![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Accident : ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் விபத்து - 20 பேர் காயம்..! சபரிமலைக்கு சென்றபோது அசம்பாவிதம்..
கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் சபரிமலை ஐயப்ப பக்தர்களுடன் சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் காயமடைந்துள்ளனர்.
![Accident : ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் விபத்து - 20 பேர் காயம்..! சபரிமலைக்கு சென்றபோது அசம்பாவிதம்.. Andhra Pradesh: More than 20 injured as bus carrying Sabarimala pilgrims overturns in Pathanamthitta Accident : ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் விபத்து - 20 பேர் காயம்..! சபரிமலைக்கு சென்றபோது அசம்பாவிதம்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/19/36e63a711048699887c9a84eb4ef2fc41668866531956109_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றவையாகும். இந்த கோயிலுக்குச் செல்ல மாலை அணிந்து கடுமையான விரதம் இருந்து மலையேறி பக்தர்கள் ஐய்யப்பன் சாமியை வழிபடுவார்கள்.
விபத்தில் சிக்கிய பக்தர்கள் :
இந்நிலையில் கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் சபரிமலை ஐயப்ப பக்தர்களுடன் சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் காயமடைந்தனர். ஆந்திரப்பிரதேசத்தில் இருந்து கேரள மாநிலம் பத்தனம்திட்டா நோக்கி இந்த வேன் வந்து கொண்டிருந்தது. வேனில் 44 பக்தர்கள் இருந்தனர். எதிர்பாராத விதமாக வேன் விபத்துக்குள்ளாக அதிலிருந்த 20 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 3 பேர் மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளனர். அவர்கள் மூவருக்கும் பயங்கர காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதில் 8 வயது சிறுவனும் அடங்குவான். மற்ற 18 பேர் பத்தனம்திட்டா மருத்துவமனையிலேயே அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் சிலருக்கு பெரிநாடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பக்தர்களுக்கு சிகிச்சை :
காவல்துறை, தீயணைப்பு துறையினர் இணைந்து வாகனத்தை மீட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்த சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் மீட்புப் பணிகளை பார்வையிட்டார். உடனடியாக சிகிச்சைக்கு ஏற்பாடு செய்து சென்றார். மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளரும் சம்பவ இடத்தை நேரில் பார்வயிட்டனர். சபரிமலை சீசன் தொடங்கியதுமே நடந்த இந்த விபத்து பக்தர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
சபரிமலையில் மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக ஆண்டுதோறும் 60 நாட்கள் நடைதிறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதன்படி நவம்பர் 16ஆம் தேதி ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. சபரிமலை மேல்சாந்தியாக நியமிக்கப்பட்ட ஜெயராமன் நம்பூதிரி மற்றும் மாளிகபுரம் மேல்சாந்தியாக நியமிக்கப்பட்டுள்ள ஹரிஹரன் நம்பூதிரி ஆகியோருக்கு பதவியேற்பு மற்றும் அபிஷேகம் செய்யப்பட்டு மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. ஐயப்பனை தரிசிக்க கார்த்திகை 1ஆம் தேதி முதலே பக்தர்கள் மாலை அணிந்து கடுமையாக 41 நாட்கள் விரதம் இருந்து செல்வர். அதனால் நவம்பர் 17ஆம் தேதி முதலே சபரிமலைக்கு பக்தர்கள் குவியத் தொடங்கி உள்ளனர்.
கேரளா மட்டுமின்றி தமிழகம், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் சபரிமலை கோயிலுக்கு வருவது வழக்கம். சபரி மலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்த வண்ணமே உள்ளது. எனினும், கொரோனா பரவல் மற்றும கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு பக்தர்கள் தரிசனத்தற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)