Breaking News LIVE 12th OCT 2024: கவரைப்பேட்டை ரயில் விபத்து : முழுமையான விசாரணைக்கு உயர்மட்ட குழு அமைக்கப்பட உள்ளது
Breaking LIVE News: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
LIVE
Background
- திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி பயங்கர விபத்து – 11 பெட்டிகள் தடம்புரண்டதில் 2 பெட்டிகளில் பற்றி எரிந்த தீ
- கவரப்பேட்டை ரயில் விபத்தில் சிக்கிய அனைத்து பயணிகளும் பத்திரமாக மீட்பு – காயமடைந்த 19 பேருக்கு சிகிச்சை
- கவரப்பேட்டை ரயில் விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவமனைக்கு நேரில் சென்று துணை முதலமைச்சர் உதயநிதி ஆறுதல்
- கவரப்பேட்டை ரயில் விபத்து எதிரொலி; சென்னை – கும்மிடிப்பூண்டி இடையே இரு மார்க்கத்திலும் மாற்று வழித்தடங்களில் ரயில்கள் இயக்கம்
- கவரப்பேட்டை ரயில் விபத்து பகுதியில் போக்குவரத்தை சீரமைக்கும் பணிகள் தீவிரம்
- கவரப்பேட்டை ரயில் விபத்து; பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிகள் செய்யும் பணியை துரிதப்படுத்த அமைச்சர், அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
- கவரப்பேட்டை ரயில் விபத்து; உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டது தெற்கு ரயில்வே
- தொடர் ரயில் விபத்துக்களை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல்
- ரயிலில் பயணித்த 1650 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தகவல்
- சக்கரம் வெளிவராத காரணத்தால் திருச்சியில் 2 மணி நேரம் வானிலே வட்டமடித்த விமானம் – 144 பயணிகளின் உயிரை சாமர்த்தியமாக மீட்ட விமானிகள்
- திருச்சியில் விமானிகள் மத்தியில் பயம் ஏற்படாமல் விமானத்தை பத்திரமாக இயக்கிய விமானிகளுக்கு குவியும் பாராட்டு
- ஏர் இந்தியா விமான தொழில்நுட்ப குழு குறித்து விசாரணை; மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயுடு தகவல்
- தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை;
- தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களுக்கு அடுத்த 2நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்
- காஷ்மீரில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார் உமர் அப்துல்லா
- இந்தியாவில் ஊடுருவ 150 பயங்கரவாதிகள் காத்திருப்பு – எல்லை பாதுகாப்பு படைத் தலைவர் அசோக் அதிர்ச்சி தகவல்
- மகாராஷ்ட்ராவில் முதலமைச்சர் ஏக் நாத் ஷிண்டே – துணை முதல்வர் அஜித் பவார் இடையே கருத்து மோதல்
- கிரிக்கெட் வீரர் முகமது சிராஜ் டி.எஸ்.பி.யாக பொறுப்பேற்பு – தெலங்கானா அரசு கௌரவம்
கவரப்பேட்டையில் தொடர் மழை! மீட்பு பணிகளில் தொய்வு!
கவரப்பேட்டையில் ரயில் விபத்து நடைபெற்ற இடத்தில் மழை பெய்து வருவதால் அங்கு மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
சென்னை ECR பகுதியில் உள்ள தனியார் ரிசார்ட்டில் உள்ள நீச்சல் குளத்தில் தவறி விழுந்து 5 வயது ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு.
Tamilnadu Kavaraipettai Train Collision: தாறுமாறாக கிடக்கும் ரயில் பெட்டிகள். மீட்புப் பணிகளில் ரயில்வே ஊழியர்கள்
Tamilnadu Kavaraipettai Train Collision : கவரைப்பேட்டை அருகே நடந்த ரயில் விபத்தில் தாறுமாறாக கிடக்கும் ரயில் பெட்டிகள். மீட்புப் பணிகளில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
Tamilnadu Kavaraipettai Train Collision : கவரைப்பேட்டை ரயில் விபத்து : முழுமையான விசாரணைக்கு உயர்மட்ட குழு அமைக்கப்பட உள்ளது
Tamilnadu Kavaraipettai Train Collision : கவரைப்பேட்டை அருகே நடந்த ரயில் விபத்து குறித்து முழுமையான விசாரணை நடத்த தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தலைமையில் உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்கப்பட உள்ளது. இந்தக் குழுவினர் விபத்து நடந்த இடத்தில் ஆய்வு செய்வர். ரயிலை இயக்குதல், சிக்னல், தொழில்நுட்ப கோளாறுக்கான காரணங்களை ஆராய்ந்து அதன் அறிக்கையை சமர்ப்பிப்பர்.
மனிதத் தவறா அல்லது தொழில்நுட்ப கோளாறுகள் காரணமா கண்டுபிடிக்கப்பட்டு, அதன்படி உயர்மட்டக் குழுவினர் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்வர்.
தமிழ்நாட்டில் காலை முதல் பல மாவட்டங்களில் வெளுக்கும் மழை
தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் காலை முதலே மழை பெய்து வருகிறது. இதனால் காலையில் பணிக்குச் செல்பவர்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.