மேலும் அறிய

புதுக்கோட்டை கலெக்டரின் நடன அமைப்பு.. செஸ் ஒலிம்பியாட் விளம்பர வீடியோ.. பாராட்டி தள்ளிய ஆனந்த் மஹிந்திரா

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம், பதிவிட்ட வீடியோ அனைவரையும் கவர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு மாவட்ட நிர்வாகம் விளையாட்டை கொண்டாடவும் ஊக்குவிக்கவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதில் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம், பதிவிட்ட வீடியோ அனைவரையும் கவர்ந்துள்ளது.

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோவில் நடனத்தின் மூலம் செஸ் போட்டியின் நுணுக்கங்கள் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. அதில், நாட்டுப்புற மற்றும் தற்காப்புக் கலைக் கூறுகளை ஒருங்கிணைத்து, பல்வேறு சதுரங்கக் காய்கள் உயிர்பெற்று செஸ் போர்டில் போரில் ஈடுபடுவது போல காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு இயக்கிய இந்த நடன வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி அனைத்து தரப்பினரின் பாராட்டையும் பெற்றது. 

இதை பாராட்டியவர்களில் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவும் ஒருவர். வீடியோவைப் பகிர்ந்த மஹிந்திரா குழுமத்தின் தலைவர், “சூப்பர். புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமு இதை இயக்கியதாக அறிகிறேன். நம் கற்பனையில் செஸ் காய்கள் உயிர்ப்பிக்கின்றன. போட்டி இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் இது நம்பகத்தன்மையாக உள்ளது. பிராவோ!" என பதிவிட்டுள்ளார்.

கடந்த வாரம், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இந்த நிகழ்ச்சியின் கிளிப்பை தொடர் ட்வீட்களில் விவரங்களுடன் பகிர்ந்திருந்தார். அதில், “#chessolympiad22ஐ ஊக்குவிக்க மாவட்ட நிர்வாகங்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளன.

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்தின் இந்த அழகிய காணொளி, செம்மொழி, நாட்டுப்புற, மல்யுத்தம் மற்றும் சிலம்பம் கலைஞர்கள் நம்மை ஆக்கப்பூர்வமான கற்பனை உலகிற்கு அழைத்துச் சென்று, நேரடி செஸ் கதாபாத்திரங்களாக மாற்றி, விளையாட்டின் சாரத்தை அதன் உண்மையான உணர்வில் வெளிப்படுத்துகிறார்கள்" என ஸ்டாலின் பதிவிட்டிருந்தார்.

மஹிந்திராவின் பதிவுக்கு பதிலளித்த பல பயனர்கள் அவரது உணர்வை எதிரொலித்து வீடியோவை பாராட்டினர். "மனதைக் கவர்ந்துள்ளது. நடிப்பு, நடனம், இசை, படப்பிடிப்பு போன்ற கலை நிகழ்ச்சிகள் எவ்வளவு சக்தி வாய்ந்தவை என்பதைக் காட்ட இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. குழந்தைகளின் ஆரம்பக் கல்வியில் அவர்களின் கருத்துக்களை உருவாக்க அதை ஏன் பயன்படுத்த கூடாது?" என பயனர் ஒருவர் பதிவிட்டுள்ளார்.

