மேலும் அறிய

Aryankhan Bail | போதைப்பொருள் வழக்கு : ஷாரூக்கான் மகன் ஆர்யன் கானுக்கு ஜாமீன் வழங்கியது மும்பை உயர்நீதிமன்றம்..

போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் ஷாரூக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு மும்பை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

பாலிவுட் உலகின் பாதுஷா என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் ஷாரூக்கான். இவரது மூத்தமகன் ஆர்யன்கான். இவரை கடந்த 3-ந் தேதி சொகுசுக்கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டிற்காக மும்பை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் அடுத்தடுத்த பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டது. இந்த நிலையில், ஆர்யன்கானுக்கு 25 நாட்களுக்கு பிறகு மும்பை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

ஆர்யன்கான், அர்பாஸ் மெர்ச்சண்ட், தமாஷா ஆகிய மூவரும் மும்பை உயர்நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வந்தது. இந்த மனு நீதிபதி நிதின்சாம்ப்ரே முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. ஆர்யன்கான் தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ஆஜராகி வாதாடினர்.


Aryankhan Bail | போதைப்பொருள் வழக்கு : ஷாரூக்கான் மகன் ஆர்யன் கானுக்கு ஜாமீன் வழங்கியது மும்பை உயர்நீதிமன்றம்..

அவர் தனது வாதத்தில், “ஆர்யன்கானிடம் இருந்து போதைப்பொருள் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை. அவர் போதைப்பொருள் உட்கொண்டார் என்பதை நிரூபிக்க எந்தவித மருத்துவ பரிசோதனையும் நடத்தப்படவில்லை. விதிகளை மீறி ஆர்யன்கான் கைது செய்யப்பட்டுள்ளார்.” என்றார்.

அர்பாஸ் மெர்ச்சண்ட் சார்பாக மூத்த வழக்கறிஞர் அமித்தேசாய், “ போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கிரிமினல் சட்டப்படி 41-ஏ யின் விதிகளை மீறி சட்டவிரோதமாக கைது செய்திருக்கின்றனர். வாட்ஸ்-அப் உரையாடல்களை சாட்சியங்களாக ஏற்றுக்கொள்ள முடியாது. இதனை முந்தைய தீர்ப்புகளில் உயர்நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.” இவ்வாறு அவர் வாதிட்டார். அதேசமயம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மனுதாரர் புதியதாக போதைப்பொருள் பயன்படுத்துபவர் கிடையாது என்றும், இரண்டு ஆண்டுகளாக பயன்படுத்தி வந்திருக்கிறார் என்றும் வாதிட்டார்.


Aryankhan Bail | போதைப்பொருள் வழக்கு : ஷாரூக்கான் மகன் ஆர்யன் கானுக்கு ஜாமீன் வழங்கியது மும்பை உயர்நீதிமன்றம்..

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நிதின், ஆர்யன் உள்பட 3 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். விரிவான தீர்ப்பு விவரம் வெள்ளிக்கிழமை மாலை அறிவிக்கப்படம் என்றும் அறிவித்தார். இதனால், ஜாமீன் பெற்றபோதும் 3 பேரும் உடனே விடுதலை செய்யப்படமாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆர்யன்கான், அர்பாஸ் மெர்ச்சண்ட் மற்றும் தமாஷா மூவரும் நாளை ஜாமீனில் வெளிவருவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஜாமீனில் வெளிவர உள்ள மூவரும் தங்களது பாஸ்போர்ட்டை சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும், விசாரணை குறித்து எந்தவொரு அறிக்கையும் வெளியிடக்கூடாது என்றும், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சாட்சியங்களை அழிக்க முயற்சிக்கக்கூடாது என்றும், மும்பைக்கு வெளியில் செல்வதாக இருந்தால் விசாரணை அதிகாரியிடம் தெரிவித்துவிட்டுச் செல்ல வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.


Aryankhan Bail | போதைப்பொருள் வழக்கு : ஷாரூக்கான் மகன் ஆர்யன் கானுக்கு ஜாமீன் வழங்கியது மும்பை உயர்நீதிமன்றம்..

