மேலும் அறிய

Byjus Crisis: இந்தியா முழுவதும் அலுவலகங்களை மூடும் பைஜூஸ்! அதிர்ச்சியில் ஊழியர்கள்!

பங்கு சந்தையில் பைஜூஸ் நிறுவனத்தின் பங்குகளை விற்று கிடைத்த பணத்தால் முதலீட்டாளர்களுக்கும், நிறுவனத்திற்கும் இடையே பிரச்சினை நிலவி வருகிறது.

இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் கல்வி நிறுவனமான பைஜூஸ் பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. பல்வேறு துணை நிறுவனங்கள் மூலமாக இணையவழி கல்வி சேவையை வழங்கி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் மார்க்கெட்டிங் மூலம் மிகப்பெரிய சந்தையை பைஜூஸ் பிடித்தது. 

நிதிநெருக்கடியில் சிக்கியுள்ள பைஜூஸ் நிறுவனம்:

இதனை உலகம் முழுவதும் விரிவுபடுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது பைஜூஸ். கடந்த 2022 ஆண்டு அக்டோபர் மாதம் முதல் தொடர்ந்து பணிநீக்க நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. கடந்த 2023ஆம் ஆண்டு, 2,500 ஊழியர்களையும், கடந்த ஆண்டு 1,500 ஊழியர்களையும் பணிநீக்கம் செய்தது பைஜூஸ். 

மேலும் பணிநீக்கங்கள் மேற்கொள்ளப்படாது என்று சி.இ.ஓ. ரவீந்தரன் தெரிவித்திருந்த நிலையில், சமீபத்தில் ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்துள்ளது பைஜூஸ். வருமானம் குறைந்ததோடு, பைஜூஸ் நிறுவனம் கடும் கடன் நெருக்கடியில் சிக்கியுள்ளதும் பணி நீக்கத்திற்கு காரணமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. 

கடன் வாங்கல், கொடுக்கல் தொடர்பான பிரச்சனையில் பைஜூஸ் நிறுவனம் சிக்கியள்ளதாக தெரிகிறது. இதனால் கடும் நிதி நெருக்கடியில் மாட்டிக் கொண்டு நீதிமன்றம் வரை சென்றுள்ளது. இதனால், பைஜூஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 75 சதவீதம் சரிந்துள்ளதாக தெரிகிறது. செலவுகளை குறைக்க பைஜூஸ் நிறுவனம் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தலைமை செயல் அதிகாரி எடுத்த அதிரடி முடிவு:

அதன் தொடர்ச்சியாக, பெங்களூருவில் உள்ள தலைமையகத்தை தவிர்த்து இந்தியா முழுவதும் உள்ள அலுவலகங்களை பைஜூஸ் நிறுவனம் காலி செய்துள்ளது. இதனால், நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் காலவரையின்றி வீட்டில் இருந்து பணிபுரியும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். 

நாடு முழுவதும் இயங்கி வரும் பைஜூஸ் கல்வி மையங்களில் பணிபுரிபவர்கள் மட்டும் அலுவலகத்திற்கு வரும்படி வலியுறுத்தப்பட்டுள்ளனர். பங்கு சந்தையில் பைஜூஸ் நிறுவனத்தின் பங்குகளை விற்றதன் மூலம் கிடைத்த பணத்தால் முதலீட்டாளர்களுக்கும் நிறுவனத்திற்கும் இடையே பிரச்னை நிலவி வருகிறது.

இம்மாதிரியான நெருக்கடியான சூழலில், பிப்ரவரி மாதத்திற்கான சம்பளத்தின் ஒரு பகுதியை 75 சதவிகித ஊழியர்களுக்கு பைஜூஸ் நிறுவனம் தரவில்லை என கூறப்படுகிறது. பல நாள்கள் கழித்துதான் அந்த சம்பளமே வழங்கப்பட்டுள்ளதாகவும் பங்கு சந்தையில் கிடைத்த பணத்தை பயன்படுத்த அனுமதி கிடைத்த பிறகு, மீதமுள்ள சம்பளம் வழங்கப்படும் என ஊழியர்களுக்கு பைஜூஸ் உறுதி அளித்துள்ளது. 