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி கடந்த ஜூலை 28ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தொடங்கி வைக்கப்பட்டது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rohit Sharma: மும்பையில் முடிந்தது ரோகித் சர்மா சகாப்தம்? வான்கடேவில் வழியனுப்பி வைத்த ரசிகர்கள் - அடுத்து என்ன?
Rohit Sharma: மும்பையில் முடிந்தது ரோகித் சர்மா சகாப்தம்? வான்கடேவில் வழியனுப்பி வைத்த ரசிகர்கள் - அடுத்து என்ன?
Breaking News LIVE : ஸ்வாதி மாலிவால் விவகாரம் - கெஜ்ரிவாலின் தனிச்செயலர் பிபவ் குமார் கைது
Breaking News LIVE : ஸ்வாதி மாலிவால் விவகாரம் - கெஜ்ரிவாலின் தனிச்செயலர் பிபவ் குமார் கைது
Boxer Parveen Hooda: ஒலிம்பிக் 2024 கனவு ஆபத்தில்..! குத்துச்சண்டை வீரர் பர்வீன் ஹூடா விளையாட தடை.. என்ன நடந்தது..?
ஒலிம்பிக் 2024 கனவு ஆபத்தில்..! குத்துச்சண்டை வீரர் பர்வீன் ஹூடா விளையாட தடை.. என்ன நடந்தது..?
Actor Chandrakanth: கார்த்திகா தீபம் சீரியல் நடிகர் சந்து தற்கொலை... மனைவி பவித்ராவின் இழப்பு தான் காரணமா?
Actor Chandrakanth: கார்த்திகா தீபம் சீரியல் நடிகர் சந்து தற்கொலை... மனைவி பவித்ராவின் இழப்பு தான் காரணமா?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Dhoni Last Match IPL 2024  : ”தோனி தரிசனம் இருக்கு கவலை படாதீங்க தல FANS” Hussey கொடுத்த அப்டேட்PM Modi Speech  : ’’ராமர் கோயிலை புல்டோசர் வைத்து இடிப்பார்கள்’’சர்ச்சையை கிளப்பும் மோடி!Jharkhand Minister arrest : எதிர்க்கட்சிகளுக்கு நெருக்கடி காங்கிரஸ் அமைச்சர் கைது அதிரடி காட்டும் EDModi on muslim fact check  : பொய் சொன்னாரா மோடி?ஆதாரம் இதோ!முஸ்லீம் குறித்து சர்ச்சை கருத்து

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rohit Sharma: மும்பையில் முடிந்தது ரோகித் சர்மா சகாப்தம்? வான்கடேவில் வழியனுப்பி வைத்த ரசிகர்கள் - அடுத்து என்ன?
Rohit Sharma: மும்பையில் முடிந்தது ரோகித் சர்மா சகாப்தம்? வான்கடேவில் வழியனுப்பி வைத்த ரசிகர்கள் - அடுத்து என்ன?
Breaking News LIVE : ஸ்வாதி மாலிவால் விவகாரம் - கெஜ்ரிவாலின் தனிச்செயலர் பிபவ் குமார் கைது
Breaking News LIVE : ஸ்வாதி மாலிவால் விவகாரம் - கெஜ்ரிவாலின் தனிச்செயலர் பிபவ் குமார் கைது
Boxer Parveen Hooda: ஒலிம்பிக் 2024 கனவு ஆபத்தில்..! குத்துச்சண்டை வீரர் பர்வீன் ஹூடா விளையாட தடை.. என்ன நடந்தது..?
ஒலிம்பிக் 2024 கனவு ஆபத்தில்..! குத்துச்சண்டை வீரர் பர்வீன் ஹூடா விளையாட தடை.. என்ன நடந்தது..?
Actor Chandrakanth: கார்த்திகா தீபம் சீரியல் நடிகர் சந்து தற்கொலை... மனைவி பவித்ராவின் இழப்பு தான் காரணமா?
Actor Chandrakanth: கார்த்திகா தீபம் சீரியல் நடிகர் சந்து தற்கொலை... மனைவி பவித்ராவின் இழப்பு தான் காரணமா?
ABP Nadu Exclusive: அப்போது பெரியார்! இப்போது மோடி! அதிர்ச்சி கொடுத்த சத்யராஜ்! விளக்கம் கொடுத்த மகள் திவ்யா!
அப்போது பெரியார்! இப்போது மோடி! அதிர்ச்சி கொடுத்த சத்யராஜ்! விளக்கம் கொடுத்த மகள் திவ்யா!
Cauvery river: குறைந்த மழை... காவிரி ஆற்றில் நீர்வரத்து 1500 கன அடியாக சரிவு
குறைந்த மழை... காவிரி ஆற்றில் நீர்வரத்து 1500 கன அடியாக சரிவு
Tata Cars: 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு புதிய காரை களமிறக்கும் டாடா - கூடவே வரும் 2 அப்டேடட் வெர்ஷன்கள், விவரம் உள்ளே
Tata Cars: 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு புதிய காரை களமிறக்கும் டாடா - கூடவே வரும் 2 அப்டேடட் வெர்ஷன்கள், விவரம் உள்ளே
இந்திய மாணவர்களே உஷார்! வீடுகளுக்குள்ளேயே இருங்க! கிர்கிஸ்தானில் வன்முறை! தூதரகம் அலெர்ட்!
இந்திய மாணவர்களே உஷார்! வீடுகளுக்குள்ளேயே இருங்க! கிர்கிஸ்தானில் வன்முறை! தூதரகம் அலெர்ட்!
Embed widget