மேலும் அறிய

கழுத்தை நெரித்த கடன் தொல்லை...! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை..!

பீகாரில் கடன் தொல்லையால் இரண்டு மகன்கள், வயதான தாய் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பரிதாபமாக தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

 பீகார் மாநிலத்தில் அமைந்துள்ளது சமஸ்திபூர் மாவட்டம். இங்குள்ள வித்யாபதி நகர் அருகே வசித்து வந்தவர் மனோஜ்ஜா. இவரது மனைவி சுந்தர்மணி தேவி. அவருக்கு வயது 38.  அவர்களது இரண்டு மகன்கள் சத்யம் குமார் 10 வயது. ஷிவம்குமார் வயது 7. மனோஜ்ஜாவின் தாயார் சீதா தேவி. அவருக்கு வயது 65.

இந்த நிலையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரும் நேற்று திடீரென வீட்டிற்குள் சடலமாக கிடந்துள்ளனர். இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்த 5 பேரின் சடலத்தையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.


கழுத்தை நெரித்த கடன் தொல்லை...! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை..!

இவர்களது மரணம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் இவர்கள் 5 பேரும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. மனோஜ் ஜாவிற்கு பெரியளவில் கடன் இருந்துள்ளது. புகையிலை விற்கும் கடைக்காரர், சுய உதவிக்குழு என்று பல தரப்பில் அவர் கடன் வாங்கியுள்ளார். மனோஜ் ஜாவின் தொழில் அவரிடம் இருந்த இரண்டு நான்கு சக்கர வாகனம், இரண்டு மோட்டார் சைக்கிளை நம்பிதான் அவரது தொழில் இருந்தது. இந்த வாகனங்களும் வங்கியில் பெற்ற கடன்தொகை மூலமாகவே அவர் வாங்கியுள்ளார்.

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு வங்கியினர் மனோஜ் ஜாவின் வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர். தன்னுடைய வாகனங்கள் இல்லாமல் மனோஜ் ஜாவின் தொழில் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், கடன்கொடுத்தவர்கள் அனைவரும் கடனைத் திருப்பித்தர சொல்லி மனோஜ் ஜாவிற்கு நெருக்கடி அளித்துள்ளனர். இதனால், என்ன செய்வதென்று அறியாத மனோஜ் ஜா குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளார்.


கழுத்தை நெரித்த கடன் தொல்லை...! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை..!

ரூபாய் 18 லட்சத்திற்கும் அதிகமான அளவு கடன் தொல்லைக்கு ஆளாகிய மனோஜ் ஜா இரண்டு குழந்தைகள் உள்பட தனது ஒட்டுமொத்த குடும்பத்துடன் தற்கொலை செய்துள்ளார். கடந்தாண்டு மனோஜ்ஜாவின் தந்தை ரவிகாந்த்ஜாவும் மகள் திருமணத்திற்காக வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாத சூழலுக்கு ஆளாகியதால் தற்கொலை செய்து கொண்டார். கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சார்ந்த 5 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும்.

மாநில உதவிமையம் : 104

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Aadhaar Mobile No.: அப்பாடா, பெரிய தலைவலி தீரப் போகுது.! இனி வீட்டில் இருந்தே ஆதார் மொபைல் எண்ணை அப்டேட் செய்யலாம்
அப்பாடா, பெரிய தலைவலி தீரப் போகுது.! இனி வீட்டில் இருந்தே ஆதார் மொபைல் எண்ணை அப்டேட் செய்யலாம்
CM Stalin Alert: டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
TN Weather Report: டேஞ்சர் மோடில் வரும் ‘டிட்வா‘; எந்தெந்த மாவட்டங்கள்ல அதிகனமழை.? - வானிலை மைய அப்டேட் இதோ
டேஞ்சர் மோடில் வரும் ‘டிட்வா‘; எந்தெந்த மாவட்டங்கள்ல அதிகனமழை.? - வானிலை மைய அப்டேட் இதோ
TN School Leave: தமிழ்நாட்டில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என வெளியான அறிவிப்பு; பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
தமிழ்நாட்டில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என வெளியான அறிவிப்பு; பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை
Sengottaiyan Joins TVK | தவெகவில் இணைந்தார்  செங்கோட்டையன்! விஜய் கொடுத்த முதல் TASK?
இன்னும் 2 நாள் தான்...நெருங்கி வரும் பேராபத்து 6 மாவட்டங்களுக்கு RED ALERT | Rain Alert | TN Rain | Weather Report

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Aadhaar Mobile No.: அப்பாடா, பெரிய தலைவலி தீரப் போகுது.! இனி வீட்டில் இருந்தே ஆதார் மொபைல் எண்ணை அப்டேட் செய்யலாம்
அப்பாடா, பெரிய தலைவலி தீரப் போகுது.! இனி வீட்டில் இருந்தே ஆதார் மொபைல் எண்ணை அப்டேட் செய்யலாம்
CM Stalin Alert: டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
TN Weather Report: டேஞ்சர் மோடில் வரும் ‘டிட்வா‘; எந்தெந்த மாவட்டங்கள்ல அதிகனமழை.? - வானிலை மைய அப்டேட் இதோ
டேஞ்சர் மோடில் வரும் ‘டிட்வா‘; எந்தெந்த மாவட்டங்கள்ல அதிகனமழை.? - வானிலை மைய அப்டேட் இதோ
TN School Leave: தமிழ்நாட்டில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என வெளியான அறிவிப்பு; பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
தமிழ்நாட்டில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என வெளியான அறிவிப்பு; பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
Sengottaiyan on Vijay: “2026-ல் விஜய்தான் முதல்வர்“, அந்த சக்தியால் இது நிச்சயம் நடக்கும்.. செங்கோட்டையன் கூறியது என்ன.?
“2026-ல் விஜய்தான் முதல்வர்“, அந்த சக்தியால் இது நிச்சயம் நடக்கும்.. செங்கோட்டையன் கூறியது என்ன.?
Trump to Ban Migration: துப்பாக்கிச் சூட்டால் பீதி; 3-ம் உலக நாட்டினர் குடியேற நிரந்தர தடை; ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
துப்பாக்கிச் சூட்டால் பீதி; 3-ம் உலக நாட்டினர் குடியேற நிரந்தர தடை; ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
Ditwah Cyclone: பீதியை கிளப்பும் டிட்வா! பள்ளிகளுக்கு விடுமுறை.. நாளை எங்கெல்லாம் ரெட் அலர்ட்
Ditwah Cyclone: பீதியை கிளப்பும் டிட்வா! பள்ளிகளுக்கு விடுமுறை.. நாளை எங்கெல்லாம் ரெட் அலர்ட்
ராட்சசன்
ராட்சசன் "டிட்வா" புயல் வருது... உடனே களத்தில் இறங்குங்க- திமுகவினருக்கு ஸ்டாலின் அதிரடி உத்தரவு
Embed widget