸ்ட் 12-ல் நிகழும் அரிதான 4 விண்வெளி நிகழ்வுகள்! தவறவிடாதீர்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
Maruti Suzuki SUV: 7 எஸ்யுவிக்களை நாங்க கொடுக்கிறோம்..! மாருதி அதிரடி - 7 சீட்டர், ஹைப்ரிட், EV, CNG - முழு லிஸ்ட்
7 எஸ்யுவிக்களை நாங்க கொடுக்கிறோம்..! மாருதி அதிரடி - 7 சீட்டர், ஹைப்ரிட், EV, CNG - முழு லிஸ்ட்
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
CM Vijay: தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
Embed widget