மேலும் அறிய

Ambedkar Jayanti 2024: அனல் பறக்கும் அரசியல் எழுத்துகள் - அவசியம் படிக்க வேண்டிய அம்பேத்கரின் 4 புத்தகங்கள்

Ambedkar Jayanti 2024: அனைத்து தரப்பினரும் கட்டாயம் படிக்க வேண்டிய, டாக்டர் அம்பேத்கர் எழுதிய 4 புத்தகங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

Ambedkar Jayanti 2024: சாதி இயக்கம் முதல் பிரிவினை வரை அவசியம், படிக்க வேண்டிய,  டாக்டர் அம்பேத்கரின் நான்கு புத்தகங்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.

அம்பேத்கர் ஜெயந்தி:

சமூக சீர்திருத்தவாதி, அரசியலமைப்பின் முதன்மை சிற்பி என பல்வேறு அடையாளங்களை கொண்டவர் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர். அவரது பிறந்தநாளான ஏப்ரல் 14ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் பீம் ஜெயந்தி அல்லது அம்பேத்கர் ஜெயந்தி என கொண்டாடப்படுகிறது.  அந்தவகையில் நாளை அம்பேத்கர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் அவர் எழுதிய, அனைத்து தரப்பினரும் அவசியம் படிக்க வேண்டிய சில புத்தகங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. சாதி இயக்கவியல் தொடங்கி ஆட்சியின் தன்மை வரை என அவரது எழுத்துகள் புத்தகங்களாக தொகுக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் ஆன்லைனிலும் கிடைக்கிறது. 

சாதி ஒழிப்பு:

 1936 இல் எழுதப்பட்ட அம்பேத்கரின் 'சாதி ஒழிப்பு' நூல் இந்தியாவில் ஆழமாக வேரூன்றியிருக்கும் சாதிய அமைப்பைப் பற்றிய நுண்ணறிவை வழங்குகிறது. இது இந்து சமூகத்தின் படிநிலை கட்டமைப்பை விமர்சிக்கிறது. சமூக நீதி மற்றும் அனைவருக்கும் சமத்துவத்தை அடைய அதன் அழிவிற்காக வாதிடுகிறது. இந்த புத்தகம் இன்றைய சூழலுக்கும் பொருத்தமானது மற்றும் இந்தியாவில் இருந்து வெளிவரும் மிக சக்திவாய்ந்த அரசியல் எழுத்துக்கள் அடங்கிய புத்தகமாக ”சாதி ஒழிப்பு” கருதப்படுகிறது.

கூட்டாட்சி Vs சுதந்திரம்:

அம்பேத்கரின் இந்த 164 பக்கக் கட்டுரை, இந்தியாவின் ஆளுமை கட்டமைப்பில் மையப்படுத்தல் மற்றும் அதிகாரப் பரவலாக்கம் பற்றி விரிவாக விளக்குகிறது. 1945ல் வெளியான இந்த கட்டுரை  பிராந்திய சுயாட்சியை உறுதிப்படுத்தும் அதே வேளையில், தேசிய ஒற்றுமையைப் பாதுகாப்பதன் அவசியத்தையும் எடுத்துரைக்கிறது. பன்முகத்தன்மை கொண்ட நமது சமூகத்தில் கூட்டாட்சி முறையின் சிக்கல்களைப் புரிந்துகொள்வதற்கு அம்பேத்கரின் இந்த நுண்ணறிவு மிகவும் அவசியமானதாக உள்ளது .

சூத்திரர்கள் யார்?

1946 இல் வெளியான இந்த அறிவார்ந்த படைப்பு, இந்தியாவில் சூத்திர சாதியினரின் தோற்றம் மற்றும் சமூக நிலையை ஆராய்கிறது. வேதங்கள் மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க 'மகாபாரதம்' போன்ற இதிகாசங்களை மேற்கோள் காட்டி, சமூகத்தின் 'தாழ்வு நிலை' பற்றிய பாரம்பரிய இந்து சமூக நம்பிக்கைகளுக்கு சவால் விடுத்துள்ளார்.  மேலும், பழமையான சித்தாந்தங்களையும் உடைத்தெறிந்துள்ளார்.

பாகிஸ்தான் அல்லது இந்தியப் பிரிவினை :

 544 பக்கங்கள்கொண்ட இந்த புத்தகம் 1947ல் இந்தியப் பிரிவினைக்கு வழிவகுத்த காரணிகளின் வரலாற்றுப் பகுப்பாய்வாகும். 1940 இல் வெளியிடப்பட்ட இந்த புத்தகம்,  முஸ்லிம் லீக்கின் தனி முஸ்லிம் நாடு கோரிக்கை மற்றும் இந்தியாவின் எதிர்காலத்தில் அதன் தாக்கங்களைப் பற்றி விவாதிக்கிறது.  அந்தக் காலத்தின் சிக்கலான சமூக-அரசியல் இயக்கவியலை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. மேலும் பிரிவினைக்கு ஆதரவான மற்றும் அதற்கு எதிரான வாதங்களையும் அம்பேத்கர் தெளிவாக பகுப்பாய்வு செய்துள்ளார்.

