மேலும் அறிய

கொரோனாவுக்கு ரெம்டெசிவிர் சிகிச்சை பலனளிக்கிறதா? கேள்வியும் பதில்களும்..

ரெம்டெசிவிர் என்பது எபோலா வைரஸ் நோய்க்கு எதிராக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மருந்து வைரஸின் மரபணுவில் சென்று அது இரட்டிப்பாவதை தடுக்கிறது.

கொரோனா வைரஸ் பாதிப்பின் இரண்டாவது அலை தற்போது இந்தியாவில் தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. மேலும் ரெம்டெசிவிர் மருந்தை ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட பெரும்பாலானவர்களுக்கு  ரெம்டெசிவிர் மருந்து அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் இந்த மருந்து தட்டுபாடு ஏற்படாமல் இருக்க மத்திய அரசு இம்முடிவை எடுத்துள்ளது. இந்நிலையில் ரெம்டெசிவிர் தொடர்பாக ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ தளத்தின் கேள்விகளுக்கு எய்ம்ஸ் மருத்துவமனையின் மருத்துவர் நிஸ்சல் பதிலளித்துள்ளார்.  

கே: கொரோனா நோய் தொற்று உடையவர்களுக்கு ரெம்டெசிவிர் எவ்வளவு முக்கியமானது?

ப: ரெம்டெசிவிர் என்பது எபோலா வைரஸ் நோய்க்கு எதிராக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மருந்து வைரஸின் மரபணுவில் சென்று அது இரட்டிப்பாவதை தடுக்கிறது. கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு இந்த மருந்து ஒரு தீர்வு ஆகாது. மேலும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள பலருக்கு இந்த மருந்து தேவைப்படாது. 

கே: தேவையில்லாமல் ரெம்டெசிவிர் பயன்படுத்தக்கூடாது என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். அனைவருக்கும் இந்த மருந்து தேவைப்படுமா?

ப: கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு அவசர நிலையில் பயன்படுத்தவே ரெம்டெசிவிர் மருந்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் பலர் தேவையில்லாமல் இந்த மருந்தை பயன்படுத்தியுள்ளனர். இம்மருந்தை ஒரு குறிப்பிட்ட அறிகுறிகள் உள்ள நோயாளிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். கொரோனா பாதிப்பு ஏற்பட்ட அனைவருக்கும் இதை பயன்படுத்த தேவையில்லை.


கொரோனாவுக்கு ரெம்டெசிவிர் சிகிச்சை பலனளிக்கிறதா? கேள்வியும் பதில்களும்..

 

கே: ரெம்டெசிவிர் மருந்தை மருத்துவமனைகளுக்கு அளிக்காமல் நோயாளிகளுக்கே நேரடியாக விற்பனை செய்யப்படுகிறது. தேவையில்லாமல் இம்மருந்தை பயன்படுத்தினால் பாதிப்பு வருமா?

ப: ரெம்டெசிவிர் மருந்தை ஊசியின் மூலம் தான் உடலில் செலுத்த முடியும். எனவே இந்த மருந்தை உடலில் செலுத்திய உடன் ஒரு சிலருக்கு அலர்ஜி போன்ற உபாதைகள் வரலாம். மேலும் இதயம் மற்றும் கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகளில் சில பாதிப்பு ஏற்படலாம். எனினும் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து அமைப்பு ரெம்டெசிவிர் பயன்பாட்டிற்கு அனுமதி அளித்துள்ளது. இருப்பினும் சர்வதேச சுகாதார மையத்தின் ஆய்வில் ரெம்டெசிவிர் பயன்பாட்டால் எந்தவித மாற்றமும் இல்லை. ஒரு சில நோயாளிகள் ஆக்சிஜன் குறைபாடு உடன் இருந்தபோது ரெம்டெசிவிர் கொடுத்தால் மரணம் அடையாமல் காப்பாற்றப்பட்டனர். அந்த எண்ணிக்கை மிகவும் குறைவு என்பதால் அதை வைத்து ஒரு முடிவிற்கு வர முடியவில்லை. எனவே இந்த மருந்து ஒரு சிலருக்கு பயன் அளிக்கும் என்பது உறுதியாக தெரிகிறது. ஆனால் அனைவருக்கும் பயன் அளிக்காது என்பதும் இந்த ஆய்வில் தெரிகிறது. 

கே: ரெம்டெசிவிர் மருந்து எபோலா நோய்க்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. இதனை கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்துவதால் பக்கவிளைவுகள் ஏதாவது உண்டா?