நிறுவனத்தை மறுசீரமைக்கும் நோக்கில் பைஜூஸ் இந்தியாவின் தலைமை செயல் அதிகாரி அர்ஜுன் மோகன் எடுத்த முடிவின்படியே, இந்தியா முழுவதும் உள்ள அலுவலகங்களை மூட முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் பைஜூஸ் நிறுவனத்தில் 14,000 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"ஒரு வார்த்தை கூட பேசாத ராகுல் காந்தி" கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்திற்கு நிர்மலா சீதாராமன் கண்டனம்!
Watch Video: குழந்தையாக மாறிய கோலி! கூடாரத்துக்குள் புகுந்து பந்தை எடுத்து அசத்தல் - வாவ்!
Watch Video: குழந்தையாக மாறிய கோலி! கூடாரத்துக்குள் புகுந்து பந்தை எடுத்து அசத்தல் - வாவ்!
Trichy: மத்திய மண்டலத்தில் நடப்பாண்டில் மட்டும் 1.45 லட்சம் சட்டவிரோத மது பறிமுதல்! பெரும் அதிர்ச்சி
Trichy: மத்திய மண்டலத்தில் நடப்பாண்டில் மட்டும் 1.45 லட்சம் சட்டவிரோத மது பறிமுதல்! பெரும் அதிர்ச்சி
Breaking News LIVE: நீட் தேர்வு முறைகேடு! பீகாரில் 17 மாணவர்கள் தகுதி நீக்கம்
Breaking News LIVE: நீட் தேர்வு முறைகேடு! பீகாரில் 17 மாணவர்கள் தகுதி நீக்கம்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Mamata banerjee campaign for Priyanka | பிரியங்காவுக்காக வரும் மம்தா! I.N.D.I.A கூட்டணியின் ப்ளான்Salem leopard | இறந்து கிடக்கும் ஆடுகள்! சிறுத்தை பீதியில் மக்கள்! வனத்துறைக்கு கோரிக்கைChennai's Amirtha  : சென்னைஸ் அமிர்தாவின் 8வது பட்டமளிப்பு விழா 250 மாணவர்கள் தேர்ச்சி!Chandrababu naidu assembly :மந்திரங்கள் முழங்க ENTRY! விழுந்து வணங்கிய சந்திரபாபு! கட்டியணைத்த பவன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஒரு வார்த்தை கூட பேசாத ராகுல் காந்தி" கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்திற்கு நிர்மலா சீதாராமன் கண்டனம்!
Watch Video: குழந்தையாக மாறிய கோலி! கூடாரத்துக்குள் புகுந்து பந்தை எடுத்து அசத்தல் - வாவ்!
Watch Video: குழந்தையாக மாறிய கோலி! கூடாரத்துக்குள் புகுந்து பந்தை எடுத்து அசத்தல் - வாவ்!
Trichy: மத்திய மண்டலத்தில் நடப்பாண்டில் மட்டும் 1.45 லட்சம் சட்டவிரோத மது பறிமுதல்! பெரும் அதிர்ச்சி
Trichy: மத்திய மண்டலத்தில் நடப்பாண்டில் மட்டும் 1.45 லட்சம் சட்டவிரோத மது பறிமுதல்! பெரும் அதிர்ச்சி
Breaking News LIVE: நீட் தேர்வு முறைகேடு! பீகாரில் 17 மாணவர்கள் தகுதி நீக்கம்
Breaking News LIVE: நீட் தேர்வு முறைகேடு! பீகாரில் 17 மாணவர்கள் தகுதி நீக்கம்
Anushka: அனுஷ்காவுக்கு இப்படி ஒரு பாதிப்பா? ஷூட்டிங்கே நின்றுவிடுமாம் - என்னங்க சொல்றீங்க!
Anushka: அனுஷ்காவுக்கு இப்படி ஒரு பாதிப்பா? ஷூட்டிங்கே நின்றுவிடுமாம் - என்னங்க சொல்றீங்க!
பெருத்த சவால்! 3 அடி உயரம் உள்ள பெண்ணுக்கு பிறந்த குழந்தை - சாதித்த அரசு மருத்துவர்கள்
பெருத்த சவால்! 3 அடி உயரம் உள்ள பெண்ணுக்கு பிறந்த குழந்தை - சாதித்த அரசு மருத்துவர்கள்
பாஜகவில் சாதி லாபியா? தமிழிசை, அண்ணாமலை, எஸ்.வி.சேகர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?- திருச்சி சூர்யா கேள்வி
பாஜகவில் சாதி லாபியா? தமிழிசை, அண்ணாமலை, எஸ்.வி.சேகர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?- திருச்சி சூர்யா கேள்வி
NEET UG row: விஸ்வரூபம் எடுக்கும் நீட் தேர்வு விவகாரம்: சிபிஐ வசம் விசாரணை ஒப்படைப்பு- வழக்குப் பதிவு
NEET UG row: விஸ்வரூபம் எடுக்கும் நீட் தேர்வு விவகாரம்: சிபிஐ வசம் விசாரணை ஒப்படைப்பு- வழக்குப் பதிவு
Embed widget