 

 

 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Flight Accident: நடுவானில் பயங்கரம்! சிங்கப்பூர் ஏர்லைன்ஸில் பயணி உயிரிழப்பு; 30 பேர் காயம் - நடந்தது என்ன?
Flight Accident: நடுவானில் பயங்கரம்! சிங்கப்பூர் ஏர்லைன்ஸில் பயணி உயிரிழப்பு; 30 பேர் காயம் - நடந்தது என்ன?
Paris Olympics 2024: இந்த தடவ கோட்டா முறைதான் பின்பற்றப்படும் - கோரிக்கையை ஏற்ற இந்திய மல்யுத்த கூட்டமைப்பு
Paris Olympics 2024: இந்த தடவ கோட்டா முறைதான் பின்பற்றப்படும் - கோரிக்கையை ஏற்ற இந்திய மல்யுத்த கூட்டமைப்பு
Breaking News LIVE: மதுரையில் நாளை அரசு சித்திரை பொருட்காட்சி
Breaking News LIVE: மதுரையில் நாளை அரசு சித்திரை பொருட்காட்சி
Cauvery: தமிழ்நாட்டுக்கு காவிரியில் 2.5 டி.எம்.சி நீரை திறக்க மேலாண்மை ஆணையம் உத்தரவு
Cauvery: தமிழ்நாட்டுக்கு காவிரியில் 2.5 டி.எம்.சி நீரை திறக்க மேலாண்மை ஆணையம் உத்தரவு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Kodaikanal Flood | 5 மணி நேர போராட்டம்.. குழந்தையுடன் காத்திருந்த தாய் கொடைக்கானல் வெள்ளம்Duraimurugan vs EPS | ”கள்ள மௌனம் கைவந்த கலை!தேர்தல் கூட்டணிய பார்த்தோம்” EPS-ஐ விளாசும் துரைமுருகன்Rahul gandhi with dogs | ”BESTFRIEND-க்கு உடம்பு முடியல” நாயுடன் விளையாடும் ராகுல்! வைரல் வீடியோOdisha VK Pandian | தமிழர் மீது வெறுப்பை கக்கிய மோடி! பாஜக vs பிஜு ஜனதா தளம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Flight Accident: நடுவானில் பயங்கரம்! சிங்கப்பூர் ஏர்லைன்ஸில் பயணி உயிரிழப்பு; 30 பேர் காயம் - நடந்தது என்ன?
Flight Accident: நடுவானில் பயங்கரம்! சிங்கப்பூர் ஏர்லைன்ஸில் பயணி உயிரிழப்பு; 30 பேர் காயம் - நடந்தது என்ன?
Paris Olympics 2024: இந்த தடவ கோட்டா முறைதான் பின்பற்றப்படும் - கோரிக்கையை ஏற்ற இந்திய மல்யுத்த கூட்டமைப்பு
Paris Olympics 2024: இந்த தடவ கோட்டா முறைதான் பின்பற்றப்படும் - கோரிக்கையை ஏற்ற இந்திய மல்யுத்த கூட்டமைப்பு
Breaking News LIVE: மதுரையில் நாளை அரசு சித்திரை பொருட்காட்சி
Breaking News LIVE: மதுரையில் நாளை அரசு சித்திரை பொருட்காட்சி
Cauvery: தமிழ்நாட்டுக்கு காவிரியில் 2.5 டி.எம்.சி நீரை திறக்க மேலாண்மை ஆணையம் உத்தரவு
Cauvery: தமிழ்நாட்டுக்கு காவிரியில் 2.5 டி.எம்.சி நீரை திறக்க மேலாண்மை ஆணையம் உத்தரவு
IPL CSK: 3 முறை மட்டுமே மிஸ்ஸிங்! ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதில் சி.எஸ்.கே.தான் கில்லி! அதிலும் ஒரு ட்விஸ்ட்!
IPL CSK: 3 முறை மட்டுமே மிஸ்ஸிங்! ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதில் சி.எஸ்.கே.தான் கில்லி! அதிலும் ஒரு ட்விஸ்ட்!
Thug Life: இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில்... செம அப்டேட் கொடுத்த தக் லைஃப்  டீம்!
Thug Life: இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில்... செம அப்டேட் கொடுத்த தக் லைஃப் டீம்!
Kanchipuram Traffic Diversion: காஞ்சிபுரத்தில் போக்குவரத்து மாற்றம்..!  உஷாரா இதை தெரிஞ்சுகிட்டு போங்க மக்களே ..!
காஞ்சிபுரத்தில் போக்குவரத்து மாற்றம்..! உஷாரா இதை தெரிஞ்சுகிட்டு போங்க மக்களே ..!
"குவைத்தில் கைதிகளாகியுள்ள தமிழக மீனவர்கள்" வௌியுறவுத்துறைக்கு மீண்டும் கடிதம் எழுதிய தமிழக அரசு!
Embed widget