ப: ரெம்டெசிவிர் மருந்தை பயன்படுத்தினால் சிலருக்கு வாந்தி, மூச்சுப் பிரச்னை, இதய துடிப்பு குறைதல் , இரத்தத்தில் சர்க்கரை அளவில் மாறுபாடு உள்ளிட்டவை ஏற்படலாம். தற்போது வரை இந்த மாதிரியான விளைவுகள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
Mallai Sathya New Party: தவெகவுக்கு போட்டியாக திவெக? மதிமுக மாஜி மல்லை சத்யா புதுக்கட்சி பெயர் தெரியுமா?
Mallai Sathya New Party: தவெகவுக்கு போட்டியாக திவெக? மதிமுக மாஜி மல்லை சத்யா புதுக்கட்சி பெயர் தெரியுமா?
SC President: குடியரசு தலைவரின் 14 கேள்விகள் - லிஸ்ட் போட்டு பதிலளித்த உச்சநீதிமன்றம் - ”ரெண்டு பக்கமும் குத்து”
SC President: குடியரசு தலைவரின் 14 கேள்விகள் - லிஸ்ட் போட்டு பதிலளித்த உச்சநீதிமன்றம் - ”ரெண்டு பக்கமும் குத்து”
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

T.NAGAR தொகுதி யாருக்கு?பாஜகவின் பலே திட்டம் விட்டுக்கொடுக்குமா அதிமுக? | Chennai | BJP Election Plan
அதிகாரி நெஞ்சுவலி நாடகம் “சார் இப்படி நடிக்காதீங்க” தவெகவினர் ஆர்ப்பாட்டம் | Officer Fake Heart Attack
Kovi Chezhiyan Event Issue|மேடையில் பேசிய கோவி.செழியன்போதையில் தள்ளாடிய அதிகாரி விழாவில் சலசலப்பு
KN Nehru | ’’அண்ணே என் காரை ஓட்டுங்க’’ஆசையாய் கேட்ட திமுக நிர்வாகி உடனே நிறைவேற்றிய K.N.நேரு
கோவை, மதுரைக்கு NO METRO ஏன், பின்னணி என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
Mallai Sathya New Party: தவெகவுக்கு போட்டியாக திவெக? மதிமுக மாஜி மல்லை சத்யா புதுக்கட்சி பெயர் தெரியுமா?
Mallai Sathya New Party: தவெகவுக்கு போட்டியாக திவெக? மதிமுக மாஜி மல்லை சத்யா புதுக்கட்சி பெயர் தெரியுமா?
SC President: குடியரசு தலைவரின் 14 கேள்விகள் - லிஸ்ட் போட்டு பதிலளித்த உச்சநீதிமன்றம் - ”ரெண்டு பக்கமும் குத்து”
SC President: குடியரசு தலைவரின் 14 கேள்விகள் - லிஸ்ட் போட்டு பதிலளித்த உச்சநீதிமன்றம் - ”ரெண்டு பக்கமும் குத்து”
SUV: காம்பேக்ட் எஸ்யுவி மீது வெறி பிடித்து திரியும் இந்தியர்கள்.. என்ன காரணம்? நகரங்களில் செய்யும் மேஜிக்?
SUV: காம்பேக்ட் எஸ்யுவி மீது வெறி பிடித்து திரியும் இந்தியர்கள்.. என்ன காரணம்? நகரங்களில் செய்யும் மேஜிக்?
Metro Rail: மதுரை, கோவை மெட்ரோ ரயில்.! NO சொன்னது ஏன்.? காரணங்களை அடுக்கும் மத்திய அரசு
மதுரை, கோவை மெட்ரோ ரயில்.! NO சொன்னது ஏன்.? காரணங்களை அடுக்கும் மத்திய அரசு
மோடி வந்த சென்ற ஈரம் கூட இன்னும் காயவில்லை.. விவசாயிகளுக்கு அடுத்த துரோகத்தை செய்வதா.? விளாசும் ஸ்டாலின்
மோடி வந்த சென்ற ஈரம் கூட இன்னும் காயவில்லை.. விவசாயிகளுக்கு அடுத்த துரோகமா.? விளாசும் ஸ்டாலின்
மொத்தமாக காலியாகும் ஓபிஎஸ் கூடாரம்.! நிர்வாகிகளை திமுகவிற்கு தட்டித்தூக்கிய ஸ்டாலின்
மொத்தமாக காலியாகும் ஓபிஎஸ் கூடாரம்.! நிர்வாகிகளை திமுகவிற்கு தட்டித்தூக்கிய ஸ்டாலின்
Embed widget