மேலும், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் காலை 11 மணியில் இருந்து பிற்பகல் 2 மணிவரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் விசாரணைகக்கு ஆஜராக வேண்டும் என்றும், நீதிமன்ற விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என்றும், விசாரணையை தாமதப்படுத்தும் எந்தவொரு முயற்சியையும் மேற்கொள்ளக்கூடாது என்றும், நிபந்தனைகளை மீறிச் செயல்பட்டால் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் ஜாமீனை ரத்து செய்யக்கோரி மனுத்தாக்கல் செய்யலாம் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் ஊழல்.. ED பரபர தகவல்!
செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் முறைகேடு.. ED பரபர தகவல்!
Jayakumar: இபிஎஸ்க்கு ரகுபதி கொடுத்த ரிப்ளை! மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? -  கொந்தளிக்கும் ஜெயக்குமார்
Jayakumar: இபிஎஸ்க்கு ரகுபதி கொடுத்த ரிப்ளை! மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? -  கொந்தளிக்கும் ஜெயக்குமார்
திமுக போட்ட ஸ்கெட்ச்! தமிழ்நாட்டுடன் கைகோர்க்கும் தெலங்கானா! பச்சைக்கொடி காட்டிய சி.எம்.!
திமுக போட்ட ஸ்கெட்ச்! தமிழ்நாட்டுடன் கைகோர்க்கும் தெலங்கானா! பச்சைக்கொடி காட்டிய சி.எம்.!
மட்டன் சமைத்து தராத மனைவி! கணவர் செய்த கொடூர செயல்! தெலங்கானாவில் பரபரப்பு
மட்டன் சமைத்து தராத மனைவி! கணவர் செய்த கொடூர செயல்! தெலங்கானாவில் பரபரப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ED Raid in Tasmac | செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல்! அமலாக்கத்துறை பரபர! | செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல்! அமலாக்கத்துறை பரபர!PTR vs Rajdeep Sardesai | ‘’இந்தியை பார்த்து பயமா?’’ வம்பிழுத்த ராஜ்தீப் சர்தேசாய்! கதறவிட்ட PTRSengottaiyan vs EPS : EPS vs செங்கோட்டையன் வலுக்கும் உட்கட்சி மோதல்? குழப்பத்தில் அதிமுகவினர்!Soundarya Death Mystery | ”நடிகை சௌந்தர்யா கொலை?ரஜினியின் நண்பர் காரணமா?” பகீர் கிளப்பும் பின்னணி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் ஊழல்.. ED பரபர தகவல்!
செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் முறைகேடு.. ED பரபர தகவல்!
Jayakumar: இபிஎஸ்க்கு ரகுபதி கொடுத்த ரிப்ளை! மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? -  கொந்தளிக்கும் ஜெயக்குமார்
Jayakumar: இபிஎஸ்க்கு ரகுபதி கொடுத்த ரிப்ளை! மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? -  கொந்தளிக்கும் ஜெயக்குமார்
திமுக போட்ட ஸ்கெட்ச்! தமிழ்நாட்டுடன் கைகோர்க்கும் தெலங்கானா! பச்சைக்கொடி காட்டிய சி.எம்.!
திமுக போட்ட ஸ்கெட்ச்! தமிழ்நாட்டுடன் கைகோர்க்கும் தெலங்கானா! பச்சைக்கொடி காட்டிய சி.எம்.!
மட்டன் சமைத்து தராத மனைவி! கணவர் செய்த கொடூர செயல்! தெலங்கானாவில் பரபரப்பு
மட்டன் சமைத்து தராத மனைவி! கணவர் செய்த கொடூர செயல்! தெலங்கானாவில் பரபரப்பு
Rupee Symbol: தமிழ்நாடு பட்ஜெட் - ₹-க்கு பதில் ‘ரூ’ இலட்ச்சினை மாற்றம்! - வடிவமைப்பாளர் என்ன சொல்கிறார்?
Rupee Symbol: தமிழ்நாடு பட்ஜெட் - ₹-க்கு பதில் ‘ரூ’ இலட்ச்சினை மாற்றம்! - வடிவமைப்பாளர் என்ன சொல்கிறார்?
சுனிதா வில்லியம்ஸ்க்கு மீண்டும் சிக்கல்: பூமி திரும்புவதில் கடைசியில் ஏற்பட்ட சிக்கல் என்ன?
சுனிதா வில்லியம்ஸ்க்கு மீண்டும் சிக்கல்: பூமி திரும்புவதில் கடைசியில் ஏற்பட்ட சிக்கல் என்ன?
Bank Holidays In March 2025: மக்களே! இது மார்ச் மாதம்! வங்கி வேலையை முடிச்சிக்கோங்க! லீவு லிஸ்ட்டை வெளியிட்ட ஆர்.பி.ஐ!
Bank Holidays In March 2025: மக்களே! இது மார்ச் மாதம்! வங்கி வேலையை முடிச்சிக்கோங்க! லீவு லிஸ்ட்டை வெளியிட்ட ஆர்.பி.ஐ!
TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?
TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?
Embed widget